உதைபந்து

Monday, December 31, 2012

கமல் எடுத்திருப்பது விஸ்வரூபமா? பஸ்பரூபமா?.





கீழே உள்ள தகவல் உலகநாயகனின் "விஸ்பரூபத்தின்" ரிலீஸ் ஆகாத நிலையிலான வசூல் பற்றி ஃபேஸ்புக்கில் நான் படித்த செய்தியொன்று.

300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

1000
ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை " 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.

நேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50 லட்சன் பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........

 நன்றி : ஃபேஸ்புக்

******************

இப்போது இந்த வசூல் மேட்டர் , அப்புறம் படம் ரிலீசுக்கு பின்னால் எந்திரன் , சிவாஜி வசூலுடன் ஒப்பீடுகள் என்று வரப்போகும் அளப்பரைகளை சிந்திக்காமல் , விஸ்வரூபம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமுகத்தை காட்ட நினைக்கும் கமலின் சிந்தனை தொடர்பில் ஒரு பார்வை பார்க்கலாம்.


விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முன்னெல்லாம் ஒரு திரைப்படம் எத்தனை தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது, எத்தனை பிரிண்ட் போடப்படுகிறது, எத்தனை நாடுகளில் திரையிடப்படுகிறது என்ற கேள்விகளே ஒலிக்கும். ஆனால் இனிமேல் எந்தெந்த டி.ரி.ஹெச்சில் ஒலிபரப்பாகிறது என்றெ கேள்வியையும் கூட சேர்த்து கேட்கபட வேண்டிய ஒரு அவசியத்திற்கு தமிழ் சினிமாவை உந்த முனைகிறார் உலக நாயகன்.


ஜனவரி 11 , 2013இல் உலகமெங்கும் திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியாகவுள்ள‌ நிலையில், அதற்கு முந்திய நாளானா ஜனவரி 10 அன்று இந்தியாவின் பிரதான டி.ரி.ஹெச்களான "டிஷ் ரீவி, சன் டிரக்ட், வீடியோகேன், ஏர்டெல், ரிலயன்ஸ்" ஆகிய டி.ரி.ஹெச்களில் இந்திய நேரப்படி காலை 9.30க்கு விஸ்வரூபம் ஒளிபரப்பாகிறது.


இது வழமை போலவே சாதக , பாதக அலைகளை கிள‌ப்பிவிட்டிருக்கிறது. 



ஒரு திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் என்பது பொழுதுபோக்கிற்கு மேலாக ஒரு படத்தின் வெற்றியை கணிக்க கால காலமாக பயன்பட்டுக்கொன்டு வருகிறது. ஒரு தியேட்டரில் படம் எத்தனை நாள் ஓடுகிறது? எத்தனை ரூபாய்களை அது வசூலித்தது என்பதன் அடிபடையிலேயே இதுவரை காலமும் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்திலும் ஒரு படத்தின் வெற்றி கணிக்கப்பட்டுவந்தது, வருகிறது. இது கலைஞானி கமல் அறியாதது இல்லை. அப்படி அறிந்திருந்தும் இந்த மாதிரியான ஒரு தொழினுட்ப பரீட்சையில் கமல் இறங்கியிருக்க எனக்கு தெரிந்து இரண்டு காரணங்கள் தான் இருக்க வேண்டும் . ஒன்று கமல் , தனது படங்கள் எத்தனை நாட்களை கடந்து ஓடுகிறது, எத்தனை ரூபாய்களை ஈட்டியது என்பது குறித்து அலட்டிகொள்பவ‌ர் கிடையாது, இரண்டாவது தமிழ் சினிமாவிக்குள் எப்படியாவது புதிய தொழிநுட்பங்களை, புதிய அனுகுமுறைகளை கொண்டுவந்துவிட வேன்டுமென்ற அவரது வெறி.


கமலின் இந்த முற்போக்குத்தனம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த முற்போக்குத்தனம் இந்திய திரைப்பட உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் உணர்வுகள் நிச்சயம் கமல் ரசிக்கும்படியாய் இல்லை என்பதே உண்மை. கமலின் இந்த முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையள‌ர்களில் ஒரு சாரார்.


