உதைபந்து

Tuesday, October 16, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ்! ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு ஃபீல் குட் படம்!




தியேட்டர் போய் படம் பார்த்து நிறைய நாளாகிவிட்ட படியால் படம் ஒன்று பார்க்கலாம் என்று கடந்த திங்கட் கிழமை கிளம்பினேன். என்னால் தெரிவு செய்யப்பட்ட படம் தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். அந்த படத்துக்கு போனதற்கு மூன்று காரணங்கள். ஒன்று எனக்கு சமீபத்தில் இருந்த திரையரங்கான கொன்ங்கொட்டில் அந்த படம் ஓடியது, இரண்டு மாற்றான், தாண்டவம் தொடர்பில் எனக்கு கிடைத்த எச்சரிக்கைகள், மூன்று இது மிக முக்கியமானது அதாகப்பட்டது , படம் வெளிவருவதற்கு முன்னமே " ஆங்கிலம் தெரியாமல் ஒரு குடும்ப பெண் படும் அவஸ்தைகள்" என்ற ஒன்லைன். தக்காளி ! அரமேயம் தெரியல, உருது தெரியலன்னு எவனாவது அழுதானா? இந்த இங்கிலீஷுக்கு கொடி பிடிச்சு படம் மட்டும் இருந்தா ஸ்ரீதேவியை துவச்சு தொங்கப்போடுறது என்ற திட்டம் தான் மிக முக்கியமான முனைப்பாக இருந்தது.


சென்றேன் , பார்த்தேன் ஆனால் படம் என் எதிர் பார்ப்புக்கு மாறாக இருந்தது. இந்த வருடத்தின் தமிழ் சினிமாவை நம்பி நான் செலவழித்து ஏமாந்த பல நூறு ரூபாய்கள் போல் அல்லாமல் கொடுத்த காசுக்கு திருப்தியான , அதே நேரம் நிறைவான ஒரு படம். ஒளிப்பதிவு அப்படி, இசை அப்படி , எடிட்டிங் மொக்கை, நடிப்பு ஓக்கே என்று எழுத எனக்கு சுத்தமாய் விருப்பமில்லை. படம் முழுக்க நமக்கு மெச்செஜ் ஏதோ சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கயில் , படத்தின் தொழினுட்ப குறை நிறைகளை பற்றி யோசித்துக்கொண்டிருக்க நேரம் இருக்கவில்லை எனக்கு.


எங்கடா ஆங்கிலத்தின் புகழ் பாடி எனக்கு கடுப்பேத்தி விடுவார்களோ என்று பயந்துகொண்டிருக்க, அந்த மாதிரி ஒரு கதை களத்தை வைத்துக்கொண்டு  , இந்த நவீன இயந்திர உலகில் மாறிவரும் மனிதர்கள் மத்தியில் என்று மாறிவிடாத ஒரு பொறுப்பான குடும்ப தலைவியினதும் , பாசமான தாயினதும் பாசப்போராட்டத்தை சொல்லிப்போயிருப்பது படத்தின் பெரிய பலம்.


படம் வெளியாகி பலநாட்கள் ஆகிவிட்ட படியால் கதை களத்தை சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று நினைகிறேன். ஆங்கிலம் தெரியாமல் ஒரு குடுபத்தலைவி படும் பாடு என்ற ஒன்லைனை மட்டும் கௌதம் மேனனிடமோ ,முருகதாசிடமோ குடுத்திருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே பாத்திரங்களை பேசவிட்டு ஒரு எங்கிலிஷ் படம் எடுத்திருப்பார், இவர் எவனாவது துருக்கியனை காட்டி தமிழன் என்று உங்களுக்கு மிஸ்பா உல் ஹக் தமிழர் என்று தெரியுமா என்று அலப்பரையை கூட்டியிருப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் ஒரு குடுபத்தலைவியின் பாசப்போரட்டத்தை காட்டியிருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.


படத்தில் காட்டப்பட்டிருக்கும் பல விடயங்கள் யோசிக்கவைப்பவை, ஒரு பிள்ளையாக அம்மாவின் உணர்வுகளையும் , ஒரு பிஸியான கணவனாக தனது மனைவியின் உணர்வுகளையும் நம்மில் எத்தனை பேர் மதிக்கின்றோம்? எத்தனை பேர் அது பற்றி யோசிக்கின்றோம்? 


