உதைபந்து

Saturday, March 17, 2012

சிம்புவுக்கு பெரிதாகப் போகும் "அந்த" உறுப்பு ! பரிணாம வளர்ச்சி கோளாறால் துயரம்! - ஒரு ஆய்வு, ஒரு வீடியோ, ஒரு விருது, ஒரு பொறம்போக்கு-


தப்பாகி போகுமா பரிணாம கோட்பாடு?

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் எந்த  ஒரு உயிரினத்துக்கும் பாவனையில் இல்லாத உறுப்புக்கள் , குறுகி, சிறிதாகி பின்னர் முற்றாக அற்றுப் போய் விடுமாம். அதுபோல அதீத பாவனையில் இருக்கும் ஒரு உறுப்பானது தொடர்ந்து வளர்ச்சி அடைந்து பெரிதாகுமாம்.

அப்படி பார்க்கப் போனால் நயந்தாராவுக்கு மூளை இனிவரும் நாட்களில் இல்லாமல் போய்விடும். போகதா பின்ன ? சிம்புவுடன் பட்ட பிறகாவது புத்தி வேண்டாமா? சிம்பு ஒரு தேவதை என்று வல்லவன் படப்பிடிப்பின் போது கூறியவர் , வில்லு படத்துடன் பிரபுதேவா ஒரு தேன்வதை என்று கூடவே போய் இப்போது சக்கையாக திரும்பியிருக்கிறார்.

 சரி சக்கையாக திரும்பி இருப்பவர் திருந்தி இருக்கிறாரா என்று பார்த்தால், வாய்ப்பே கிடையாது என பதில் வருகிறது.  இப்போது ஜெயம் ரவியுடன் சுற்றுவதாக "பதிவுலக பிரம்மா", 'துப்பறியும் புலி" , சி.பி.செந்தில்குமாருக்கு தகவல் வந்திருக்கிறதாம். (அண்ணே புகழ்ந்ததுக்கு பேசினபடி பணத்த கொடுத்திருங்க அண்ணே!)

யம்மா நீ லவ் பண்ணின ஆக்களோட பெயரெல்லம் குத்தணுமிண்ணா உன்னோட முதுகு போதாது, சொன்னா புரிஞ்சுகோ!


அப்போ அதீத பாவனையில் இருக்கும் உறுப்பு பெரிதாகும் என்று பார்க்கப் போனால் அந்த உறுப்பு பெரிதாதல் நிகழப்போவது நம்ம சிம்புவுக்கு தான். (அட நயந்தாராவுக்கு ஒன்று நடந்தால் சிம்புவுக்கும் நடக்கணும் எண்டு சொல்ல அண்ணாத்த.. தொடர்ந்து படிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க)

சிம்புவுக்கு தான் ஒரு உறுப்பு எப்போதும் பாவனையில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் எந்த நடிகருக்கும் இந்த அளவில் அந்த உறுப்பு பாவனையில் இருந்தது இல்லை. "அலையில்" திரிசாவுடன் நடிக்கும் போதும், "சிலம்பாட்டத்தில்" சானா கானுடனும், "வல்லவனில்" நயன்ஸ்சுடனும் மன்மதனில் சிந்து துலானியுடனும் இவளவு ஏன் "மன்மதனில்" ஜோதிகாவுடன் கூட அண்ணனின் "அந்த " உறுப்பு ஒரே பாவனை தான் போங்கள். இந்தளவு பாவனை என்றால் பெரிதாகாமல் என்ன செய்யும்?


ஆனால் என்ன , அவ்வாறு அந்த பாகம் பரிமாணத்தில் பெருத்து விட்டால் பார்க்கவே சங்கடமாக இருக்கும். படப்பிடிப்புகளின் போது வழமைக்கு மாறாக துருத்திக்கொண்டு , மேலதிக நீளமாய் இருந்தால் நடிகைகளின் சங்கடங்களை தவிர்க்க , சிம்பு விசேட ஆடை ஏதும் தான் அணிய வேண்டி வரும். நினைக்கவே கர்ணகொடூரமாய் இருக்கிறது.

யார் கண்டார் ? அதையையே ஒரு கூடுதல் தகைமையாக எடுத்துக்கொண்டு அண்ணன் தனது ஆட்டத்துக்கு மேலும் சுதி சேர்த்தாலும் சேர்ப்பார். அவர் தான் மன்மதன் ஆயிற்றே!

எப்ப சார் எனக்கு பெருசாகும்?



டாக்டர் எதிர் டாக்டர்

தமிழ் சினிமாவில் இரண்டு டாக்டர்கள் இப்போது பெரும் பிரபலம். ஒருவர் தொழில் முறையில் அக்குபஞ்சர் (அதுதாங்க குத்தி குத்தியே வைத்தியம் பண்றது) டாக்டராக இருந்து சினிமாவுக்கு வந்த பிரபஞ்ச சுப்பர் ஸ்டார் எங்கள் இளைய நாயகன் "பவர் ஸ்டார்".

ஏன் விஜய் நடிக்கும் போது நான் நடிக்க கூடாதா?