அவர்களது வாதம் என்னவெனில் ரிலீசுக்கு முன்னதாக சின்னத்திரையில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் தொகை குறைந்து, தமது தொழில் பாதிப்படையும் என்பதே. இந்த வாதம் ஒருவகையில் நியாயமாகவே படுகிறது. 


ரஜினி கமல் தவிர அனைத்து நடிகர்களுக்கும் தம‌து படத்தை நூறு நாள் ஒரு திரையில் ஓட்டிக்காட்டித்தான் தம்மை ஒரு வெற்றியாளன் என்று காட்டவேண்டிய அவசியம்இருக்கின்ற போதும் ,தமிழ் சினிமாவில் எப்போதோ வேரூன்றிவிட்ட கமலுக்கு  அந்த அவசியம் இப்போது இல்லை. இப்போது தான் விஸ்வரூபத்தில் போட்ட முதலை எந்த வழியிலாவது லாபத்துடன் எடுத்துவிட்டால் போதும் கமலுக்கு. படம் திரையரங்கில் எத்தனை நாள் ஓடினாலும் அவர் அலட்டிக்கொள்ளப்போவதில்லை, அது அவரது புகழை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. ஆனால் கமல் அதற்குத்தான் ஆசைப்படுகிறாரா?


தியேட்டர்க்காரர்களின் இருபிரதான வாதத்திற்கு வருவோம். ஒன்று தியேட்டருக்கு வரும் ரசிகர் தொகை குறையும், இன்னொன்று திருட்டு வி.சி.டி தொழில் அமோகமாகி தமது தொழில் இன்னமும் மோசமாகிவிடும். இந்த பிரதான இருபயங்களில் நியாயம் இருப்பது போல் பட்டாலும் , என்னைக்கேட்டால் கமலின் இந்த முடிவால் புதிதாக எந்த பாதகமான மாற்ற‌மும் வந்துவிடப்போவதில்லை என்பது தான். 


முதலில் தியேட்டருக்கு வரும் மக்கள் தொகை குறையும் என்ற குற்றச்சாட்டை பார்க்கலாம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்காக மட்டும் பார்க்கப்படுவதில்லை. ரசிகனுக்கு அந்த இடம் ஒரு கோவிலாக இருக்கிறது, ஒரு குடும்பஸ்தனுக்கு தியேட்டர் செல்வது என்பது பீச், பார், இரவு உணவுக்கு ஏதும் ஹோட்டல் செல்வது போல தனது குடும்பத்துடன் வெளியில் செல்லும் ஒரு அனுபவமாக இருக்கிறது, நண்பர்கள் வட்டத்தில் தியேட்டர் ஒரு ஒன்று கூடும் உற்சாக தளம் . இப்படியாக தமிழ் நாட்டிலும் சரி தமிழர் வாழும் பிரதேசங்களிலும் சரி தியேட்டர் என்பது திரைப்படம் காட்டப்படும் தளம் என்பதற்கு மேலாக , மக்களது வெகுசன வாழ்வியலோடு ஒன்றித்துப் போன ஒரு பொழுதுபோக்கு தளமாக மாறியிருக்கிறது.


ஆக இந்த டி.டி.ஹெச் திட்டமானது , தமிழ் ரசிகர்களின் அந்த தியேட்டர் பாரம்பரியத்தை ஒன்றும் குலைத்துப்போடுவதற்கில்லை. அதனால் தியேட்டர் வரும் மக்கள் தொகையும் குறைந்துவிடப்போவதில்லை.




அத்தோடு இம்மாதிரியான ஒரு எதிர்பார்ப்பைக் கிளறியிருக்கும் இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கே மக்கள் கூட்டமும் அலைமோதும். படத்தின் வி.ஐ.பி ஷோக்களை பார்த்த பிரபலங்கள் புகழ்வது போல் விச்பரூபம் நிஜமாகவே உலக சினிமா தரத்தில் இருக்கும் பட்சத்தில் சின்னத்திரையில் பார்த்தவன் கூட அந்த பிரம்மான்டத்தை வெள்ளித்திரையில் காண அடுத்தநாள் திரையரங்கிற்கு விரையப்போவதும் உறுதி.


திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக கவலை தெரிவிப்போரின் திரையரங்குகள் விஸ்வரூபம் படத்திற்கு முன்பிருந்தே அதே நிலையிலேயே இருக்கும் திரையரங்குகளாகத் தான் இருக்க வேண்டும். சரியான பராமரிப்பு இன்மையால் தமது திரையரங்கை மூடும் நிலையில் உள்ளோர் விஸ்வரூபம் மீது குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது.


யாரெல்லாம் இந்த படத்தை டி.டியில் பார்க்கப்போகிறார்கள் ?சில சோம்பேறிஸ் , சில பணக்காரர்கள் ( சந்தானம் சொல்வது போல் விசில் அடிக்காத, அழாத, சிரிக்காத கூட்டம்), சில வயதானவர்கள், சில அங்கவீனர்கள், சில நேரம்கிடைக்காதவர்கள், சில நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க விரும்பாதவர்கள் . இவ்வாறாக வழமையாகவே ஒரிஜினல் டி.வி.டி கிடைக்கும் வரை காத்திருந்து வீட்டு ஹோம் தியேட்டரில் படம் பார்க்கும் கூட்டமே இந்த படத்தை டி.டி.ஹெசில் பார்க்கப்போகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் பயப்படுமளவிற்கு பாதகங்கள் வந்துவிடப்போவதில்லை என்பதே என் எண்ணம்.


அடுத்து திருட்டு வி.சி.டி  தொடர்பில் ஊதப்படும் அபாய சங்கு பற்றி பார்க்கலாம். விஸ்வரூபம் மட்டுமல்ல , எப்போது வி.சி.டி கலாச்சாரம் உருவெடுத்ததோ அப்போதிருந்தே ஒவ்வொரு படத்திற்கும் இந்த அபாயம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. படத்தின் தயாரிப்பு + விநியோக தரப்பு சம்பாதிக்கும் இலாபத்திற்கு நிகரான இலாபத்தை இந்த கும்பல் காலாகாலமாக சம்பாதித்துக்கொண்டே வருகிறது. இது விஸ்வருரூபத்திற்கு முன்பிருந்தே நடைமுறையிலிருக்கும் ஒரு அபாயம். ஏதோ டி.டி.ஹெச் மூலம் ரிலீஸ் செய்யப்படுவதால் விஸ்வரூபம் தான் திருட்டு வி.சி.டி அபாயத்திற்கு உள்ளாகப்போகும் முதல் தமிழ் படம் என்ற ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்படுவது கொஞ்சம் மிகையாக இருக்கிறது.


நீங்கள் கேட்கலாம் , விஸ்வரூபம் டி.டி.ஹெச்சில் வருவதனால் தியேட்டர் ரிலீசுக்கு முதல் நாளே தெள்ள‌த்தெளிவான ஒரிஜினல் பிரதியான வி.சி.டிக்கள் சந்தையில் வந்துவிடுமென்று. இங்கு தான் கமல் தியேட்டர்காரர்களை காக்கும் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அதாவது திரைப்படம் ஒளிபரப்பாகப்போகும் அந்த ஐந்து டி.டி.ஹெச் நிறுவனத்தினரிடமிருந்தும், விஸ்வரூபம் ஒளிபரப்பாகும் போது  பி.வி.ஆர் ( பிரைவேட் வீடியோ ரெக்கார்டிங் ) செயற்படுத்தப்படாமல் இருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த டி.டி.ஹெச் களில் படம் ஓடும் போது அதனை யாரும் அப்படியே ரெக்கார்ட் செய்யமுடியாது. இந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்ததாலேயே 'டா டா ஸ்கைக்கு"  விஸ்வரூபத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமம் கொடுக்கப்படவில்லை. தவிர விஸ்வரூபம் ஒளிபரப்பாகும் போது இடையில் எந்த வர்த்தக விளம்பரங்கள் ஒளிபரப்பவும் கமல் தடை விதித்துள்ளார்.




