உதைபந்து

Thursday, August 16, 2012

கிஸ் அடிச்சது பதினெட்டு மாசத்துக்கு முன்னாடி! அதுக்கு அப்புறம் நடந்தது எவளவோ இருக்கு! ஹெஹ்.. ஹேய்!!




பதிவர்கள், மூத்த பதிவர்கள், பிரபல பதிவர்கள் , ஃபேஸ்புக் போராளிகள், ஃபேஸ்புக் & டுவிட்டர் இலக்கிய குடும்பத்தை சேந்த எல்லாரும் ஒன்னா சேந்து நின்னு கைகொட்டி தங்களுக்கு தாங்களே வாழ்த்து தெரிவிச்சுகிட்டாய்ங்க! ஆம்பள பொம்பள பாரபட்சம் பாக்காம மாறி மாறி கட்டிப்பிடிச்சுக்கிட்டாய்ங்க! சில பேரு பட்டாசு கொழுத்தி வானத்தில விட்டாய்ங்க!  சில பேரு பக்கத்து வீட்ட கொழுத்தி விட்டாய்ங்க! நாங்கெல்லாம் அப்பவே அப்புடி! இப்ப கேக்கவா வேணும்னு டாகுடருக்கு மேல போயி "பஞ்ச்" வுட்டானுக! அதிலும் சில பேரு "யுரேகா .. யுரேகா.."ன்னு அம்மணக்கட்டையா மூத்திர சந்தெல்லாம் ஓடித்திரிஞ்சாய்ங்க... தமிழ் கூறும் நல்லுலகமே ஒரெ குதூகலமா இருந்திச்சி... அவனவன் கண்டுபிடிப்புக்கான அடுத்த நோபல் பரிசு தனக்கு தான்னு பேச ஆரம்பிச்சுட்டான். " விக்கிலீக்ஸே உனக்கு சவால் விடுகிறேன்னு" ஸ்டேடஸும் போட்டாய்ங்க...... என்ன தாம்பா நடந்திச்சி?


சில்லா பட்டி செல்லத்தாயும் அந்த சின்னப்பய செவலக்காளையும் வாய் மேல வாயி வச்சி கெணறு தோண்ட்றாப்ல ஒரு போட்டாவ நம்ம பயலுக இன்டர்நெட்டில வுட்டு பெரிய தொழினுட்ப புரட்சிய உண்டுபண்ணிட்டாய்ங்கல்ல. ஆமா! இல்லையா பின்ன !!! இதெல்லாம் எம்மாம் பெரிய சாதனை? பெரிய பெரிய பதிவருங்க.... சமூக வலைத்தள போராளிங்க எல்லாருமே இந்த போட்டாவ தங்க பம்க்குக்கு போட்டு , ஷெயார் பண்ணி சமூகத்து மேல தங்களுக்கு இருக்கிற அக்கறைய காட்டிப்புட்டாய்ங்க... அதனால தான் இம்புட்டு கோலாகலம்! 


அதில பாருங்க , ஃபேஸ்புக்ல செலது இருக்குங்க... .. ஒலகத்தில எந்த மூலைல அநியாயம் நடந்தாலும் , மூக்கு பொடச்சு 'கொக்கரக்கோன்னு" கொக்கரிச்சு அத்த போயி ஒரு பெரிய இது மாதிரி .... " டோன்ட் லைக் திச் பிக்சர், பிளீஸ் ஷெயார்" அப்டீன்னு போட்டுவைப்பாய்ங்க. அந்த மாதிரி லூசு பயலுக போடுற போட்டக்களை கூட கண்டுகொள்ளாம, அசால்டா போறவய்ங்க நம்ம போராளிங்க..... ஒருத்தன் அக்ஸிடன்டாயி மண்ட பொளந்து கெடப்பான். அதுக்கு ஒரு லைக் போட்டிட்டு அடுத்த வேலைய பாக்க கெளம்புற பிரபல ஃபேஸ்புக் போராளிங்க எல்லாரும் , இந்த மேட்டர விழுந்து விழுந்து ஷேர் பண்ணி சமூக சேவ பண்ணிக்கிட்டாய்ங்க! அதிலையும் போட்டோ ஷொப்ல போட்டு , பெரிய பெரிய எஃபக்டு எல்லாம் குடுத்து , பிக்ஸார் மூவிசுக்கே சவால் விடுறாப்ல போட்டால்லாம் போட்டானுக!


