உதைபந்து

Wednesday, August 1, 2012

மாற்றான் திரைவிமர்சனம்! பிரீமியர் ஷோ பாத்திட்டோமில்ல!!!




முகமூடி வி.ஐ.பி ஷோவுக்கு அழைத்த அதே குழு சூர்யாவின் "மாற்றான்" திரைப்படத்துக்கான வி.ஐ.பி ஷோவுக்கும் அழைத்திருந்தது! முகமூடி சற்று தாமதமாகி வரும் நிலையில் , மாற்றான் குழுவோ அழைத்த அடுத்த நாளே பிரிமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்தது. ஷோவுக்கு மொத்தமே கிட்டத்தட்ட இருபது பேர் தான் வந்திருப்பார்கள். அனேகரது முகங்கள் பரிட்சயமில்லாதது. இலங்கை பதிவர்களில் எனக்கு பரிட்சையமான மைந்தன் சிவா, லோஷன் ஆகியோர் மிஸ்ஸிங். பாவம் அவிய்ங்களுக்கு என்ன வேலையோ? ஓக்கே படம் தொடங்கிடிச்சு! ட்ரெய்லரில் காட்டப்பட்டதற்கும் , படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவே பட்டது. அதை பற்றி பின்னால் விரிவாக பார்க்கலாம்.


ஒட்டிப்பிறந்த இரண்டு சூர்யாவும் அமேரிக்காவின் ஒரு சிறிய நகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு பேருக்கும் அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமே இருக்காது. ஒருவர் தலையை ஒட்ட வெட்டி இருப்பார், இன்னொருவர் புசு புசு வென்று தலைமுடி வளர்த்து இருப்பார். இந்த இருவரும் தமது சிறிய நகரத்தில் சொந்தமாக ஒரு பர்கர்  கடை நடாத்தி வருகிறார்கள். சுறுசுறுப்பு + டைமிங் + சிறப்பு தேர்ச்சி என்பனவற்றால் இவர்களது கடை ஆஹா ஓஹோவென்று புகழோடு ஓடுகின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஐஸ் ஹாக்கி ஆடுவதிலும் நேரம் சிலவிடுகிறார்கள். ஒட்டியிருப்பதால் கோல் காப்பில் சிறந்து விளங்குகின்றார்கள். சமயத்தில் பப், கிளப், டிஸ்கோதே என்று பட்டையை கிளப்பவும் செய்கிறார்கள்.


இந்த இரண்டு சூர்யாக்களில் தலைமுடியை ஒட்ட நறுக்கி இருக்கும் சூர்யா கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்லவராக இருக்க , தலைமுடி வளர்த்த சூர்யாவோ வாய் ஜாலங்களில் புகுந்து விளையாடுகிறார். கல கலவென பேசியே பெண்களை உஷார் செய்து மேட்டர் முடிப்பதிலும் வல்லராக இருக்கிறார். உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் முடிவளர்த்த சூர்யா பெண்களை உசார் பண்ணி "சம்பவம் " பண்ணிக்கொண்டு இருக்கையில் , மற்ற சூர்யா  பக்கத்திலேயே இருந்து லேப் டாப்பை நோண்டிக்கொண்டு இருப்பார். ஒட்டி பிறந்தவர்களாயிற்றே! வேறு வழி???? அட ! ரொம்ப நேரமா இந்த இரண்டு பேரோட பெயரையும் சொல்லாமலே எழுதிக்கிட்டு இருக்கேனே! ஷோர்ட்டா முடி வெட்டின சூர்யா பேரு "பப்பு சாமி" சுருக்கமா "பாப்", முடிவளத்த சூர்யா பேரு "வால்ட்டர்" சுருக்கமா "வால்ட்". இந்த கதையியில் சத்தமில்லாம ஒரு காதலும் ஓடிகொண்டு இருக்கிறது. பாப், பேனா நண்பர் பகுதி மூலமாக ஒரு "மேய்" ( காஜல்) என்ற பெண்ணுடன் மூன்றுவருடமாக காதலில் இருக்கிறார். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தது கிடையாது! அப்போ ஃபேஸ்புக் இல்லை, கதை நடப்பது 2003இல்!

சூர்யாவோட மேக் அப் எப்பூடி?

