உதைபந்து

Sunday, March 11, 2012

பண்றதெல்லம் நாதாரித்தனம்! ஆனா அவிய்ங்க சொல்றதெல்லாம் உண்மையாம்!





எனக்கு நாம இப்போ எங்கே போயிக்கிட்டு இருக்கம் ஒண்னுமே புரியல அண்ணாத்த.... எல்லாம் இந்த தமிழ் தொலைக்காட்சி ஒண்ணு பண்ணிக்கிட்டிருக்கிற அழிச்சாட்டியத்தோட பிரதிபலிப்புத்தான் இந்த புலம்பல் அண்ணாத்த.  இண்ணைக்கு டேட்டில எந்த தமிழ் தொலைக்காட்சியை திருப்பினாலும் எதாவதொரு ஒரு நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சியின் எல்.பி.எம் ரேட்டிங் எகிறுவதற்கு காரணமாக இருந்து வருகிறது. இந்த மாதிரியான கேம் ஷோவாகட்டும் இல்லாட்டி போனா ஏதாவது  ஒரு பொழுது போக்கு ஷோவாகட்டும் எல்லாம் சுட்ட பழம் தானுங்கோ

அதாவது தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்த வரை இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் முன்னோடியாக இருப்பது நம்ம விஜய் டி.வி தானுங்க. ஆனா விஜய் டி.வி யோட பெரும்பாலான நிகழ்ச்சிகள் மேல்நாட்டு நிகழ்ச்சிகளான "அமெரிக்கன் ஜடொல்" வகையறாக்களின் அப்பட்டமான கொப்பியடிப்புக்கள் என்று அனைவருக்குமே தெரியும். இவைய்ங்க அங்க சுட்டு இங்க ஒலிபரப்ப , அது கூட பண்ணமுடியாத சன் உம் , கலைஞ்ஞரும் விஜய்யை கொப்பியடித்து பெருமைப்பட்டதை பார்த்த பெருமைக்குரிய கண்களுக்கு சொந்தகாரர்கள் நாம

இந்த இழவுகளின் தாக்கத்தால் , இப்போது இலங்கையில் எந்த டி.வி யை தொறந்தாலும் ஒரே நரகாம்சமான நிகழ்ச்சிகள் தான் போங்கள். இப்போது வானத்தில உள்ள ஸ்டார்களை விட இலங்கையில் உலவித்திரியும் சுப்பர்ஸ்டார்களினதும், மெகா ஸ்டார்களினதும் தொகை அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இப்போது விசயத்துக்கு வருவோம். ரொம்ப நாளாகவே ஸீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்று குடும்பங்களின் குடிகெடுத்துவருவதாக எனக்கு பலர் சொல்லியிருந்த போதும் அந்த அற்புதமான நிகழ்ச்சியை பார்க்க எனக்கு ஆரம்பத்தில் குடுத்து வைக்கவில்லை

அன்றொருநாள் தான் எனக்கு அந்த வரலாற்று புகழ் மிக்க நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. "தன் மகளையே பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தகப்பன்" என்று பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை கூவிக்கொண்டிருந்தார்கள். என்ன இழவுடா இது என்று அதிர்ந்து போனேன். இது உண்மையில் ஒரு தமிழ் நிகழ்ச்சிதானா அல்லது ஆங்கில நிகழ்ச்சியின் மொழிபெயர்ப்பா என குழம்பியே போனேன்.

அந்த இரவுதான் அந்த சமூக அக்கறை(???) கொண்ட நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. சத்தியமா கடுப்பாகிப் போய் விட்டேன். என்ன கறுமம்டா இது? தங்களது  பிரபலத்துக்காக குடும்பங்களின் ரகசியத்தில் கைவைப்பது எந்த வகையில் நியாயமாகிப் போகிறது?



பதிவை எழுத முன்பு ஒரு தடவை இந்த அதி உத்தம நிகழ்ச்சியின் ஆரம்ப அத்தியாயங்களை இணையம் மற்றும் சி.டி களின் (இந்த கறுமத்தை சி.டி வேறு போட்டு விற்கிறார்கள்) உதவியோடு பார்த்தேன். ஆரம்பம் என்னவோ ஏற்றுக்கொள்ளக்கூடிய  ரகம் தான். சிறு சிறு பிரச்சினைகளை, அதாவது மூன்றாம் நபர் தலையிட்டு தீர்க்கக்  கூடிய பிரச்சனைகளை  அலசியது இந்த நிகழ்ச்சி. உதாரணமாக  காதல் திருமணம் காரணமாக வீட்டைவிட்டு ஓடிப்போன ஜோடிகளை பெற்றொருடன் பேசி குடும்பத்தோடு சேர்த்து வைப்பது, கருத்து முரண்பாடான அப்பா , மகனை சேர்த்து வைப்பது போன்ற சம்பவங்களை சொல்லலாம். இவையெல்லாம் எப்படியோ குடும்பத்தின் மூத்தவர்களான பெரியப்பாவோ, தாத்தாவோ, சித்தப்பாவோ பேசி தீர்த்து வைக்க வேண்டிய பிரச்சினைகள் தான்.