அதுலையும் தங்களோட வாய்க்கு எட்டாம போன செல்லத்தாயியோட வாயி நாற வாயின்னு ஐநா சபைக்கு அறிவிச்சுட்டடில நம்மளுகலுக்கு  ஏதோ காவிரி தமிழ்  நாட்டுக்குள்ளாற பாயிறத விட மேலான ஆனந்தம் பாயுது. இன்னும் சில 40+பதின்ம வயது வலைத்தள போராளிகள், செல்லத்தாயிக்கு 30 வயசு ஆகிட்டதால அவள ஆன்டி லிஸ்டில சேர்த்து ஆனந்தப்பட்டுகிட்டு இருக்காய்ங்க.


ஆறாம் வகுப்பில அல்ஜீபிரா ஒழுங்கா தெரியாதவன் கூட இந்த மேட்டர வச்சி.... ஆறேழு பதிவு போட்டுட்டானுக! ஒடனே பிரபல பதிவருக்கு மூக்கு வேர்த்திடுச்சி... காலேல சரியா மோஷன் போகலன்னா கூட அத பத்தி மூணு பதிவு போடுறவரு.. இந்த ஒலக மகா கண்டுபிடிப்பு நடந்திருக்கிறப்ப , தானும் பதிவு போடலன்னா தன்னோட கெவ்ரவம் கெட்டுடும்னு பதிவெழுத கெளம்பினாரு.


மத்த எல்லரையும்விட வித்தியாசமா தான் எழுதுவேன்னு மரண மொக்கை போடுற அந்த பதிவரு இந்த மேட்டரையும் வித்தியாசமா டீல் பண்ண முடிவு பண்ணி செல்லத்தாயி & செவலக்காளை ஊருக்கு கெளம்பி போயி தகவல் சேகரிக்க பொடி நடையா பொறப்பட்டாரு.


தன்னோட என்குவாரிய செல்லத்தாயி கிட்டேர்ந்து ஆரம்பிச்சாரு..... யாரிந்த செல்லத்தாயி.....வேலூர் மாவட்டம் .... மொக்க குளம் தாலுகா... அங்கே ஒரு அடர்ந்த காடு ...... அப்டீன்னு ஸீ தமிழ் நம்பினால் நம்புங்கள் ரேஞ்சுக்கு அடித்தொண்டைல ஆராச்சி பண்ணினாரு. செல்லத்தாயி யாருன்னா , எழவு வூட்ல ஒப்பாரி, தாலாட்டு, கொலவ எல்லாம் பாடுற ஒரு அல்ரா மார்டன் பிகரு. சும்மா செவ செவன்னு ....... பாண்ஸ் வெளம்பரத்தில வர்ர ஜிகிலிஸ் மாதிரி இருப்பா. 


அப்புறம் இந்த செவலகளை யாருன்னா... அவனும் ஒரு மியூசிக்கல் ஃபிகரு தான். ஊர்ல எழவு விழுந்தா அவன் தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவான். ஆள பாத்தாக்கா ... சீவி விட்ட பென்சிலுக்கு ஆட்டு தாடி ஒட்டி வச்சாப்ல தழ‌தழன்னு இருப்பாப்ல. அப்புடித்தான் ஆரம்பிச்சிருக்கு ரெண்டு பேருக்கும் சங்காத்தம். இப்போ அவுங்க ஊருக்காரய்ங்க எல்லாம் " எலேய் செல்லத்தாயி வாய செவலக்காள கடிச்சு வச்சிட்டாம்பா "ன்னு பேசிக்கிற அளவுக்கு போயிருக்கு.