இந்த நிலையில் வால்டருக்கு இயல்பிலேயே நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக ஹாலிவுட் போய் ஒரு சிறந்த நடிகனாக ஆவதற்கு விரும்புகிறார் ( தமிழ் சினிமாவை இங்கு தான் ஹாலிவுட் தரத்துக்கு கொண்டு போகிறார் கே.வி ஆனந்த்) . இதற்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் பாப், பின்னர் தனது சகோதரனுக்காக இணங்குகிறார். சொந்தபந்தங்களிடம் விடைபெற்று தமது சிறிய நகரத்தை விட்டு கலிபோர்னியாவில் ஒரு அப்பார்ட்மென்டில் குடியேறுகின்றனர். அங்கு நடிகையாக ஆசைப்பட்டு ஏற்கனவே குடியிருக்கும் சமந்தாவின் நட்பு கிடைக்கிறது. சமந்தா மூலமாக ஒரு நடிப்பு ஏஜென்டின் தொடர்பும் கிடைக்கிறது. ஆனாலும் தனது பங்குக்கு வால்டரும் திரைப்ப்ட துறையில் புகுவதற்கு முயற்சி செய்தவண்ணம் உள்ளார்.


இதற்கிடையில் பாப்பிற்கு பேனா நண்பியாக இருக்கும் மேயை ,பாப்பிற்கு தெரியாமல் கலிபோர்னியா வரவழைக்கிறார் வால்டர். சில பல சந்திப்புக்களின் பின்னர் பாப்புக்கும் மேய்க்கும் காதல் மலர்கிறது. பாப்பும் வால்டரும் ஒட்டிய இரட்டையர்கள் என்று தெரியாமலேயே பாப்புக்கும் , மேய்க்கும் காதல் மலர்கிறது. சில பல உத்திகளின் மூலம் அந்த உண்மையை இருவரும் மறைப்பார்கள். ( உதாரணம் : ஒரு இடத்தில் பாப்பிற்கு பக்கத்தில் பிரம்மாண்ட டெடி பெயர் போல வேடமிட்டு படுத்திருப்பார் வால்டர்).


இந்த நேரத்தில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகையான செயரின் ( தாப்சி பானு) அறிமுகம் கிடைக்கிறது. தான் நடித்துக்கொண்டு இருக்கும் "ஹனி அன்ட் தெ பீஸ் " நிகழ்ச்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கும் தாப்ஸி , இந்த வித்தியாசமான இரட்டையரில் ஒருவரான வால்டரை தனக்கு ஜோடியாக நடிக்க வைப்பதன் மூலம், அந்த நிகழ்ச்சியின் மார்கட்டை குறைத்து , அந்த நிகழ்ச்சியிலிருந்து கழன்றுகொள்ள திட்டம் தீட்டி , நினைத்தபடி வார்டரை அந்த நிகழ்சியில் நடிக்கவும் வைத்துவிடுகிறார்.



செயரின் திட்டத்தை உணர்ந்துகொள்ளும் தயாரிப்பு தரப்பு , தொழிநுட்பம் மற்றும் கமிரா உத்திகளின் மூலம் வார்டர் கூட பாப் ஒட்டியிருப்பதை மறைத்து, படமாக்கி படப்பிடிப்பு செய்கிறார்கள். செயரின் எண்ணத்துக்கு மாறாக அந்த நிகழ்ச்சி செம கல்லா கட்டுகிறது, பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக ஓடுகிறது. அந்த பிரபலத்தின் காரணமாக இந்த இரண்டு சூர்யாக்களும் "டாக் ஷோ", "விளம்பரங்கள்" என வேல்ட் பேமஸ் ஆகிறார்கள்.

இப்படியாக அவர்களது வாழ்க்கை பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு நாள் இந்த இரண்டு சூர்யாக்களும் படுக்கையில் ஒன்றாக இருப்பதை தற்செயலாக காஜல் அகர்வால் கண்டு விடுகிறார். அவருக்குத்தான் இவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்ற கதை தெரியாதே! உடனே இவர்களை "ஓரினச்சேர்க்கையாளர்கள்" என நினைத்துவிடுகிறார். அப்போதுதான் தாங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்ற உண்மையை போட்டுடைகிறார் பாப். "மூன்று வருடங்களாக இந்த உண்மையை ஏன் மறைத்தாய்?" என்ற எக்ஸ்ரா கோபத்துடன் கிளம்பி போகிறார்.


ஓ! சமந்தா.. சமந்தா.. சமந்தா!