இன்னொருவர் திரைஅரங்குக்கு வரும் அனைவருக்கும் குத்தோ குத்தென்று குத்தி , அக்குபஞ்சர், ஆணிவேர் பஞ்சர் எல்லாம் பண்ணியதால் டாகுடர் பட்டம் வென்றவர் அல்லது பெற்றவர் அல்லது வரவழைத்தவர். (கண்மணி!....... கடிதம், கடதாசி, லெட்டரு, மடல்  எத வேணும்னாலும் போட்டுக்க) எடிசன் விருது வழங்கும் விழாவில் எதற்கு தனக்கு கொடுத்தார்கள் என்று புரியாமலேயே , "சிறந்த நடிகர்" விருதை வாண்டடாக போய் வாங்கிவந்த வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டாக்டர்.விஜய்.

இந்த இரு டாக்டர்களும் போட்டி போட்டு நடித்துகொண்டிருக்கும் படங்கள் தான் "ஆனந்த தொல்லை", மற்றும் "துப்பாக்கி". தனது லத்திகா படத்தை ஒரே தியேட்டரில் 200 நாட்களை தாண்டி ஓடவைத்துகொண்டிருகும் பவர் ஸ்டார் , அடுத்த படமான 'ஆனந்த தொல்லை' யை 375 நாட்கள் ஓட்டப் போவதாக சன் டீ.வி பேட்டி ஒன்றின் மூலம்  அறிவித்துள்ளதை தொடர்ந்து , தனது அடுத்தபடமான துப்பாக்கியை 50நாட்களேனும் ஓட்டி சாதனை புரிவேன் என்று டாக்டர்.இளையதளபதி கங்கணம் கட்டியிருக்கிறாராம். (படம் வெளியானவுடன் படத்தின் தயாரிப்பாளர் கோவணம் கட்டிக்கொண்டு அலைவார் என்ற கொசுறு தகவலை வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்)

இப்பவே தூக்குறண்டா உன்ன!



அடுத்த வீடியோ ரெடியா?

300 நாட்கள் தாண்டி ஓடிய நிக்தியானந்தா+ரஞ்சிதாவின் "இருட்டு அறைக்குள் தியானமே செய்தோம்" என்ற அவார்டு வின்னிங் திரைப்படத்தை தொடர்ந்து அமலா பாலும் அந்த அவார்டை வாங்குவார் போலதான் இருக்கிறது. அடிக்கடி கோவையில் உள்ள ஆச்சிரமத்தில் முகாம் இடுகிறாராம் அம்மணி! அங்கு தனக்கு அமைதியும் மன நிறைவும் கிடைப்பதாக சொல்லிவருகிறாராம். பாத்து அம்மணி , அப்புறம் எவனாச்சும் ஏதும் பண்ணின பிறகு "கோவை ஆச்சிரமத்துக்கு சென்றதன் மூலம் எனக்கு மனமும், வயிறும் நிறைந்தது" அப்டீன்னு சொல்ல வேண்டி வரும்.

"எலேய்! லெனின் போல வீடியோ எடுப்பதில் ஆர்வமுடைய சிஷ்யகோடிகள் யாராவது அந்த கோவை ஆச்சிரமத்தில் இருந்தால் இப்பவே சொல்லுங்கடா, ஒரு நல்ல 20 மெகா பிக்சல் வீடியோ கமிராவா வாங்கி தாறோம். போன தடவ வீடியோ கிளியாரிற்றி அவளவு சரியில்லப்பா...." அப்டீன்னு யாரோ ஒரு அப்பாவி அமலா பால் பக்தன் கூக்குரல் இடுவது எனது காதுகளுக்கு கேட்காமல் இல்லை. வாழ்க ஆச்சிரமங்கள்! வளர்க நடிகைகளின் ஆச்சிரம சேவை!

இப்பிடியே தான் நீங்க ஆச்சிரமத்துக்கு போவீங்கன்னா, நானும் கூட வாரன் மேடம்!



யேய்! அது என்ன பொறம்போக்கு நெலமாடா?

தயாநிதி அழகிரி , மேத்வானி காதல் முற்றி வெடித்து , பழுத்து பஞ்சமிர்தமாகி, சிறப்பாகி சீழ்பிடித்ததை தொடர்ந்து மேத்வானியை அழைத்துகொண்டு அறிவாலயம் சென்றாராம் நம்ம புது கதாநாயகன் அழகிரி!

மேத்வானியை மேலும் கீழும் பார்த்த கலைஞ்ஞர் இலங்கை தமிழர் விடயத்தில் காத்த மௌனத்தை காத்துக்கொண்டு இருந்தாராம். பிறகு கலைஞரின் காலில் மேத்வானி விழவும் கடுப்பாகி போனாராம். உடனே தனது பினாமிகளை அழைத்து , பதிவாளர் அலுவலக ஆட்களை வரவைக்க சொன்னாராம். "அட!  காதலி என்று அறிமுகம் செய்ய அழைத்து வந்தால் , உடனே மனைவியாக்க சொல்கிறாரே தாத்தா" என்று புழுகத்தில் தயாநிதி காற்றில் பறந்துகொண்டிருக்க வந்தார்களாம் அதிகாரிகள்.