இந்த கால டீன் ஏஜ் பிள்ளைகளின் உலகத்தோடு ஒன்றித்துப் போய் அவர்களுடன் மேலும் நெருக்கமாக , பாசப்பிணைப்புடன் இருக்க ஏங்கும் தாயாக வரும் ஸ்ரீதேவின் ஏக்கம் தற்கால தாய்மார்களில் பலருக்கு இருப்பது நிதர்சனம். என்ன செய்தாவது தன் பிள்ளைகளோடு அன்னியோன்யத்தை பேண ஏங்கும் தாயின் உணர்வும், அதற்கு விலையாக அவமானத்தையும், அசட்டு தனத்தையும் மட்டுமே பரிசாக தரும் வாலிப வயதுகளையும் கண்கூடே அன்றாடம் காண்கின்றோம்.



முடிந்த வரை சுதந்திரம் கொடுப்பது, தனது பிள்ளையின் புகழை இன்னொருவர் பாடுகையில் புழங்காகிதம் அடைவது என ஸ்ரீதேவி இந்த கால நல்ல ஒரு தாயாக வாழ்ந்திருக்கிறார்.


மனைவி என்ன் யோசிக்கிறாள்? அவளது உணர்வுகள் என்ன ? என்பது பற்றி அறியாமல் வேலையே சரணம் என்று கிடக்கும் கணவ்ன்களை யோசிக்க வைக்கின்ற ஒரு படம். இந்த காலத்தில் காதலித்து கல்யாணம் செய்துகொண்டவுடன் பல ஆண்கள் காதலிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பொருள் ஈட்டினால் போதும் என்ற அவர்களது மனநிலையில் , அன்புக்காகவும், சரியான மரியாதை + கரிசனைக்காக ஏங்கும் ஒரு மனைவியின் நிலைமை நிதர்சனமாக காட்டப்பட்டிருக்கிறது.


"முக்கியமான மீட்டிங் வந்திருது" என்ற கணவனின் பதிலுக்கு "இப்பெல்லாம் நான் முக்கியமில்லாம போய்ட்டன் இல்ல" என்ற பதில் சாட்டயடி. அது போல சக பெண் தோழியை தோழமையுடன் கட்டிப்பிடித்த கணவனை செல்லமாக அதட்டும் போது " அது ஒரு அன்னியோன்ய கட்டிப்பிடிப்பு தான் வேற ஒண்டும் கிடையாது" என்று கணவன் சொல்ல "நாம ரொம்ப அன்னியோன்யமா இருக்கிறோமோ? அது தான் என்னை கட்டிப்பிடிப்பதில்லையா? " என்ற ஸ்ரீதேவியின் நியாயமான கேள்விக்கு இங்கே பதில் சொல்ல வேண்டிய நிலையில் நிறைய கணவன்கள் இருக்கிறார்கள்.


மனைவியை பாராட்டுவதையே நம்மாளுகள் ஒரு ஈகோவாக நினைத்து , பிறகு மனைவியின் உண்மையான அன்புகும் கரிசனைக்கும் மரியாதை கொடுக்காமல் அவளை ஒரு வேலைக்கார இயந்திரமாக நினைத்து காதலை கோட்டை விட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்த இடத்தில் தான் வெள்ளைக்காரன் சிக்ஸர் அடித்துவிட்டு போகிறான். ஸ்ரீதேவின் கணவனும் ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்பு தோழனாக வரும் பிரஞ்சுக்காரனும் இந்த இரண்டு பாத்திரங்களின் தக்க உதாரணங்கள்.


ஸ்ரீதேவின் ஆங்கில வகுப்பு கலகலப்பு, அந்த வகுப்பிலுள்ள ஒவ்வொரு பாத்திரமும் கொஞ்ச நேரமே காட்டப்பட்டாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலுமுள்ள மனிதர்களை பேசுகிறது. அதிலும் அந்த ஆபிரிக்கன் " நானும் ஒரு gay தான் " என்னும் இடம் எந்த வித உறுத்தலுமே இல்லாமல் மனதுக்குள் போய்விடுகிறது. ( உலகம் வளந்திட்டுதோ?)


தன் பிள்ளைகளிடம் நல்ல பேர் வாங்க ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் ஸ்ரீதேவி அதுவே தன்னை குடும்பத்திடமிருந்து தூர கொண்டுபோகிறது என தெளியும் போது  மனம் வருந்து ஆங்கில வகுப்பை துறப்பது தாயுள்ளம்.