இவற்றை தொலைக்காட்சியில் காண்பிப்பதன் மூலம் ஒரு சிலருக்கு விழிப்புணர்வு வராலாம் என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப ஒரு சில அத்தியாயங்களை  ஏற்றுக்கொள்ளலாம்

ஆனால் இப்போது நடப்பது எல்லாம், பெரியப்பா , சித்தப்பா மட்டுமல்ல சட்டமே தலையிட கூசுகின்ற தலைப்புகளை அசாலட்டாக ஏதோ "இன்று ஒரு தகவலில்" பாப்பையா திருக்குறளுக்கு விளக்கம் சொல்லுவதைப்போல பொதுசன ஊடகம் ஒன்றில் கதைத்துக்கொண்டிருப்பது தான் முகத்தை சுளிக்க வைக்கின்றது.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப அத்தியாயங்களை பார்க்கும் போது இது ஏதோ நல்ல நோக்கத்துக்காகவே ஆரம்பிக்கப்பட்டது என்றே எனது அவசர புத்தி சொன்னது. அதன் பிறகு சில அத்தியாயங்களை பார்க்கும் போது இதுவும்  "ரெஸ்லிங்" போல ஏதோ ஒரு வகையான நாடகமோ என எண்ணத் தோன்றியது

ஏனென்றால் அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புக்கள் அப்படி .  எமது சமூகத்தால் பொது இடங்களில் கதைக்க கூசும் விடயங்களே "பாடுபொருளாக " இருந்தது."கண் தெரியாதவரின் மனைவியும் அவளது கள்ள காதலனும்", மகளின் மாராப்பை விலக்கிய அப்பா", மனைவிக்கு மாமா வேலை பார்த்த கணவன்" இவ்வாறு பிட்டு பட ரேஞ்சுக்கு தலைப்புகளிட்டு நிகழ்ச்சி பண்ணி காசு பார்க்க தொடங்கியது ஸீ தமிழ்

இதில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரை பற்றி சொல்லியே ஆகவேண்டும். சன் டீவியின் "வணக்காஆஆஆம்" புகழ்  " நிர்மலா பெரியசாமி" தான் இந்த கலாசார காவல் நிகழ்ச்சிக்கு தலமை தாங்குகிறார்.



இந்த ஸீ தமிழ் தொலைக்காட்சியின் எல்.பி.எம் ரேட்டிங் மற்றும் மக்களின் பி.பி எகிறுதல்களில் நிர்மலாவின் பங்கு கணிசமானது. ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் வெறும் செவிமடுப்பாளராகவும் , தேவையான போது ஆலோசனை வழங்குனராகவும் இருந்த இவர் இப்போது கோத்து விட்டு கூத்து பார்ப்பவராக மாறியிருகிக்கிறார்.

குடும்பங்களை பேச விட்டு இடைநடுவில் தான் குறுக்கிட்டு குண்டு போடும் வேலையை செவ்வனே செய்து வருகிறார் நிர்மலா

இவரது நிகழ்ச்சி நடத்தும் பாணி அலாதியானது. ஆரம்பத்தில் சாந்த சொரூபியாக நிகழ்ச்சியை ஆரம்பித்து பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் பவ்வியமாக பேச அழைப்பார். இரு குடும்பமும் அல்லது இரு தரப்பும் காரசாரமாக வாதத்தில் இருந்தால் பேசாமல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்

வாதத்தின் சூடு தணிந்தாலோ அல்லது இரு தரப்பும் பேசி பேசி தாமகவே சமரசத்துக்கு வருவது போல தெரிந்தாலோ ( இது நிகழ்சியின் நேரத்தை பொறுத்தது.) நிகழ்ச்சி மொத்தமாக அறுபது நிமிடங்கள். சமரசம் கடைசி நிமிடங்களில் ஏற்பட்டால் பேசாமல் அது போக்கில் விட்டு விடுவார். மாறாக இடை நடுவில்  ஏற்பட்டு விட்டால் , யார் மிச்ச நிகழ்ச்சியை பரபரப்பாக நடத்துவது? உடனே அம்மணி குருக்கிட்டு ஏதாவது ஒரு குண்டைப் போட்டு மீண்டும் வாதத்தில் சூடு கிளப்பி விடுவார்.