இந்த ரெண்டுபேர பத்தியும் நம்ம பிரபல பதிவரு ஊருக்குள்ள விசாரிச்சு பாத்தாரு. திண்ணைல செவனேன்னு படுத்திருந்த ஒரு பெருச எழுப்பி விசாரிச்சாரு நம்ம பதிவரு. அதுவரைக்கும் அக்குள்ள கைய வச்சி ஆராட்சி பண்ணிக்கிட்டு இருந்த அந்த பெரியவரு , கடைசியா கடஞ்சு.. கடஞ்சு எண்ணை எடுத்திட்டாப்ல... அப்புடியே அக்குள்ள விட்ட கைய வாயில விட்டு , அதக்கியிருந்த வெத்திலைய , வாய் ஓரமா பார்க் பண்ணிக்கிட்டு பதில் சொல்ல ஆரம்பிக்கிறாரு.




"தம்பி இந்த செல்லத்தாயி இப்போ தான் இப்புடீன்னு இல்லப்பா..... " புள்ளீச்"ன்னு வெத்தலைய வாசல்ல துப்பிக்கிட்டே ஆரம்பிச்சாரு.

"முன்னாடி இவோ செல்வதம்பின்னு ஒரு கூத்துகட்டுற பயலு கூட இருந்தவ. இவன் செவலக்காளையும் ஆளுதான் பாக்க அடிபட்ட கோழி மாதிரி இருக்கான், ஆனா மகா கேடி. மூணு அப்டீன்னு ஒரு கூத்து, அந்த கூத்துக்கு இவன் தான் தார , தப்பட்ட எல்லாமே, அப்புறம் தான் விசயமே தெரியும் , அந்த கூத்து கட்டின பொண்ணு கூடயும் இவன் வானசாஸ்திர ஆராட்சி எல்லாம் பண்ணி இருக்கான்னு"

"புளீச்"

"அந்த பொண்ணு பேரு கூட ஏதோ.... அதாம்பா கொஞ்ச நாளா இந்த் சொம்புத்தேவன் கூட சுத்திச்சே... ஆங்... அசுவதாத்தா!" "அந்த பொண்ணு கூடவும் இவன் கொஞ்சம் அப்புடி இப்புடின்னு அரசல் புரசலா கத வந்திச்சு"

பிரபல பதிவர் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டார். "ஐயா பேரு என்னங்க?"

"என்னையா கேட்டிங்க ? எம் பேரு கமலகாந்தன்"

"ஐயா கூட பொஸ்பரூபம் அப்டீன்னு ஒரு கூத்து கட்டுறீங்களாமே? அதுலயும் இந்த செல்லாத்தா இருக்காங்களாமே! அப்போ ஐயா கூடவும் , செல்லாத்தா அப்புடித்தானா?"

"புளீச்" "போடா நானே கடுப்பில இருக்கேன்"

முகத்தில வழிஞ்ச வெத்தில எச்சிய தொடச்சுகொண்டே பிரபல பதிவர், பஞ்சாயத்து ஆபிசுக்கு போனாரு. அங்கதான் பெருசுங்க எல்லாம் கூடி செல்லாத்தாளையும், செவலகாளையையும் விசாரண பண்ணுறாய்ங்களாம். பதிவரு உள்ள போறப்ப செவலக்காள பேசிக்கிட்டு இருந்தான்.

"அது வந்துங்க ஐயா, இந்த வாயி இருக்கில்ல வாயி! அதுக்குள்ளாற தேனு, கருப்பட்டி, மொளகா, எலிமருந்து, பால்ட்டாயில், அதிமதுரம், பெவிக்கால் அப்புறம் கொஞ்சம் மொளகா தூள் எல்லாம் போட்டு கொப்புளிச்சுக்கிட்டே பாட்ட்டு பாடினா கொரலு நல்லா வரும்னு ஒரு யோசனை வந்துச்சுங்க. அது தான் அப்புடி மொயற்சி பண்ணி பாத்தோமுங்க"

"எலேய் மூதேவி, அப்புடி பண்ணுறதா இருந்தா நீயி பண்ண வேண்டியது தானே, அதுக்கு ஏண்டா செல்லாத்தாயி வாய கடிச்சு வச்ச?"