அதற்காக திருட்டு வி.சி.டி வெளிவாராது என்று அர்த்தம் கிடையாது. வழமை போலவே அதுவும் வரத்தான் போகிரது. ஆனால் இந்த டி.டி.ஹெச்சை வைத்துக்கொண்டு , திருட்டு வி.சி.டியும் ஏதோ மேம்பட்ட தொழிநுட்பத்தில் வரப்போகிறது என்கிற மாதிரியான வாதங்களை தான் ஏற்றுக்கொள்லமுடியாது. சிலர் இருக்கிறார்கள் அது புளூ ரேயாக இருந்தாலும் சரி , என்ன நடக்கிறது தெரியாத அளவுக்கு மோசமாக இருக்கும் வி.சி.டியாக இருந்தாலும் தவமிருந்து திருட்டு வி.சி.டியிலே பார்ப்பவர்கள். இவர்களை எந்த தொழிநுட்பமும் திருத்திவிட முடியாது, அவர்களாக திருந்தினால் ஒழிய.


மேற்சொன்னவாறு இந்த டி.டி.ஹெச் தொழிநுட்பம் மூலம் விஸ்வரூபம் படமானது ரிலீச் செய்யப்படுவதனால் எந்த தரப்பினரும் தமது கையை சுட்டுக்கொள்ப்போவதில்லை என சொல்லத்தெரிந்த எனக்கு , இந்த முறையில் படம் ரிலீஸ் செய்யப்படுவதால் எவ்வாறான நன்மைகள் அடுத்தகட்ட சினிமாவுக்குள் நுழையப்போகிறது என்பது பற்றி சரியாக கணித்து சொல்லத்தெரியவில்லை.


ஆனால் இந்த தொழிநுட்பத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குள் கமல் கொன்டுசெல்கிறார் என்பது மட்டும் உறுதி. இப்போது எதிர்ப்பு மழை பொழியும் இந்த திட்டத்தால் , எதிர் காலத்தில் தமிழ் சினிமாவில் இந்த டி.டி.ஹெச் தொழிநுட்பம் சார்ந்த வேலைவாய்ப்பு புரட்சிகள் ஏற்பட காரணமாக அமையலாம்.


சினிமா என்பது தியேட்டரோடு மட்டும் சம்மந்தப்பட்டது என்று எந்த விதியும் கிடையாது. ஆரம்பகால தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மக்களை சென்றடைய வேறு ஊடகங்கள் இல்லாத படியால் தியேட்டர்கள் அந்த இடத்தை பிடித்துக்கொன்டு கோலோச்சின. ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ந்து வெகுசன ஊடகங்களையும் வளர்த்துவிட்டிருக்கிறபடியால் , தமிழ் சினிமா அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகிறது. இதனை தடுப்பது ஒரு வகையில் தமிழ் சினிமாவுக்கு செய்யும் துரோகம் என்று ஆகிவிடும்.


கொஞ்சம் ராவாக சொல்லப்போனால் , ஒரு முதலீட்டாளர்களாக தமது தொழில் பாதிக்கும் என ஆதங்கப்படும் தியேட்டர் உரிமையாள‌ர்கள், ஒரு வியாபாரியாக தனது வியாபாரத்தை எந்த ரூபத்தில் செய்யவும் கமலுக்கு உரிமை உண்டு , அதனை தடுப்பது சட்டப்படி குற்றமாகிறது. 




எது எப்படியாக இருப்பினும் தமிழ் சினிமாவின் பாரம்பரியமான தியேட்டர் கலாசாரத்தை திட்டமிட்டு குலைக்கும் நோக்கில் கமல் இந்த ஏற்பாட்டை செய்யவில்லை என்றும், காலத்தின் பரிமாண‌த்தில் இதுவும் கடக்கவேண்டிய ஒரு பாதை என்றும், இதனால் தியேட்டர் கலாசாரம் எவ்வகையிலும் குன்றிப்போகாது என்றும் சகல தரப்பினரும் புரிந்து கொள்வதே ஆரோக்கியமாக இருக்கும்.


இத்தனை எதிர்ப்பினையும் மீறி கமல் ஏன் இதனை கையிலெடுக்கிறார்? தமிழ் சினிமா அடுத்தடுத்த விஞ்ஞான வளர்ச்சிகளில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேன்டுமென்ற அவரது வெறிதான் வேறென்ன. இல்லாவிடில் சுமார் நூறுகோடிகளை கொட்டிவிட்டு கத்திமேல் நடப்பது போன்ற காரியத்தை அவர் ஏன் செய்ய வேண்டும்?