உதாரணமாக தனது மனைவியின் கள்ள காதல் தொடர்பாக கதைத்துக் கொண்டிருக்கும் கணவன், நிகழ்ச்சியின் இடை நடுவில் சமரசமாகி "சரி நடந்தது நடந்து  போச்சு ... இனிமே ஒழுங்கா இரும்மா " என்று தனது மனைவியோடு சமரசத்துக்கு வருவது போல் இருந்தால் , உடனே இந்தம்மா "ஏம்மா உங்க புருஷன் வீட்ல இருக்கிறப்பவே இன்னொரு ஆளோட தொடர்பா இருந்திருக்கிறியே , ஏன் உம் புருஷன் ஆம்பள இல்லயா? அவருக்கு ஏதும் கொறயா ? " அப்டீன்னு கேட்கும் பாருங்க . அத்தோட முடிஞ்சுது கதை. இதுக்கு அப்புறம் அந்த புருஷன் சமரசம் ஆவான்னு நினைக்கிறீங்க

அது போக நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக ஓட்டியாக வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கருமத்தையெல்லாம் அரங்கேற்றிக்கொண்டிருகிறது ஸீ தமிழ்.

அன்று ஒரு நாள் நிகழ்ச்சி ஒன்றில் யதார்த்தமக ஒரு பெரியவர் கையை ஓங்க போய் அதற்கு ரீ ரெக்கார்டிங்கில் "பளார் " என்றொரு சவுண்டை கொடுத்து மாமனார் மருமகளுக்கு அறைவது போன்று எஃபக்டை கொடுத்து அந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த நிம்மதிக்கும் ஆப்பு வைத்த கதைகளும் உண்டு



ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விசயத்திற்கு தெருவில் போவோர் வருவோரையும் சாட்சிக்கு அழைத்து தெருச்சண்டை போல ஆக்கிவிடுவது அதி உச்ச கொடுமை.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இருதரப்பையும் சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும்,இரு தரப்புமே யோசிக்காத கோணத்தில்  சந்தேகங்களை கிளப்பி விட்டு சண்டைக்கு சுதி சேர்த்து,   நிகழ்ச்சி முடிவைடைய போகிற நேரத்தில் அவசர அவரமாக இரு தரப்பையும் சமாதனத்துக்கு அழைப்பதும் தொடர்கிறது.

ஏற்கனெவே எரிகிற நெருப்பில் நிகழ்ச்சி என்ற பேரில் எண்ணையை ஊத்தி விட்டு திடுதிப்பென்று சமாதனத்துக்கு வா என்றால் நடக்கின்ற கதையா

உடனே அந்த நிர்மலா பெரியம்மாவும் "இரு தரப்பு சமாதனத்துக்கு வர தயங்குவதால் , இந்த நிகழ்ச்சியை இத்தோடு நிறைவு செய்து நாளை மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தோடு உங்களை சந்திக்கிறேன் வணக்கம்" என்னும் போது அந்த அரை கிரவுண்டு முகத்தில் "சப்பு சப்புன்னு " நாலு அறை போட சொல்லி மனம் சொல்லும்.

இல்லாவிட்டால் "நேயர்களே! இந்த நாதியத்த குடும்பத்திற்கு உங்களாலான உதவியை செய்யுங்கள்” என்று பிச்சையெடுக்க வைக்கின்ற நிலைமையும் அண்மைக்காலமாக நடந்தேறி வருகிறது.

பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் பேர்வழி என்று , ஒரு குடும்பத்தை அழைத்து அதன் அந்தரங்கத்தை எல்லாம் பகிரங்கப்படுத்தி, அந்த குடும்பத்தின் மானத்தை சந்திக்கிழுத்து பின்னர் "இது தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கிறது. நீங்கள் சட்டத்தின் மூலமாக தீர்வு பெறுவதுதான் நல்லது" இறுதியில் தீர்ப்பு வேறு. இந்த வெண்ணை அவர்களுக்கு தெரியாதா? பின்ன என்ன மயிருக்கு நீங்கள் ஆலொசனை என்ற பெயரில் வாயை பொளந்து கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்?