"அது வந்துங்... அடு ஒரு டூயட்டு பாட்டுங்... அதான்"

இப்போ செல்லத்தாயி குறுக்க பேசினா...

"மாக்கானுவளா.. அது நடந்தது பதினெட்டு மாசமாச்சு. அத்தையே இப்போ தான் கண்டுபிடிச்சிருக்கீங்களே. அந்த பதினெட்டு மாச கேப்புல நடந்த்தெல்லாம் நீங்க எப்போ கண்டுபிடிச்சு? எப்போ ஃபேஸ்புக்ல போட்டு? ஹெஹ்.. ஹேய்..ஹேய்....."



செல்லத்தாயி இப்புடி சொன்னது தான் தாமதம். அங்க கூடி நின்ன பிரபல பதிவருங்க எல்லாருக்கும் பயங்கர கோவமாயிரிச்சி.... ஆளாளுக்கு அடிடா புடிடான்னு கொழுந்துவிட்டு எரிஞ்சானுக. ஃபேஸ்புக் போராளிங்க கூட பயங்கர காண்டாயிட்டாய்ங்க... "இப்போ பாரு கலாசாரா சீரழிவு.. அப்பூடி இப்பூடின்னு ஸ்டேடஸ் போட்டு உண்டு இல்லன்னு ஆக்கிடறோம் பாருன்னு"பெரிய்ய பூகம்பமே வெடிச்சிரும் போல இருந்திச்சி....  "என்னா துணிவு உனக்கு ? பண்றதையும் பண்ணிட்டு பதினெட்டு மாச க‌ணக்குன்னு பல்ல இழிச்சிக்கிட்டு சொல்றியே? இருடி பிரபல பதிவரகள்ன்னா யார்னு காட்டுறோம்னு " ஆளாளுக்கு லேப் டாப்பையும் , மொபைலயும் தட்டி தொறந்தானுக. அப்போ செல்லத்தாயி வாய ததொறந்தா...


"என்னாங்கடா? என்ன விளாடுறீங்களா? நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ போட்டீங்க , அது ஓக்கே... ஏன்னா அந்தாளு மதத்தோட பேர்ல உல்டா பண்ணீட்டு இருந்தான் , அது சட்ட விரோதம். அத்த ஆளாளுக்கு ஓட்டு ஓட்டுன்னு ஓட்னீங்க ஆக்கே... இது என்னோட பர்சனல் மேட்டர்! நான் ஒரு நடிகைன்னா எது வேணும்னாலும் போட்ருவீங்களா? என்னோட அனுமதி இல்லாம , என்னோட வயக்காட்டுக்குள்ள வந்ததே தப்பு, அதுவும் இல்லாம என்னோட பர்சனல் போட்டாவ ஆளாளுக்கு ஷேரா பண்றீங்க....? இருங்கடா உங்க அவ்ளோ பேரையும் போலீசில புடிச்சு குடுக்குறேன்"


சொல்லி முடிக்கல அத்தனை போராளிகளும் அவனவன் வூட்ல பெட்ஷீட்டுக்குள்ள பொத்தீன்னு படுத்திருக்கான். இன்னும் கொஞ்சம் பேரு ஏழெட்டு ஆன்மீக பதிவா போட ஆரம்பிச்சான். நம்ம பிரபல பதிவர் என்ன பண்ணினாரு? ஃபேஸ்புக்ல தான் போட்ட செல்லத்தாயி செவலக்காள போட்டாவ எப்புடி ரிமூவ் பண்ரதுன்னு ஆளுங்க கிட்ட ரகசியமா ஐடியா கேட்டுக்கிட்டு இருக்காரு!

32 comments:

  1. அப்புறம் இந்த செவலகளை யாருன்னா... அவனும் ஒரு மியூசிக்கல் ஃபிகரு தான். ஊர்ல எழவு விழுந்தா அவன் தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவான். ஆள பாத்தாக்கா ... சீவி விட்ட பென்சிலுக்கு ஆட்டு தாடி ஒட்டி வச்சாப்ல தழ‌தழன்னு இருப்பாப்ல.///////// ஹஹஹஹா மச்சி சூப்பர் பா

    ReplyDelete
    Replies
    1. உங்க வயித்தெரிச்சல் ரொம்ப நல்லாவே தெரியுது!