இதுவரை காலமும் ஒன்றாக , ஒட்டி இருந்தபோது சிரமமாக இல்லாத உணர்வு , ஒரு பெண் வந்ததும் வந்துவிடுகிறது. பாப் சூர்யா , காஜலின் நினைவாகவே அலைகிறார். இதை உணர்ந்துகொள்ளும் வால்டர் சூர்யா, பல்வேறு யோசனைகளின் பின்னர், இணைந்துள்ள தங்கள் இருவரையும் சத்திரசிகிச்சையின் மூலம் பிரித்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார் . இவர்கள் இருவரையும் பிரிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , இவர்கள் இருவரும் பாப் சூர்யாவின் கல்லீரலையே பகிர்ந்து கொண்டுள்ளார்கள். அது சத்திரைகிச்சையின் போது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடலாம். முதலில் வால்டரின் யோசனைக்கு மறுப்பு தெரிவிக்கிறார் பாப். இந்த இடத்தில் காஜலும் வந்து , "நீங்கள் ஒட்டியிருப்பது எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.நான் உன்னை இப்படியே என் காதலனாக ஏற்றுக்கொள்கிறேன்" என்று டயலாக்கும் விட்டுவிட, பிரிவது என்ற எண்ணத்துக்கு சுத்தமாக மறுப்பு தெரிவிக்கிறார் பாப். ஆனாலும் பிரிந்துவிடுவது என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கும் வால்டர் , தான் குடித்துவிட்டு பாப்பை பொலிசிடம் மாட்டிவிட்டு, இன்னும் பிற தொல்லைகள் பண்ணி , பாப்பை சத்திர சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைத்து விடுகிறார். வெற்றிகரமான சத்திர சிகிச்சையின் பின்னர் இருவரும் பிரிந்தும் விடுகின்றனர்.


இப்போது ஆரம்பிக்கிறது சனி! பிறப்பிலிருந்தே ஒட்டியிருந்தன் பலன், ஒருவர் இல்லாமல் ஒருவருக்கு பேலன்ஸ் தவறுகிறது. அதைக் கூட சமாளிக்கும் இருவருக்கும் , தனிமை பெரும் சவாலாக இருக்கிறது. பாப் சூர்யா , காஜலை அழைத்துக்கொண்டு தனது சொந்த கிராமத்துக்கு சென்று மீண்டும் , பர்கர் கடையை ஆரம்பிக்கிறார். வால்டர் இல்லாமல் அவரால் அந்த கடையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். அதோடு ஹாக்கியிலும் , கோட்டைவிடுகிறார். இங்கு கலிபோர்னியாவில் பாப் இல்லாத சென்டிமென்டோ என்னமோ, வார்டரின் டி.வி ஷோ காத்து வாங்குகிறது. அத்தோடு தனிமை துயர் வேறு! இந்நிலையில் செயரின் ஆலோசனையின் பேரில் , பாப்பை சந்திக்க கிளம்புகிறார் வால்டர். இருவரும் மீண்டும் இணைகிறார்கள். எப்படி என்கிறீர்களா? தமது ஆடைகளை இணைப்பதன் மூலம் ,பழையபடி இருவரும் இணைந்து பட்டையை கிளப்புகிறார்கள். தேவையான போது பிரிந்தும், தேவையின் போது இணைந்தும் கொள்கிறார்கள்.  பாப் சூர்யா காஜலை மணமுடித்து , அவரை கர்ப்பமும் ஆக்குகிறார். வால்டர் சூர்யா, உள்ளூர் நாடக சபாவில் பெரிய ஆர்டிஸ்டாக ஆகிவிட சுபம் போட்டு படத்தை முடிக்கிறார் இயக்குனர் கே.வி ஆனந்த்.


மாற்றான் ட்ரெய்லரில் காட்டுவது போல படம் அவளவு சீரியசாக இல்லை, ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை செம காமடியாகவே போகிறது ( விளம்பர யுக்தியோ என்னமோ?) . சைகைகளால் காமடி, குறியீட்டு காமடி, வார்த்தைகளால் காமடி என அனைத்தையும் கலந்து தந்திருக்கிறார் கே.வி. ஆனந்த்.ன்படம் முழுக்க சிரிச்சு முடியல.......... 
உதாரணத்துக்கு சில காட்சிகள்......

* தங்களது பர்கர் கடையில் ரகளை பண்ணும் ஆசாமியுடன் பேசும் வசனங்கள்.

* அடிபட்டு அடிபட்டே உடைந்து போன அந்த ஐஸ் ஹாக்கி மைதானத்தின் கண்ணாடியை காட்டுவதும், காட்டிக்கொண்டு இருக்கும் போதே "மடார்" என ஒருவர் வந்து அந்த கண்ணாடியில் மோதுவதும்.