சிறு பிரச்சினைகளையெல்லாம் ஊதிப் பெருசாக்கி, குடும்பங்களில் நிதந்தர பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகளை தான் அரங்கேற்றி வருகிறது ஸீ தமிழின் "சொல்வதெல்லாம் உண்மை".

சும்மா இருந்தால் கூட ஆறு மாசமோ ஒரு வருஷமோ கழித்து தீரக்கூடிய பிரச்சினைகளை, நிகழ்ச்சியின் பர பரப்புக்காக ,இரு தரப்பையும் தூண்டிவிட்டு கோர்ட்டுக்கு அனுப்பும் வேலையை கன கச்சிதமாக செய்து வருகிறது இந்த நிகழ்ச்சி

சாதாரண பிரச்சினைகளுடன் வருவோர் கூட "கவுன்சிலர்" நிர்மலாவின் தூண்டுதலாலும் அல்லது உசுப்பேத்தலாலும் , அத்தோடு நமது குடும்ப விசயம் இப்போது சந்தி சிரிக்கிறதே இனி நடப்பது நடக்கட்டும் என்ற தோரணையிலும் பிரச்சினைகளை முற்ற விட்டு கோர்ட்டுக்கு போகும் சம்பவங்கள் அதிகரிக்கலாம்.



எனக்கு தூக்கி வாரிப் போட்டது எப்போது என்றால் , தனது தந்தை தன்னிடம் தப்பாக நடந்து கொள்கிறார் என்று ஒரு மகள் பச்சையாக பேட்டி கொடுக்கிறாள். அந்த தாயும் உட்கார்ந்து இருந்து தனது மகளை தனது புருஷன் எங்கெல்லாம் தடவினார் என்ரு லிஸ்ட் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.  

அந்த பெண் படித்த அழகான இளம் பெண். இனி அவள் வெளியிடங்களில் நடமாடி திரிய வேண்டாமா? ஒரு கல்யாணம் பண்ண வேண்டாமா? இந்த கும்பத்தின் நிலை சமூகத்தில் இனி எவ்வாறு இருக்கும்? இந்த கேள்விக்கெல்லாம் ஸீ தமிழ் பதில் கூறுமா?

அந்த பெண் கூறுகிறாள் " எனக்கு என்னோட அப்பாவ ரொம்ப பிடிக்கும் மெடம், அவர் குடிச்சிட்டு அம்மா என்னு நெனச்சு தான் என்னோட தப்பா நடக்க முற்படார் அப்ப்டீன்னா, இனிமே அவர் குடிக்காம இருந்த அதுவே எனக்கு போதும் மெடம்.அதுக்கு பிறகு எனக்கு அப்பாவோட எனக்கு எந்த கோவமும் கிடையாது மெடம்". 

சரியான ஒரு தலைப்பு சிக்கிடுச்சு இதவச்சி  நெறய பணம் பண்ணலாம் அப்டீன்னு கணக்கு பண்ணிக்கிட்டிருந்த நிர்மலா பெரியம்மாவுக்கு இந்த பதில் பேரிடியா இருந்திருக்கணும். உடனே அந்த தடி மாடு கேக்குது" ஏம்மா இதுக்கு அப்புறமும் உங்க அப்பாவோட சேர்ந்து இருக்க உங்களால முடியுமா" அப்பிடி இப்பிடின்னு ஆயிரம் கத சொல்லி கடைசில " எனக்கு என்னோட அப்பா வேணாம் மெடம் " என்று அந்த பொண்ணோட வாயால சொல்ல வச்சு பெரும பட்டுச்சு அந்த எரும. அதுவும் இல்லாம கோர்ட்டுக்கு போங்க நீங்க என்ற "கைட் லைன்" வேற.

"மயுரி" என்றொரு மேற்கதேய நிகழ்ச்சி (இதை தான் இவர்கள் சுட்டிருக்கிறார்கள் என்று எனக்கு பலத்த சந்தேகம்) அதில் ஒரு தாய் தனது மகள் முந்நூறுக்கும் மேற்பட்ட தடவை செக்ஸ் வைத்திருக்கிறாள் என்று புலம்பி அழுகிறாள்

டேட்டிங், மீட்டிங் என்ற பெயரில் செக்ஸ் உறவு எல்லாம் சாதரணமாகிப் போன ஒரு சமூகத்தில் , ஒரு தாய் அது குறித்து இவளவு கவலைப்படுகையில் , கலாசாரத்தில் கட்டுக்கோப்பாக இருக்கும் எமது சமூகத்தில் ,  பெத்த தகப்பனே பெண்ணை கெட்ட எண்ணத்துடன் வருடுகிறார் என்று ஒரு தாய் வாக்கு மூலம் கொடுப்பதற்கு மேடை அமைத்துக் கொடுப்பது என்ன மாதிரியான ஒரு இழிச்செயல்?