தல அஜித் வரும் அந்த மூன்று நிமிட காட்சியும் சொல்லி மாளாது, பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. அவ்ளோ அருமை, கலகலப்பு. 


"அமேரிக்காவை காப்பாத்த வந்திருக்கேன்" ," இந்த இங்கீஷை பாத்து பயப்பிட வேண்டாம்" இப்படியாக தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்.



காட்சிக்கு காட்சி கவிதை, அனைத்து நடிகர்களினதும் கைதேர்ந்த நடிப்பு சொல்லவருவதை தெளிவாக சொல்வதற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக அந்த சுட்டி பையன், ஸ்ரீதேவியின் மாமி, மௌனுமாகவே காதல் மொழி பேசும் அந்த பிரஞ்சுக்காரர் உட்பட அனைவருமே கைதேர்ந்த நடிப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.


படத்தில் மூன்று துருத்தல்கள்.

ஒன்று ; ஸ்ரீதேவியின் மூக்கு. இவவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, நல்லாத்தானே இருந்திச்சு, முகத்துக்கும் மூக்குக்கும் சம்மந்தமே கிடையாது, ரெண்டும் வேறு வேறு திசைகளில் நிற்கின்றன. ( விருது நாயகன் மைந்தன் அவர்களே மன்னித்து அருள்க!)


இரண்டாவது : எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே நம்மாளுகள் பின்பற்றும் பாணி, அதாவது தான் படித்தவன் என்று காட்டிக்கொள்வதற்கோ அல்லது தனது இமேஜை உயர்வாக காட்டிக்கொள்வதற்கோ ஆங்கிலத்தில் பீத்தியடிப்பது. அதே கதை தான் இங்கேயும் தனது பிள்ளைக்கும், கணவனுக்கும்  ஆங்கிலத்தில் பேசித்தான் அன்பை புரிய வைக்கிறார் ஸ்ரீதேவி. அப்போ ஆங்கிலத்துக்காகத்தான் அவர்கள் இவரை நேசிப்பார்களா? ஆக மொத்தம் இவர்களுக்காக விழுந்து விழுந்து எவ்வளவோ செய்தும் ஆங்கிலத்தில் பேசியதும் அன்பு வந்து விடுகிறமாதிரி காட்டப்படிருப்பது .. ரொம்ப ச்சாரி.......  ( ஆங்கிலப்படங்களில் இப்படியொரு கதை காட்டப்பட்டிருப்பின் கடைசிவரைக்கும் அவர் ஆங்கிலம் கற்காமலே இருப்பார் , ஆனால் அந்த முயர்சியின் போது ஏற்படுகின்ற பாசத்தில் அவர்கள் குடும்பம் அவர்களை நேசிப்பது போல் காட்டப்பட்டிருக்கும். அப்படியான  உதாரணம் : டியர் ஜோன், லையர் லையர் )


மூன்றாவது : திருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி?


என்ன இருந்தாலும் அனைவரும் கட்டாயம் குடும்பத்துடன் , குறிப்பாக பிஸியான கணவன்கள் மனைவியுடனும் , டீன் ஏஜ் வயதினர் தங்கள் அம்மாவுடனும் இருந்து பார்க்க வேண்டிய அருமையான படம். 
**************************************************************************

மரணம் துரத்துகிறது : அதாகப்பட்டது , ஹாரியின் யுத்தம் ஆரம்பம் தொடரின் அடுத்த பாகத்தை நான் தான் எழுதுகிறேன். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. முற்றாக முடிந்ததும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். சாவதற்கு தயாராய் இருக்கவும்.







18 comments:

  1. //திருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி?//

    அதுக்கும் முன்னாடி காஃபி ஹாப்பில் திக்காமல் திணறாமல், லென்தியா ஆர்டர் பண்ணுவது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. அது ஓர்டர் பண்ற மேட்டர் தானேன்னு நான் கூட கண்டுக்காம விட்டுட்டேன். இப்போ நீங்க சொல்லும் போது தான் உறைக்குது,... அட ... ஆமால்ல.....

      Delete
  2. JZ வியாழன், நான் சனி, நீர் திங்கள் ... ஆக நடுவுல ஒரு நாள் கேப்பில மூணு பேரும் கொன்கோர்ட்ல படத்தைப் பாத்திருக்கோம்.