* வார்டர் சூர்யா மேட்டர் பண்ணிக்கொண்டிருக்கும்  போது திரையொன்றை போட்டுவிட்டு , இந்தப்பக்கம் அசால்டாக இருந்து அப்பிளை நோண்டும் பாப் சூர்யா. 


* கலிஃபோர்னியாவில் அந்த அப்பர்ட்மெண்ட் ரிசப்ஷனிஸ்டாக வரும் ஆசாமியும், தான் விழித்திருப்பதாக காட்டிக்கொள்ள அந்த மனிதர் அடிக்கும் ரகளையும்.

* கலிஃபோர்னியா கிளப் ஒன்றில் , எல்லோரும் மெலோடி பாடல் ஒன்றுக்கு ரம்மியமாக ஆடிக்கொண்டிருக்க, பாப் சூர்யாவும், காஜலும் என்ன பேசுவது என்று தெரியாமல் "எனக்கு பனி பிடிக்கும்" " எனக்கு நிலநடுக்கம் என்றால் பயம்" என்று பேசிக்கொண்டிருப்பதும், அதற்கு வால்டர் சூர்யா காட்டும் முகபாவனையும் செம! அதிலும் "எனக்கு வீட்டின் பின்புறம் பக் யார்ட் இருப்பது ரொம்ப பிடிக்கும் என மேய் சொல்ல, 'ஆமாம் பக் யார்டில் தான் நாய் வளர்க்கலாம்" என்று பாப் சொல்லிவிட்டு முழிவாரே!!! வயிறு வலிக்க சிரித்தேன்! 

* வியட்னாம் போரில் காலை இழந்ததாக பிச்சையெடுக்கும் நபர்

* வார்டரின் ஏஜென்டு

* பஸ்ஸில் வார்டர் ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்க, கதவுக்கு வெளியே தொங்கும் பாப்

சூர்யாக்கள் மற்றும் காஜல்


இப்படியாக படத்தில் எங்கேயுமே காமடிக்கு குறைவே இல்லை. சீரியசான நேரங்களில் கூட காமடி தஒவிரித்தாடுகிறது. ஆனாலும் எந்த இடத்திலும் காமடியானது அந்த காட்சியின் போக்கையோ, கனாகனத்தையோ கெடுத்துவிடாமல் பார்த்திருக்கிறார் கே.வி ஆனந்த். அதற்கே நாலைந்து அவர்டு கொடுக்கலாம். கலகலப்பான நேரத்தில் அமர்க்களமான காமடி, சோகமான அல்லது நெகிழ்வாம நேரத்தில் குறியீட்டு அல்லது சைலண்டான காமடி என்று காட்சிக்கேற்ப காமடியை அள்ளி தூவியிருக்கிறார் இயக்குனர் கே.வி . ஆனந்த்.

நடிப்பை பொறுத்தவரை இரண்டுமே சூர்யாவாக இருந்தபோதிலும் வால்டராக வரும் சூர்யாவே எல்லோரையும் கவர்கிறார். பாப் சூர்யா கூச்ச சுபாவமுடையவராக காட்டப்படுவதால் அடக்கி வாசித்தாரோ என்னமோ? ஆனாலும் தனது கதாபாத்திரத்துக்கு உரிய நடிப்பை வெளிக்காட்ட பாப் சூர்யாவும் தவறவில்லை என்றே கூற வேண்டும். ஏப்ரில் ஆக வரும் சமந்தாவும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பு, சமந்தா அதி உச்ச கவர்ச்சி காட்டிய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். அனேக நேரங்களில் பிகினியுடன் தான் அலைகிறார். ( ஆபாசம் என்று சரவணா சொல்வாரே என்பதற்காக , டீசெண்டான ஒரு படம் தேடியும் கிடைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்). செயராக வரும் தாப்ஸி , பந்தாவோடு கூடிய பாந்தமான நடிப்பு, காஜலின் நடிப்பும் கவனிக்கத்தக்கது.

தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டுபோன கே.வி ஆனந்த்!

என்னதான் பாலா, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல்,பிரபு சாலமோன் ,கமல்ஹாசன் போன்றோர் தமிழ் சினிமாவை அடுத்த பரிமாணத்துக்கு கொண்டு போவதற்கு பிராயத்தனப் பட்டாலும், சத்தமேயில்லாமல் தமிழ் சினிமாவை ஒரு உலக சினிமா ரேஞ்சுக்கு கொண்டுபோயிருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.