இப்போது ஒரு கேள்வி எழலாம்! இவர்கள் தான் தங்களது தனிப்பட்ட சுயலாபத்துக்காக இப்படி கழிசடை வேலைகள் எல்லாம் பண்னுகிறார்கள் என்றால் இந்த மக்களுக்கு எங்கே போனது அறிவு என்று?  

மக்கள் மீதும் பிழை இல்லாமல் இல்லை. தங்களது முகங்கள் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதே இவர்களது ஒரே நோக்கம்.எப்படியாவது டி.வி யி தங்களது முகத்தை காட்டிவிட வேண்டும். அது எந்த கறுமமாக இருந்தாலும் பிரசினை இல்லை. "புகழ் எனின் உயிரும் கொடுகுவர்....." என்ற சங்க கால பொன் மொழியை தப்பாக விளங்கி கொண்டார்களோ என்னவோ?

 புகழ் பெற வேண்டும் என்ற மக்களது வேட்கையை சரியாக ஒரு தப்பான நிகழ்ச்சிக்கு பயன் படுத்தி பணம் பண்னுகிறது ஸீ தமிழ். உண்மையில் சமூக அக்கறை இருந்தால் இவாறான குடும்பங்களுக்கு சரியான "கவுன்சிலிங்" வசதி செய்து கொடுக்கலாமே

இங்கு தான் எனக்கு ஒரு சந்தேகம்! மெத்த படித்து , தொழில் முறையில் கவுன்சிலிங் செய்து வரும் மருத்துவர்களே சில பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவிக்கையில் நிர்மலா பெரியம்மாவால் மட்டும் எப்படி முடியும்? ஒரு வேளை கவுன்சிலிங்கில் டாக்டர் பட்டம் முடித்துள்ளாரோ என்னமோ?



எனது கோபம் எல்லாம் மக்கள் மீது அல்ல. பொது மக்களுக்கு எப்போதும் இம்மாதிரியான விழிப்புணர்வு இருக்கும் என எதிர் பார்க்க முடியாது.  ஆனால் ஒரு பொதுசன ஊடகம் அவ்வாறு இருந்துவிட முடியாது. படித்த பன்முக அறிவுடையோர் பணியாற்றும் அந்த மாதிரியான ஒரு ஊடகம் இவ்வாறான கீழ்த்தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதை வரவேற்க முடியாது

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் " மது பானம் அருந்துவதற்கு குறைந்த பட்ச வயதெல்லை பத்து என அறிவித்துவிட்டு பின்னர் சிறுவர்களெல்லாம் மதுபானம் அருந்துகிறார்கள் என்று சிறுவர்களை சாட முடியாது, அது நியாயமுமில்லை. அவ்வாறான ஒரு சம்பவத்துக்கு மேடை போட்டுக் கொடுத்த அரசாங்கமே தான் முழுப்பழியும் ஏற்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சி தொடர்பில் எனது கருத்தும் அதுவே! நீங்கள் நிகழ்ச்சி நடாத்தினாலும் நடத்தாவிட்டாலும் கள்ளக்காதல், குடும்பச்சண்டை என்பன தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதை வெளிச்சம் போட்டு காட்டி அந்த குடும்பத்தில் உள்ள பிள்ளைகள், உறவினர்களின் நல் வாழ்க்கையை பாழாக்க வேண்டாமே



இல்லை இது போன்ற அதிசய நிகழ்வுகளை காட்டத்தான் போகிறீர்கள் என்றால் தயவு செய்து அந்த நபர்களின் முகங்களை மறைத்து விட்டாவது ஒளிபரப்புங்கள்.

ஒரு ஊடகம் என்பது தனிப்பட்ட நன்மைக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டியது. இல்லை தனிப்பட்ட நன்மைதான் முக்கியம். பரபரப்பாக ஏதாவது நிகழ்ச்சி செய்யவேண்டும் என்பதற்காக குடும்பங்களின் வாழ்க்கையில் குண்டு வைக்கும் இந்த மாதிரியான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.