முதன் முதலாக சூரியனைசுற்றித்தான் பூமி சுழல்கிறது என்று கலிலியோ சொன்னபோது கத்தோலிக்க திருச்சபையும் பாப்பாண்டவரும் கலிலியோவுக்கு விஷ‌ம் கொடுத்து கொலை செய்தனர்.....


முதன் முதலில் ரயில் வந்தபோது மக்கள் அதனை பேய் என்று சொல்லி தெறித்து ஓடினர்.....


முதல் சினிமாவில் திரையூடாக ரயில் வருவது போல காட்டப்பட்டபோது, அந்த ரயில் தம்மை நசுக்க வருவதாக எண்ணி மக்கள் தியேட்டரை விட்டு எழுந்து ஓடினர்...


முதன் முதலில் ஒலியுடன் படங்கள் தயாரிக்கப்பட்டபோது சாப்ளின் முதலான மேதைகளை அதனை எதிர்த்தனர்....


முதன் முதலில் கலர் டி.விக்கள் நடைமுறைக்கு வந்தபோது அது கண்ணுக்கு கெடுதல் என்று மக்கள் அதனை தவிர்த்தனர்..


முதன் முதலில் மார்புக்கச்சைகள் நடைமுறைக்கு வந்தபோது விபச்சாரிகள் மட்டும் தான் அதனை அணிவர் என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவானது.....


 முதன் முதலில் தமிழ் சினிமாவில் டி.டி.ஹெச்........... 



டிஸ்கி : சத்தமேயில்லாமல் வளர்கிறது விஸ்வரூபம் பாகம் இரண்டு.


28 comments:

  1. இத்தனை எதிர்ப்பினையும் மீறி கமல் ஏன் இதனை கையிலெடுக்கிறார்? தமிழ் சினிமா அடுத்தடுத்த விஞ்ஞான வளர்ச்சிகளில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேன்டுமென்ற அவரது வெறிதான் வேறென்ன. இல்லாவிடில் சுமார் நூறுகோடிகளை கொட்டிவிட்டு கத்திமேல் நடப்பது போன்ற காரியத்தை அவர் ஏன் செய்ய வேண்டும்?////////////////////////// தம்பி சூப்பர் அருமையா சொல்லி இருக்கீங்க புரிந்தவர்கள் எதிர்க்க மாட்டார்கள் தியேட்டர் வருமானம் குறையும் என்பவர்கள் தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் எல்லாம் சரியாக அமையும் அத செய்ய மாட்டாங்க இறுதியாக ஒரு படம் போட்டு இருந்திங்களே சூப்பர் சூப்பர் சூப்பர் சும்மா பல பலனு இருக்கு தம்பி

    ReplyDelete
    Replies
    1. கட்டணத்தை எல்லாம் குறைக்க வேண்டாம். திரையரங்குகள் தரமாக இருந்தாலே போதுமே....

      ////இறுதியாக ஒரு படம் போட்டு இருந்திங்களே சூப்பர் சூப்பர் சூப்பர் சும்மா பல பலனு இருக்கு தம்பி///

      அடப்பாவிகளா... ஒலக நாயகனோட படங்கள் எத்தனையோ போட்டிருக்கேன், அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியல , உங்களுக்கு பள பளப்பு கேக்குது...

      Delete
    2. nee kedpiyae aendaa apdi eluthuraai enru intha maathiriyaana aadkalukkaakaththaan naan apdi eluthuranaan... vaanka bass namma blog ku vaanka ipdi pala matter irukku....

      Delete
  2. அண்ணே ரொப்ப நல்ல இருக்கு படம்; இது தான் //// டி.டி.ஹெச்...........? ////

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு டி.ரி.ஹெச் (டிரெக்ட் டூ ஹோம்) என்றால் என்ன என்று தெரியாதா அல்லது வேறு சந்தேகமா?

      Delete
  3. புத்தாண்டு வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா!

      Delete
  4. //நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது //

    ஏர்டெல் அறிவிப்பு பற்றிய செய்திக்கான சுட்டி கொடுக்க முடியுமா?