* முதலில் கதை , ஒட்டிய இரட்டயரை வைத்து உலகில் இதுவரை யாரும் யோசிக்காத அளவுக்கு ஒரு படம் பண்னியிருப்பது. ( கே.வி சார் இந்த கதையை முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோவில் கொடுத்து உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றாக பதிவு செய்து விடுங்கள். அப்புறம் எவனாச்சும் வெள்ளைக்காரன் வந்து என்னோட கதை என்று கேஸ் போட்டுட போறான். சொந்தமாய் யோசிக்கிறது மட்டுமல்ல, அதை பாதுகாக்கவும் தெரியணும்)

சொல்லித்தெரிய வேண்டி இருக்கு இது தாப்ஸீன்னு! எல்லாம் மேக் அப்!

* அடுத்து ட்ரெய்லரிலும் படத்திலும் வேறுபட்ட கதை போல காட்டியிருப்பது. ட்ரெய்லரை பார்க்கும் போது ஏதோ ஆக்க்ஷன் படம் போல தோன்றினாலும் படம் தியேட்டரில் காமடி பீஸாகியிருப்பது. ஆனாலும் ட்ரெய்லரில் காட்டப்படும் அந்த சண்டைக்காட்சி அப்படியே அப்பட்டமாய் , படத்தில்  கிளப்பில் இரண்டு சூர்யாவும் சண்டை போடுவது போல் அமைந்துள்ளதானது வேறு படத்தின் ட்ரெய்லரை நான் பார்க்கவில்லை, சரியான படத்தை தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்தியது.


* அடுத்து மேக் அப் தொழிநுட்பம்! என்னதான் ட்ரெய்லரில் நடிக நடிகைகளது முகங்கள் அப்படியே காட்டப்பட்டாலும் , படத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு மேக் அப் போட்டிருக்கிறார்கள். இரட்டை சூர்யா என்ற போதும், இருவரது முகத்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஹாலிவூட் தரத்துக்கு இருக்க வேண்டும் என்பதற்காக , சூர்யாவை வெள்ளைக்காரன் போலவே மேக் அப் போட்டுவிட்டிருகிறார் கே.வி! பார்வைக்கு ஒரு சூர்யா மற் டாமன் போலவும், இன்னொரு சூர்யா கிரேக் கினியர் போலவும் இருக்கிறார்கள். அது போல் சமந்தா, காஜல், தாப்ஸி ( இவர் ஒஸ்கார் விருதுவென்ற செயர் போலவே மேக் அப் செய்து இருக்கிறார்) என எவரையுமே அடையாளம் தெரியவில்லை. அந்தளவுக்கு மேக் அப் இருக்கிறது. கமல் ஹாசன் எல்லாம் பிச்சை எடுக்கணும்!


* ஹாலிவூட் தரத்தில் படத்தை எடுத்திருப்பதாலோ என்னமோ நடிகர்கள் , டெக்னீஷியன்கள், இயக்குனர் ஆகியோரின் பெயர்களை கூட மாற்றியிருக்கிறார்கள். இசை ஹாரிஸ் என்பதற்கு பதிலாக சார்லி கார்ட்னர் என வருகிறது. தயரிப்பி கல்பாத்தி அகோரத்துக்கு பதில் டுவன்டியத் சென்சுவரி ஃபொக்ஸ் என வருகிறது. இயக்குனர் கே.வி . ஆனந்த் என்பதற்கு பதில் ஃபெயர்லி என்று வருகிறது. படத்தின் பெயர் கூட "மாற்றான்" என்பதற்கு பதில் "ஸ்ரக் ஒன் யூ" என்று வருகிறது. மேக் அப் தொழிநுட்பத்தை போலவே இந்த பெயர் மாற்றும் தொழிநுட்பமும் தமிழ் சினிமாவுக்கு புதிது. ( ஆனாலும் ஏற்கனவே இந்த தொழிநுட்பத்தை விஜய் மில்டன், கௌதம் மேனன், மிஸ்கின், ஷங்கர் ( காட்சிகளில்), முருகதாஸ் ஆகியோர் பயன்படுத்தியிருப்பதாக அறிகிறேன்) . ஒரு வேளை தமிழில் ஒரிஜினல் பெயர்களுடன் படம் வெளியாகலாம்.

இந்த உலக தரமான சினிமாவை காணும் பாக்கியம் உங்களுக்கு எப்போது கிடைக்கப்போகிறதோ? ஒரு பிரபல பதிவராக இருந்த படியால் , பிரீமியம் ஷோ பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எல்லோருக்கும் அது வாய்க்குமா? 