      Delete
  2. //ஆள பாத்தாக்கா ... சீவி விட்ட பென்சிலுக்கு ஆட்டு தாடி ஒட்டி வச்சாப்ல தழ‌தழன்னு இருப்பாப்ல.//

    ஏன்யா காலங்காத்தால வயித்தெரிச்சல கௌப்புற? சீ ... தமிழ்ல ஒன்னு ரெண்டு ஃபிகருங்களத் தான் கொஞ்சம் மனசுக்கு புடிக்குது. அதுங்களையும் வத்தலும் சொத்தலும் இருக்கிற எவனாச்சு கொத்திட்டு போய்றாய்ங்க.

    ReplyDelete
    Replies
    1. அடேய்! யாருப்பா இது... நம்ம ஹாலிவூட் ரசிகனுங்க தமிழ் படத்து பக்கம் திரும்புறதே இந்த மாதிரி ஃபிகருங்க இருக்கிறதால தான். அது கூட பொறுக்கையா உங்களுக்கு. அட போங்கப்பா.... நம்மாளுகளே இப்புடி பண்ணுரீங்களேப்பா

      Delete
  3. விடு விடு ... பல்லு இருக்கிறவனுக்கு தான் பக்கோடா சாப்பிடக் கிடைக்குது. அவனுக்கு எங்கேயோ பெரிசா இருக்குய்யா ..... நான் மச்சத்தை சொன்னன்.

    ReplyDelete
    Replies
    1. அவன் ஆளே அந்த சைஸ்ல தான் இருக்கான் . அவனுக்கு எங்க பெருசா இருந்திர போவுது? # மீ டூ மச்சம்!!

      Delete
    2. //மீ டூ மச்சம்!!//

      அப்படின்னா !!!!!!!!

      Delete
    3. நானும் மச்சத்த தாண்ணே சொல்ல வந்தேன்! சும்மா தெரியாத மாதிரியே கேக்குறது!

      Delete
  4. ஏதாவது வீடியோ இருக்கா ? ( அப்பத்தான் உண்மைய கண்டுபிடிக்க முடியும் அதான் ..)

    ReplyDelete
    Replies
    1. உண்மைய கண்டுபிடிக்கணும்கிற உங்க நோக்கத்தில இருக்கிற உங்களோட உள்நோக்கம் எனக்கு நல்லாவே புரியுது! ( நல்லா கேக்குறாங்கப்பா டீட்டெயிலு)

      Delete
  5. அந்த ரெணண்டாவது ஃபோட்டோவ நீ போன பதிவுலேயே யூஸ் பண்ணிட்டே.. இது செல்லாது.. ஏமாத்துறான்.. அழுகுணி ஆட்டம்!

    ReplyDelete
    Replies
    1. யய்யா ... யப்பா.. சாமீ.... பதிவு போட்ட எனக்கே அதெல்லாம் ஞாபகம் இல்லப்பா..... என்னோட பதிவுகள எவளவு வெறித்தனமா நேசிச்சிருந்தா, எந்த பதிவுல எந்த போட்டா போட்டேன்னு தெள்ளத்தெளிவா சொலுவ? உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குப்பா....... ரொம்ப பெருமையா இருக்கு....

      Delete
  6. இப்பிடித்தான் கொலவெறி உருவாகியிருக்கு...

    ReplyDelete
    Replies
    1. இது செம வெறியால்ல இருக்கு! # ஆமா தல நீங்க ஏடும் பிளாக்கு எழுதுறீங்க???

      Delete
  7. 3 படமே ஒரு ...

    ReplyDelete
    Replies
    1. ஆ! ஆ! இந்தா வாய் வரைக்கும் வந்திரிச்சி... சொல்லிட்டு போயிடுங்க......