    ஆள் ஆளுக்கு கதையை அவுத்து உடுறாங்கப்பா, கேட்கிறவன் கேணையா இருந்தா கே.ஆர்.விஜயா பேத்தி தான் கேட்வின்ஸ்லெட்னு சொல்லுவாய்ங்க போல :-))

    ReplyDelete
    Replies
    1. ஃபேஸ்புக்கில் வழங்கபட்டிருந்த ஏர்டெல் தொடர்பான செய்தியின் உண்மைத்தன்மை பற்றி சோதிக்க நானும் கூகிள் பண்ணித்தான் பார்த்தேன், ஆனால் எத்தனை பதிவுகள் இடம்பெறிருக்கிறது என்று சரியான தகவலை பெற முடியவில்லை. ஆனால் ஒரு பதிவுக்கான கடணம் 1000 என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. இந்தியர்களின் சினிமா மோகத்தை வைத்துப்பார்க்கும் போது இந்த 30 லட்சம் பதிவுகள் சாத்தியம் என்றே தோன்றுகிறது, ஏர்டெல்லில் தனியாக அல்ல , மொத்த ஐந்து டி.ரி.ஹெச்சிலும் சேர்த்தாவது.... அப்படி பார்க்கப்போனாலும் கமலின் காசு இப்போதே அவர் கைகளில் லபத்துடன் வந்திருகும் என்றே நானும் நம்புகிறேன்....

      அப்புறம் கேட்வின்ஸ்லெட் கே.பி . சுந்தராம்பாள் பேத்திகிடையதா? :))

      Delete
  5. மகிழ்வான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புதுவருட பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரா!

      *நிறைய தளங்களில் நீங்கள் தொங்கிக்கொன்டிருந்து பார்த்திருக்கிறேன், இப்போது தான் என் தளத்தின் சுவரில் பார்க்கிறேன், உங்களது வருகைக்கு மிக்க நன்றி சகோ!

      Delete
  6. சமீபத்தில் தமிழ் சினிமாவில் பரப்பரப்பாக பேசிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம் ரிலீஸ் பற்றிய விஷயங்களை ஞாயமான கருத்துக்களோடு பகிர்ந்து இருக்கீங்க.படிக்க நல்லாருக்கு.நாளைய சினிமாவின் சாதனைகள் யாவும் இன்றைய சினிமாவின் முயற்சிகளே..புதுப்புது சினிமாவின் வளர்ச்சிகளை மனதைப் பக்குவப்படுத்தி வரவேற்க்க வேண்டுமே தவிர குறைக்கூறி கொண்டிருப்பது சரியாகாது.நல்லப்பதிவு.தொடருங்கள்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் உங்களது ஆதரவனா பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள்..நண்பா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக!

      Delete
  8. கிசோகர்!சொல்லிய விதம் ரசிக்கும் படியாக!

    படத்தயாரிப்பாளர்களுக்கு லாபம் என்ற ஒரே காரணமே உள்ளது.கமலுக்கு லாபம்,புது முயற்சி,பரிசோதனை,தொழில்நுட்பம் என்ற பல காரணங்கள் உள்ளன.

    பதிவுலகில் இந்த வருடத்தின் எனது முதல் புத்தாண்டு வாழ்த்து இந்த பதிவுடன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை என் நண்பன் கோபாசுவின் தளத்தில் பார்த்திருக்கிறேன், உங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோதரா!

      உங்களுக்கும் இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

      Delete
  9. இவன் யாருப்பா.. எந்த நேரத்துல பதிவு போடுறதுன்னு புரியாம?? HAPPY 2013!!

    மேலே கொடுத்த முன்பதிவுத்தகவல் வாசிச்சா காதுலேர்ந்து புகைமட்டும் தான் வருது.. பட் ஆர்ட்டிக்கிள் டு குட்! கடைசி பன்ச், பன்ச்சா இழுத்துக்கிட்டு வந்து ஃபோட்டோவுல முடிக்கிறதுல்லாம்... ஹும்.. என்னா ஒரு ராஜதந்திரம்!!

    ReplyDelete
    Replies
    1. உனக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தல!