பரபரப்பாக ஏதும் செய்யவே வேண்டும் என்றால் பிட்டு படம் எடுத்து பிழைத்து கொள்ளுங்கள். அது ஒரு நல்ல வியாபாரம். பரபரப்பாகவும் இருக்கும். அதை விட்டு விட்டு இவாறான இழிவான வேலைகள் செய்வதை நிறுத்தி கொளுங்கள்.

பிறழ்வான செக்ஸ் உறவுகள் உலகில் ஏன் எமது சமுதாயத்தில் இருக்கிறது என தெரிந்திருந்தும் , அதை கௌதம் மேனன் வெளிப்படையாக "நடுநிசி நாய்கள்" என்று படமாக எடுத்த போது கலாசாரத்தை கருத்தில் கொண்டு கொத்தித்தெழுந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு எனது ஆதங்கத்தை புரிந்துகொள்வதில் சிரமமிருக்காது என நினைக்கிறேன்.



14 comments:

  1. en manathil irunthathai apadiye eluthedenga anna. savukku adi arumaiyana vimarsanam.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் இவர்களுக்கு சவுக்கடி கொடுக்கவே வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வேறு. கலாசார சீரழிவு தரும் நிகழ்ச்சிகள் வேறு. இந்த நிகழ்ச்சி இரண்டாவது ரகம்.

      Delete
  2. அய்யா,
    சமூக அக்கறை என்ற பெயரில் ஆபாச நிகழ்ச்சிகளை விற்பனை செய்யும் நவீன கால விபச்சாரிகளை தோலுரித்து காட்டியமைக்கு நன்றி!

    www.writervijayakumar.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இது போல் சமூகத்தை சீரழிக்கும் நிகழ்ச்சிகளை தோலுரிப்பது, எதோ ஒருவகையில் எழுத தொடங்கிவிட்ட நம்மை போன்றோரது கடமையல்லவா?

      Delete
  3. என் மனதில் பலகாலம் இருந்த கோபத்தை இன்று நீங்கள் கொட்டி தீர்த்து விட்டீர்கள்....
    இதை z tv க்கு அல்லது அந்த சொப்பன சுந்தரிக்கு தெரியப்படுத்துங்கள்...
    அப்போதாவது அந்த தரங்கெட்ட ஜென்மன்களுக்கு உரைக்குதா என்றுபார்ப்பம்.... காசு நிகழ்ச்சிகளை குறை கூறி அதை எழுதி hits வாங்குபவர்க்கு மத்தியில் நீங்கள் ...great...
    http://www.tamilogy.com/2012/03/zee-tv.html

    ReplyDelete
    Replies
    1. என்னை நெகிழ வைத்து விட்டீர்கள்! எனது பதிவு ஒருவரால் பகிரப்படுவது இதுவே முதல் தடவை. எந்த வித எதிர்பார்ப்புகளுமின்றி தான் நான் பதிவிடுகிறேன் என்றாலும், ஒரு எழுத்தாளனின் சந்தோசம் மற்றவரால் பாராட்டப் படும் போது தான். மிக்க நன்றி அன்பரே! அது போக திருகோணமலைக்கும் எனக்கும் மிக்க நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் எல்லாம் ஒண்டுக்குள் ஒன்று!

      Delete
  4. வாழ்த்துக்கள் கிசோகர் உங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா! உனது ஆதரவு எனக்கு தொடர்ந்தும் வேண்டும்.

      Delete
  5. mudhalil nirmalavin kadhaiyai koorattum

    ReplyDelete
    Replies
    1. //mudhalil nirmalavin kadhaiyai koorattum//

      ஏன் நண்பா ? அது என்ன அவளவு மோசமாகவா இருக்கும்?
      #ஒரு சந்தேகத்தில் கேட்டேன்.

      Delete
  6. Vijay TV also had a show, Kathai alla Nijam, like this before. Actress Lakshmi hosted that show. It also had one episode exactly like this that a dad misbehaved with his daughter. Indeed, these shows were copied from North American tv shows.

    ReplyDelete
    Replies
    1. you are right prem! i have mentioned that these shows are imitating american shows. but these kind of mud unessential to our society !

      Delete
  7. இவ்வளவு நாளா உங்க ப்ளாக் பாக்காம போனதற்கு வருந்துகிறேன் ...மிக சிறந்த எண்ணங்கள் ,கருத்துக்கள்...வாழ்த்துக்கள் இதை தொடருங்கள் ...

    ReplyDelete
  8. nanba super yen manathara solgendren your really great ungal pani thodara valzthukal

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...