    ReplyDelete
    Replies
    1. அட இனிமேலாவது சொல்லிட்டு போங்கப்பா.. நாங்களும் வருவோம்ல...

      Delete
  3. என்னா? ரெண்டு பேரும் ஒன்னா போயி படம் பார்த்தீங்கலோ? ரெண்டுலயும் ஒரே பட விமர்சனம்.. படம் நல்லாருக்குன்னுதான் எல்லாரும் சொல்றீங்க, ஆனா இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்கல.. ஆமா அது என்னாது பிரபல பதிவர்கள் மாதிரி மூணு துருத்தல்கள்?

    ReplyDelete
    Replies
    1. //பிரபல பதிவர்கள் மாதிரி//
      மாதிரியெல்லாம் இல்ல .. பி.பதிவரே தான். :)

      Delete
    2. படம் உண்மையிலயே நல்லாருக்கு தலீவா.... சமீபத்தைய கர்ண கொடூர மொக்கைகளில் இது தேறிய படம். முடிஞ்சா கட்டாயம் பாத்திருங்க.

      //// ஆமா அது என்னாது பிரபல பதிவர்கள் மாதிரி மூணு துருத்தல்கள்?////

      அதுவா... ஒரு படத்தில மைனசும் இருக்ம்ல.. அத சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லியா.. அது தான். துருத்தல் என்று தலைப்பிட காரணம் துருத்திக்கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் மூக்குத்தான்.

      Delete
    3. /// பி.பதிவரே தான். :)///

      அது என்னாது அசிங்கமா?

      Delete
    4. //பி.பதிவரே//

      இது அது இல்ல

      Delete
    5. வாங்க ஐயா! அதுவா இருக்குமோன்னு பயந்துடேன். நம்மாளுகள நம்ப முடியாதப்பா....

      Delete
    6. //அதுவா... ஒரு படத்தில மைனசும் இருக்ம்ல.. அத சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லியா..////

      அடக்கடவுளே.. விட்டா இவனுக டைரக்டர்க்கே திரைக்கதையில் அட்வைஸ் சொல்லுவானுங்க.. (அய்யய்யோ நான் எந்த பீ.பதிவரையும் குறிப்பிட்டு சொல்லலீங்கோ)

      Delete
    7. அதாகப்பட்டது பி.பதிவர்களாக இருக்கக்கூடிய நாமெல்லாம் இந்த ஒண்ணுமே தெரியாத டைரக்டர்ங்களுக்கு ஏதவது சொல்லித்தரணும். ஏதோ நம்மால முடிஞ்சதா இருக்கட்டுமே!

      Delete

  4. 2012 தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் மொக்கை படங்களுக்கு மத்தியில் நல்ல படத்துக்கு ஒரு உதாரணம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ...

    அஜித்-ஐ ரசிக்கிறேன் அஜித் ரசிகனை எதிர்க்கிறேன்...
    http://multistarwilu.blogspot.in/2012/10/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் இது போன்ற படங்கள் வெற்றியடைய வேண்டும். ரொம்ப நாளுக்கு அப்புறம் பதிவு போட்டிருக்கீங்க போல‌

      Delete
  5. சூப்பர் மாமா.. எல்லாரும் போட்டி போட்டு பாராட்டுறீங்க.. .. பார்த்துடலாம்.. DVD வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாத்திருங்க...... அப்புறம் உங்க கதை ரெடியாகிட்டிருக்கு.

      Delete
  6. //ஸ்ரீதேவியின் மூக்கு. இவவுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை//
    உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை.. படத்தை பார்ப்போமா? அத விட்டுட்டு மூக்கிலேயே முழி வைத்துக்கொண்டு..

    படத்தை நல்லா அனுபவிச்சுத்தான் பார்த்திருக்க தல.. எழுத்தே காட்டிக் கொடுக்குது!

    ReplyDelete
    Replies
    1. அது சரி தான் தல! ஆனாலும் சொல்லாம இருக்கமுடியல. எனக்கு ஸ்ரீதேவியை ரொம்ப பிடிக்கும், ஆனால் அந்த மூக்கு ஓப்பிரேஷனுக்கு அப்புறமா , ஏதோ அந்நியப்பட்டு போன மாதிரி ஒரு ஃபீலிங்கு. ஆனாலும் எனக்கு சொல்லாம , என்னய விட்டிட்டு எனக்கு முதலே படம் பாத்திட்டு வந்ததற்கு கடும் கண்டணங்கள்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...