      மேலே ஒரு நன்பருக்கு கொடுத்த பதிலையே இங்கும் தருகிறேன். ஃபேஸ்புக்கில் வழங்கபட்டிருந்த ஏர்டெல் தொடர்பான செய்தியின் உண்மைத்தன்மை பற்றி சோதிக்க நானும் கூகிள் பண்ணித்தான் பார்த்தேன், ஆனால் எத்தனை பதிவுகள் இடம்பெறிருக்கிறது என்று சரியான தகவலை பெற முடியவில்லை. ஆனால் ஒரு பதிவுக்கான கடணம் 1000 என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. இந்தியர்களின் சினிமா மோகத்தை வைத்துப்பார்க்கும் போது இந்த 30 லட்சம் பதிவுகள் சாத்தியம் என்றே தோன்றுகிறது, ஏர்டெல்லில் தனியாக அல்ல , மொத்த ஐந்து டி.ரி.ஹெச்சிலும் சேர்த்தாவது.... அப்படி பார்க்கப்போனாலும் கமலின் காசு இப்போதே அவர் கைகளில் லபத்துடன் வந்திருகும் என்றே நானும் நம்புகிறேன்....

      ///என்னா ஒரு ராஜதந்திரம்!!////

      நமது ராஜதந்திரம் உலகறிந்தது தானே!

      Delete
  10. இஸ்லாமிய பெயரைக் கொண்ட கமல ஹாசன், இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் டிடிஹெச்சில் முதலில் வெளியிடுகின்றார்.

    போட்ட காசை எடுக்க இதுபோன்ற ஒரு பொழப்பு.

    நேற்றுவரை இதே திரையரங்குகளால் மட்டுமே கோவணத்தில் அலைந்த கமல ஹாசன் ஜட்டியுடன் திரிகின்றார். அந்தத் திரையரங்குகள் இல்லாவிட்டால் இந்த கமல ஹாசன் அம்மணமாக நடுரோட்டில் இருந்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமியரின் என்ன எதிர்ப்பு? அது தான் தனது படத்தில் இஸ்லாத்தை எந்தவகையிலும் காயப்படுத்தும் எந்த சமாச்சாரமும் இல்லை என்று கமல் உறுதியளித்திருக்கிறாரே....

      அதுபோக நடிகனாக கமல் தொழில் செய்தார், அதை வைத்து தியேட்டர்கள் லாபம் பார்த்தன, இவரால் தான் அவை, அவையால் தான் இவர் என்ற எந்த வியாக்கியானமும் இங்கே கிடையாது.

      இப்போது கால மாற்றத்தில் அனைத்தும் அனுசரிக்கப்படவேண்டியவையே..

      அப்புறம் கமல் எப்போதோ கோமணம் மற்றும் ஜட்டியுட நின்ன்றாரே கவனிக்கவில்லையா? '16 வயதினிலே" மற்றும் குருதிப்புனல் " படங்களில். அவர் அம்மணமாக நிற்பார் என்று ஆசிர்வதித்திருக்கிறீர்கள், ஆங்கிலப் படங்களில் அவர் வேரூன்றினால் அதுவும் நடக்கலாம். இந்த புத்தான்டில் உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்!

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரா!

      Delete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள்..நண்பா....
    கொஞ்ச நாள் நான் பதிவுலக பக்கமே வர முடியவில்லை.
    நன்றாக எழுதி இருக்கீங்க. தமிழ் படமே ரீலீஸ் ஆகாத எங்க ஊரில் டி.டி.எச் பெரிய ஹிட் அடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

      நானும் கொஞ்ச காலமா பிளாக் பக்கம் வரல,,... வரும் போதெல்லாம் உங்க பிளாக் செக் பண்ணுவதுண்டு.. சரி அது தான் ஒண்ணுகூடிட்டமில்ல .. இனிமே கும்மி அடிச்சிரலாம்..

      * அப்புறம் என்ன ரெஜிஜிஸ்டர் பண்ணியாச்சா...?

      Delete
  13. புத்தாண்டு வாழ்த்துகள் .

    பதிவில் எழுதி உள்ள விஷயங்களே சூப்பர் என்றால் பின்னூட்டத்தில் நீங்கள் அளித்துள்ள பதில்களும் அருமை .செம மூக்கறுப்பு செய்துள்ளீர்கள்.
    --

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...