டிஸ்கி : ஜாகி சானின் "டுவின் டிராகன்" படத்துக்கும் மாற்றானுக்கும் எந்தவித சம்மந்ததும் கிடையாதாம். பிரீமியர் ஷோவில், இடைவேளையின் போது  கன்டீன் டீ மாஸ்டர் சொன்னார்.

டிஸ்கி : நேற்று நான் பிரீமியர் ஷோ பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஃபேஸ்புக்கில் பின்னூட்டம் போட்டு தொல்லை செய்த பாலா கணேசனையும், தினகரன் ரேணுகாவையும் பதிவுலகம் வன்மையாக கண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.




34 comments:

  1. நண்பா விமர்சனத்தில் கதையை முழுவதுமாக சொல்லக்கூடாது , மற்றபடி அதில் வரும் சாதக பாதகங்களை அலசிய விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. கதையை முழுவதும் சொன்னதன் காரணம் என்னவென்றால், தமிழில் இந்த படம் வெளியாகும் போது, நம்ம அறிவாளி கே.வி வேறு ஒரு ட்விஸ்டு வச்சு வெளியிடுவார், அது புதிதாக இருக்கும் அது தான்!

      * என்ன அதிசயம் ? மொதோ ஆளா மொய் வச்சிருக்க நண்பா?

      Delete
  2. நல்ல அலசல்... நன்றி...

    முதல் முதலாக விமர்சனம் எழுதியதற்கு பாராட்டுக்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. அண்ணே சத்தியமா உங்களுக்கு புரியலயா? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?

      Delete
  3. ஏன்னே ஏன் இப்பிடி ?

    ReplyDelete
    Replies
    1. அட விடுப்பா! ஏதோ என்னால் ஆன பொது சேவை!

      Delete
  4. என்னா நக்கலு...

    கே.வி.ஆனந்து ஆசனவாயில ஆர்.டி.எக்ஸ் பாம் வச்ச இரண்டாம் காரிகனை வாழ்த்த வயதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே உங்களுக்கு காரிகன் ஜுரம் இன்னும் போகல போல இருக்கே! வாழ்த்துங்க ! நல்லா வாழ்த்துங்க! கூச்சப்படாம நெறைய வாழ்த்துங்க!

      Delete
  5. வணக்காம் பிரபல பாதிவாரே! தாங்கள் விமர்சாணம் படித்தன். ஆருமை! ஆர்பூதம்!ஆழகு! இதைப் பேன்ற பிரிமியார் ஷூ பார்த்து காதை முழுக்க சொல்வது சுப்பர்! தாங்கள் உறிவை பார்த்து மெய் பொய் எல்லாம் சிலுக்குது. மேன்மேளும்ம் துங்கள் அறிவூ பெருக வாழ்த்துக்கால். நான்றி...

    ReplyDelete
    Replies
    1. என்ன ரொம்ப குழறுது? சூர்யா அல்லது கே.வீ ரசிகரோ?

      Delete
  6. கே.வி ஆனந்து எனக்கும் டிவிடி காப்பி ஒண்ண வீட்டுக்கே போனமாசம் அனுப்பி வச்சிட்டாரு. வேலை பிஸியில நான் தான் கவனிக்கல. :)

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் ஒடனே பாத்திடணும்! அப்புறம் வருத்தப்பட்டு எந்த பிரயோசனமும் கெடையாது!

      Delete
  7. வோய்,
    எங்க கே.வி எப்பவோ அயன் படம் முலமா தமிழ் சினிமாவை ஹாலிவுட்க்கு தூக்கிட்டு போய்ட்டார்..நீ என்னமோ இப்ப வந்து பேசுற.
    நீங்க எவ்வளவு அடிச்சாலும் அவர் தங்குவார். என்னா அவர் ரொம்ப ரொம்ப நல்லவர். யாரு கதையும் திருட மாட்டார்..

    ReplyDelete
    Replies
    1. அயன் வந்தப்போ யாரும் என்னய பிரீமியர் ஷோவுக்கு கூப்பிடல அண்ணே! அது போக நான் பதிவுலகிலேயே இல்லை. என்னோட துரதிஷ்டம் !ஹும்........

      யாரு கே.வி யை அடிச்சா? நான் பெருமையால்ல பேசிக்கிட்டு இருந்தேன்! எலேய் அயன் படத்திலேயே எந்தெந்த ஸீன் எந்தெந்த படத்தில் இருக்குன்னு , சூர்யா வாயால இன்னொரு டைரக்டருக்கு சொன்னவருடா கே.வி! இந்தாளுக்கு எதுக்கு எதெல்லாம்ன்னு யோசிச்சேன். அப்போ எனக்கு புரியல!