      Delete
  8. இந்த போட்டோ பார்த்ததுல இருந்து எனக்கு சாப்பாடு கூட உள்ள போகுது இல்லை

    அசத்தல் பிகருக்கு அட்டு பையனும்,
    அட்டு பிகருக்கு அசத்தல் பையனும் மாட்டுரதுதான் மச்சி யதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. உனக்கு சாப்பாடு மட்டும் தான் உள்ள போகல , எனக்கு எதுவும் வெளில வருதில்ல மச்சி!

      Delete
    2. ada pomkappaa oru kilukiluppu 4tovum podaamal oru pathippaa???? poi paarunka muuththa pathivarkal ellam eppadi ithai paaththi eluthiyirukkaanka enru??? naan kummunnu irukkiura 4,5 4to podunkaiyaa????

      Delete
    3. இவய்ங்க தொல்ல தாங்க முடியலப்பா!

      Delete
  9. சாரிப்பா கொஞ்ச நாளா வலையுலகத்துக்கு வரல. அதால உன்கிட்டயும் வரலப்பா. மன்னிச்சுக்கோ.
    ஆமா நீ என்னா ஒரே உதடு கடிக்கிற மேட்டராவே யோசிக்குற?

    ReplyDelete
    Replies
    1. எலேய் வந்ததும் வராததுமா என்ன உனக்கு கேள்வி வேண்டி இருக்கு? போயி வரிசைல நில்லு... இத்தின நாளு ஏன் வரலன்னு அம்மாக்கிட்ட கையெளுத்து வாங்கி வா! அப்புறம் சங்கத்தில சேந்துக்கலாம்!

      Delete
  10. வணக்கம்....ஏலேய் அவனா நீ???என்னமா எழுதியிருக்கீங்க.!என்ன ஒரு முயற்சி.அப்புறமா அவாட்டு தாறன்.!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னக்கா ? அவனா நீயின்னு கேட்டுப்புட்டீக? இதெல்லாம் நான் தமிழுக்கு ஆற்றும் தொண்டு! சீக்கிரம் அவார்டு தரவும்!

      Delete
  11. நண்பா மிக அருமை...
    கலக்குற கிஷோகரா...

    ReplyDelete
  12. ////அப்புறம் தான் விசயமே தெரியும் , அந்த கூத்து கட்டின பொண்ணு கூடயும் இவன் வானசாஸ்திர ஆராட்சி எல்லாம் பண்ணி இருக்கான்னு"////

    சூப்பர் பொஸ். என்னமா கலங்கடிச்சிருக்கிறீங்க. மொக்கை என்று லேபிள் போட்டு சிலபேர் ரொம்பவே காண்டாக்கியிருக்கிறாங்க. ஆனால், நீங்க உண்மையிலேயே ரசிக்கும்படி எழுதுறீங்க. அதுவும் கடைசியில ஒரு பஞ்ச் வச்சு முடிச்சிருக்கிறீங்க சூப்பர் பொஸ்.

    அவ்வப்போது அடிக்கடி உங்கள் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. அண்ணே நீங்களே சொல்லிட்டீங்க! ஜமாய்ச்சுடலாம்! உங்கள் பின்னூட்டத்துக்கும், தொடர்வுக்கும் மிக்க நன்றி! உங்களது பின்னூட்டம் எனக்கு பெரிய உற்சாகம்! அடிக்கடி வாருங்கள். எனக்கு நல்லா எழுத தான் வராது, மொக்கை ரொம்ப நல்லாவே போடுவேன் என்பதால், நீங்கள் காண்டாகாமல் இருப்பதற்கு நான் கியாரன்டி!

      Delete
  13. அட அந்த போட்டோவுல அப்படி என்ன இருக்கு பாஸ் நம்ம கமல் பண்னாததா

    ReplyDelete
  14. @pream kumar
    அட! எல்லாம் கால மாற்றம் தானே அண்ணே! கமல் அளவுக்கு இல்லன்னாலும் அதுல பாதியாவது பண்ணியிருகிற நம்ம பயல பாராட்ட வேணாமா? கமல் ஓய்ந்து போன பிறகு எவன் அந்த பணியை தொடர்வது? வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும் , அதிலும் எனது மொக்கை பதிவுகளை தொடர்வதற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...