உதைபந்து

Friday, September 30, 2011

என்னால‌ முடிய‌ல‌டா சாமீ...

எப்பிடி நாலு நாளான சோத்த நாலு கவளம் திண்டா வயித்த குமட்டுமோ , அது போல எனக்கு இந்த லெக்சர்ஸ் எண்டு காதில கேட்டவுடனேயே, தலையெல்லாம் சுத்தி அடிவயித்தில ஏரோபிளேன் பற‌ந்து, கொலவெறியாகும்.
அது ஒண்டுமில்ல அண்ணச்சி ! சும்மா நல்லா பாடம் நடத்துறவன் பாடம் எடுத்தாலே எனக்கு பகல் நித்திர வரும். என்னோட துர் அதிஸ்ரம் எனக்கு பாடம் எடுக்கிற‌வனுகள் பாதி பேர் அர குற..

பகல்ல எல்லாம் பாண் பேக்கரி போல புளுங்கிக்க் கொண்டிருக்கும் எங்கட போடிங் சாமத்தில தான் சகஜ நிலைக்கு வரும். சாமம் ஒரு ரெண்டு மணிக்கு கண்ண லேசா மூட றூம்ல எவனாவது "சுச்சா" போற‌துக்கு லைற்ற போடுவான்.(அதுக்கு எதுக்குடா லைற்று) அவன் வந்து ஓஃப் பண்ணும் வரைக்கும் முழிச்சு கிடக்க (வெண்ண நீ எழும்பி ஓஃப் பண்ணினா குறைஞ்சா போயிடுவ?#பஞ்சி பாஸ்) ரெண்டர ஆயிடும் நேரம். அப்பாடா எண்டு நித்திர கொண்டா றூம்ல ஒருத்தன் வச்சிருக்கான் பாரு ரிங் டோன்!!! யப்பா சரியா மூன்று மணிக்கு அறுக்கிற ஆடு போல கத்தும் பாருங்க.... அப்பிடியே அவன ராஜேந்தர் படம் நாலு மூண்டு பாக்க வைக்கலாமா எண்டு தோணும். கொல கேசில உள்ள போயிடுவன் எண்ட பயத்தில மூடிக்கொண்டு கிடக்கிற‌துதான். அது ரிங் டோன் இல்லயாம்.. அலாரமாம்! அத்த சாமத்தில இந்த நாய் எதுக்கு அலாரம் வைக்குது எண்டு பாத்தா... சாமத்தில முழிச்சிற்று படுத்தா நல்ல நித்திர வருமாம்.(அடேய் நாதாரி பயலே.. உன்ன வேலாயுதம் படத்துக்கு முதல் ஷோவுக்கு அனுப்பி சாவடிக்கிற‌னா இல்லயா பாரு..!!)

விதிய நொந்து கொண்டே கண் அயர இரவு கொஞ்சம் ஒவரா தண்ணி குடிச்சதன் விளைவு அடியேனும்"சுச்சா". அட போங்கடா எண்டு கட்டிலில் விழ எந்த மூதேவியோ சாமத்தில அனுப்பின எஸ்.எம்.எஸ் க்கு ஒரு பக்கி விடியப்பறத்தில றிப்ளை போடும். அந்த எஸ்.எம்.எஸ் டோன நீங்க கேக்கணுமே.... நரகாம்சமா இருக்கும்...

அப்புறம் என்ன? மணி ஆயிடும் ஏழு.. அத யாருமே அலாரம் வைக்க தேவயே இல்ல. றூமில ஒண்டு இருக்கு (அத பத்தி எழுத தனி பதிவே போடணும்)அது தன் பாட்டுக்கு சோம்பல் முறித்து, அலுப்பு எடுத்து காட்டு கத்து கத்த தொடங்கிடும். எவெனெவனெல்லாம் தூங்குறானோ அவனுகள்ற கத அத்தோட காலி..கண்ட இடத்தில கடிச்சு வச்சிரும். அது எழும்பின உடனயே நான் ஏதோ பூசாரிய கண்ட பேய் மாதிரி பிறஷ்ச எடுத்த்க் கொண்டு எஸ்கேப். பாவம் அதுட சித்திர வதையில சிக்கிறது தோழர் கணேஷ் தான்.சும்மா நிண்டு கொண்டு துன்பம் தாறத்துக்கு அதுட்ட தான் படிக்கணும். வெய்யில் விழாத இடத்தில் எல்லாம் கணேஷுக்கு அடி விளுந்த பிறகு தான் அண்ணாத்த எழும்புவார்.
அடிச்சு பிடிச்சு வெளிக்கிட்டு ஓட‌ வெளிக்கிட்டா.. பொறு நானும் வாற‌ன் எண்டு அப்ப‌ தான் எழும்பி க‌ட‌வாய‌ துட‌ச்சு ப‌க்க‌த்து றூம் துன்ப‌ம் ப‌ல்ல‌ காட்டிக்க் கொண்டு நிக்கும். "அட‌ ராமா! என்ன‌ ஏன் இந்த‌ க‌ளுச‌ட‌ ப‌ச‌ங்க‌ளோட‌ கூட்டு சேர‌ வைகிற " எண்ட‌ க‌வுண்ட‌ ம‌ணியின் ட‌ய‌லாக்கு தான் ஞ‌ப‌க‌ம் வ‌ரும்.

8 ம‌ணி லெக்ச‌ருக்கு ,‌ க‌ம்ப‌சுக்குள் வ‌ர‌வே நேர‌ம் 7.55 ஆக‌ இருக்கும். க‌ன்டீனில் க‌டைக்கார‌ன் சாப்பாடு(????) எண்டு த‌ருகிற‌ எத‌யாவ‌து (எங்க‌ள் க‌ன்டீன் ப‌ற்றி அவ‌சிய‌ம் த‌னி ப‌திவு போடுகிறேன்)வ‌யிற்றில் எறிந்துவிட்டு லெக்ச‌ர் போனால் அங்கு ந‌ட‌க்கும் அநியாய‌ம்.... அய்ய‌ய்ய‌ய்யோ... "கொடும‌ கொடும‌ எண்டு கோயிலுக்கு வ‌ந்தா அங்க‌ ஒரு கொடும‌ நிண்டு ட‌ங்கு ட‌ங்குன்னு ஆடிச்சாம்" (எங்க‌ள் லெக்ச‌ர் ப‌ற்றி அவ‌சிய‌மாக‌ குறைந்த‌து மூன்று ப‌திவுக‌ளாவ‌து போடுற‌ன்.) அது வ‌ரையில் என் துன்ப‌ம் தொட‌ரும்...

நான் நாதாரி, மூதேவி, அது, ஒண்டு,துன்பம் என்றெல்லாம் அஃதிணையில் விளித்தது வேறு யாருமல்ல என் நண்பர்கள் தான்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...