      Delete
  8. திரைப்படங்களின் பால் அதிக நாட்டம் இல்லாதவனாயினும் உங்களின் அலசல்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகட்கு என் வாழ்த்துக்கள் நண்பா ! தமிழ் சினிமா என்டைக்கு திருந்த போகுதோ !!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு எதுக்கு ஆராட்சி ? எல்லோருக்கும் தெரிந்தது தான்!தமிழ் சினிமாவா? இப்போதைக்கு கஷ்டம் தான்!

      Delete
  9. யோவ் உண்மையிலுமே எந்த விடயத்தை எடுத்தாலும் எப்படி இவ்ளோ நீளமாய் பதிவு எழுத முடிகிறது?ஐன்ஸ்டீன் மூளைய விட சற்று அதிகமாய் இயங்குது போல!!மொக்கையிலும் சீரியஸ்!! ஹஹஹா ரசித்தேன் பதிவை!

    ReplyDelete
    Replies
    1. நம்ம வாயி வழவழா.. கொழ கொழா வாயண்ணே! எதையும் சுருக்கமா சொல்ல தெரியாது! வருகைக்கு ரொம்ப நன்றிண்ணே!

      Delete
  10. யோவ் நான் கூட உண்மையா படம் பார்த்துடியோனு சீரியாச படிச்சு பார்த்த இங்கிலீஷ் படத்துக்கு தான் இவ்ளோ பிள்டுப்பா அவ் அவ் அவ் அவ் ஆனாலும் விமர்சனம் டாப்பு கலகிட்டாய கிஷோகர்

    ReplyDelete
    Replies
    1. அய்யா... ஏமாந்தீங்களா? இந்த விமர்சனம் படிச்சாச்சில்ல!! இனிமே "மாற்றான்" விமர்சனம் படிக்க வேண்டி இருக்காது. நிம்மதியா போயி தூங்குங்க!

      Delete
  11. ரகளை! ரசித்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணே ! எனது தளத்துக்கு உங்களது இரண்டாம் வருகை! ரொம்ப சந்தோஷம்!

      Delete
  12. கே.வி.ஆனந்த் இதுவரை எடுத்துள்ள படங்கள், "கனா கண்டேன்", "அயன்" & "கோ"
    இதில் "கோ", No Man's Land, State Of Play, Inside Man இந்த 3 படங்களையும் கலந்து சுட்ட வடை.
    "அயன்", "Maria Full Of Grace" என்ற Spanish திரைப்படத்தில் இருந்து அப்பட்டமாக உருவப்பட்டது. Plot மட்டும் உருவியிருந்தா கூட பரவால்ல. ஆனா, படத்துல வர்ற போதை capsule விழுங்குவது, capsule உள்ளே burst ஆக, பின் அவற்றை வயிற்றை கிழித்து எடுப்பது எல்லாமே பக்காவாக சுட்டுள்ளார் நம்ம அறிவிஜீவி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த்.
    இதில் மிகப்பெரிய கூத்து என்னன்னா அயன் படத்தில் copy cat டைரக்டர்களைப் பற்றி நம்ம கே.வி.ஆனந்த் நக்கலான காமெடி scene வைத்திருப்பார். அதில் ஒரு டைரக்டர் காருக்குள் உட்கார்ந்துகொண்டு கருணாசிடம் Bank Robbery பற்றி அடுத்த படம் எடுக்கப் போகிறேன் அது சம்பந்தமா DVD கொடு என்பார். கருணாஸ் சூர்யாவிடம் வந்து கேட்க, அதற்கு சூர்யா, "Sword Fish", "Italian Job" உள்ளிட்ட சில படங்களை சொல்லுவார்..
    அய்யோ அய்யோ.... "ஈயத்தப் பாத்து இளிச்சதாம் பித்தளை!!"
    ஏம்பா கே.வி., உனக்கு நல்லா தெரிஞ்ச கேமராமேன் வேலையைப் பாக்க வேண்டியது தானே?
    "பாப்பானுக்கு எதுக்குடா ஆட்டுக்குட்டி வியாபாரம்"

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கனா கண்டேன் இதுவரை எந்த படத்தின் கொப்பி என்று சரியாக தெரியவில்லை! படம் சரியாக போகாததால் ஒரு வேளை அது அவரது சொந்த படைப்போ என்னமோ? அயன் "மரியா ஃபுல் ஒ கிரேஸ்" இன் உருவல் என்று எனக்கு தெரிந்திருந்தது. (அது தான் எல்லோருக்கும் தெரியுமே) , கோவின் அப்பாக்களான "No Man's Land, State Of Play" எனக்கு தெரியும், "Inside Man" இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும், ரொம்ப நன்றி! ( ஆனாலும் எவளவு க‌ஷ்டப்பட்டு கே.வி அடிச்சிருப்பார், ஆனா நாமா அசால்டா எழுதிட்டு போயிர்றோம், பொல்லாத ஆளுங்கப்பா நாம! பாவம்யா அந்த ஆளு)

      ///"ஈயத்தப் பாத்து இளிச்சதாம் பித்தளை!!"//////

      செமையான பழமொழி!

      ///"பாப்பானுக்கு எதுக்குடா ஆட்டுக்குட்டி வியாபாரம்"///

      இது எனக்கு புதுசு ஆனாலும் நல்லாயிருக்கு!

      வருகைகும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி! அடிக்கடி வாருங்கள் சந்திக்கலாம்!

      Delete
  13. எனக்கு ஒன்று மட்டும் நல்லா புரிஞ்சிடிச்சு நீ தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறது மட்டுமில்ல ஆட்டைய போட்டுட்டு ஆஸ்காருக்கு ஆசைப்படுறவங்களுக்கு ஆப்பும் வைக்கப்போற போல இருக்கு.

    பார்த்தியா நான் தந்த பிரபலபதிவர் பட்டத்தாலதானே ஒன்னைய பிரீமியர் ஷோவுக்கு கூப்பிட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. தம்பி சிறந்த ஆட்டையை போடும் அவார்டு"ன்னு இன்னும் ஆஸ்கார் அவார்டு அறிமுகமாகல! ( தம்பி டீ இன்னும் வரல) . அப்புடி மட்டும் ஆச்சு நம்மாளுக தான் வருசா வருசம் வெல்லுவானுக!

      ///பார்த்தியா நான் தந்த பிரபலபதிவர் பட்டத்தாலதானே ஒன்னைய பிரீமியர் ஷோவுக்கு கூப்பிட்டாங்க.///

      அடுத்த தடவ உன்னய சந்திக்கும் போது கையில இருக்கிற சில்லறை அத்தினையும் ஒனக்குத்தான் மச்சி!

      Delete
  14. //காமடி தஒவிரித்தாடுகிறது// என்ன இது புது கெட்டவார்த்தை??

    நீ வேற​ .... நான் 'முகமூடி' படத்துக்கே 2006ல​ ஒண்ணு, 2008ல​ ஒண்ணு, இந்த​ வருஷம் ஒண்ணுன்னு, 3 பிரீமியர் ஷோ பார்த்துட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ///என்ன இது புது கெட்டவார்த்தை??///

      பிரபல பதிவர்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கட்டாயம் விடணுமாம்! சொன்னது நம்ம கணேசன் அண்ணன்!

      //நீ வேற​ .... நான் 'முகமூடி' படத்துக்கே 2006ல​ ஒண்ணு, 2008ல​ ஒண்ணு, இந்த​ வருஷம் ஒண்ணுன்னு, 3 பிரீமியர் ஷோ பார்த்துட்டேன்!///

      என்னய கூட கூப்பிட்டாய்ங்க , நான் இங்க ஒரே பிஸி!

      Delete
  15. உண்மையான மாற்றான் விமர்சனம் என்று நம்பியே விட்டேன் நண்பா. ஆனாலும் இப்படி நக்கல் பண்ணக் கூடாது. அருமையான விமர்சனம். யாருக்கு தெரியும் இதுவே மாற்றான் திரைப்படத்தின் முதல் விமர்சனமாகவும் எதிர்காலத்தில் மாற வாய்ப்புண்டு (தமிழ் டைரக்டர்களின் திறமை அப்படி:) )

    ReplyDelete
    Replies
    1. நம்பீட்டியா! அது.... நீ சொன்னதும் சரி தான் நண்பா. நம்மாளுகளை நம்பவே முடியாது, பச்ச பச்சையா கொப்பி அடிச்சுப்புட்டு , சொந்த கற்பனைன்னு பச்சையா புழுகுவானுக! எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம், உன்னோட சில பதிவுகள் ஆங்கிலத்தில் இருக்கே?

      Delete
  16. Replies
    1. என்ன 100% மரண மொக்கைங்கிறீங்களா? ரைட்டு விடுங்க!

      Delete
    2. ஏன் இந்த பித்தலாட்டம். படம் நீங்க சொன்னது போலவே இல்லையே...

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...