அவர்களிடர் கருணாநிதி சொன்னாராம் "இந்த மாநிலமே சொல்கிறது எனது ஆட்சியில் எத்தனையோ பொறம்போக்கு நிலங்கள் அபகரிக்கப்பட்டன என்று, அப்படியிருக்க ஒரு பொறம்போக்கு இடத்தை மட்டும் விட்டுட்டீங்களே" என்று கத்தினாராம். குழம்பி போன அதிகாரிகள் " தலைவரே! தங்களது நல்லாட்சியில் பல்கலைக்கழகம் தொடக்கம் , பாமரனது குடிசை வரை வளைத்து போட்டுவிட்டோமே, எதை விட்டு விட்டோம்" என்றார்களாம்.

இங்க ஒரு ரெண்டு கிரவுண்டு தேறும் போல இருக்கே! குத்துங்க எஜமான் குத்துங்க!


அது வரை நேரமும் குப்புற கிடந்த மேத்வானியின் முதுகை காட்டி இதை ஏனடா விட்டீர்கள் என்று காட்டு கூச்சல் போட்டாராம் கருணாநிதி. "தலைவரே! உ ங்ளுக்கு வயசாகி விட்டது, கண்பார்வை போகிறது, கூறு கெட்டு விட்டது. மக்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்கிறார்கள்  என்று தேர்தல் முடிய அறிக்கை விட்டதோடு சரி அடங்க மாட்டெங்கிறீங்களே? நல்லா பாருங்க அது நெலம் கெடையாது, முதுகு" என்றார்களாம் அவரது அடி பொடிகள். "டேய் தெரியும்டா ! எதுவா இருந்தாலும் பரவாயில்ல , துளியூண்டு இடம் காலியா இருந்தாலும் பட்டா போடிருவம் , அது தான் என்னோட பாலிசி" என்றாராம்.

இப்போது மேத்வானியோடு ஸ்ரேயா, சமீரா ரெட்டி, நயன்தாரா என்று ஒரு பட்டாளத்துக்கு பட்டா போடும் படலம் அறிவாலயத்தில் இடம்பெறுவதாக சொல்லுவது நான் இல்லைங்கோ, விக்கிலீக்ஸ்.. விக்கிலீக்ஸ்!


ஒரு விருது 

ஒவ்வொரு தடவையும் நோபல் பரிசை வென்றவர்களை தேர்ந்தெடுப்பதில் பலத்த சிக்கல்கள், கடும் போட்டிகள் இருக்குமாம். ஆனால் இந்த தடவை சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறுவது யார் என்ற சர்ச்சைக்கே இடமிருக்கவில்லையாம். ஏக மனதாக ஒருவரை ஏற்பாட்டு குழு தேர்வு செய்து இருக்கிறதாம். சக போட்டியாளர்கள் கூட "இவருடன் ஒப்பிடுகையில் நாங்கள் எல்லாம் தூசு" என்று ஒதுங்கியுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இதற்கு முன்னர் இந்த விருதை வென்றதன் மூலம் இந்த தெரிவுக்குழுவின் அங்கத்தவர்கலாக நியமிக்கப்பட்ட  கிட்லர், கடஃபி, ஒசாமா , இடி அமீன் போன்றோரது ஆவிகள் கூட இவரது பெயர் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளில் பேதியாகியவை தானாம். இன்னும் அலுவலக பக்கம் தலை கூட வைக்கவில்லையாம். அதிலும் இவரது சாதனைகளின் தொகுப்பு  வீடியோவை சானல் 14 வெளியிட்டதி இருந்து, இனி 'வாழ்நாள் சமாதான நோபல் பரிசுக்கு உரியவர் " என்ற விருது வழங்கி கௌரவிக்க முடிவு செய்திருக்கிறதாம் ஏற்பாட்டு குழு.

அந்த சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறுபவர் யார் என்று சொன்னால் , நான் சமாதானத்தில் இளைப்பாற வேண்டி வரும் என்பதால் முடிவை எடுப்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

விருதுக்குரியவரின் சிரிப்பை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா?


அது சரி பதிவின் சுவாரசியத்தில் நான் இப்போது தான் ஞாபக படுத்தி பார்கிறேன். பெரிதாகப் போகும் சிம்புவின் அந்த உறுப்பு எதுவென்று நான் சொல்லவே இல்லயே! அவரோட "விரல்" தாங்க அது! அத யூஸ் பண்ணாம அண்ணன் எந்த படத்தில நடிச்சிருக்கார். அத தானே அவர் அதிகம் யூஸ் பண்ணுறார். அப்போ விதிப்படி அது தானே பெருசாகணும். என்ன நான் சொல்றது? 

டிஸ்கி:- "மிருகங்கள் அழிவதில் ஆபிரிக்க கறுப்பின மக்களின் பசி கொடுமையின் பங்கு" தொடர்பில் ஒரு ஆய்வு பாணியிலான பதிவினை எழுத ஆயத்தமாகி இருந்தேன், அந்த பதிவு வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் இடை நடுவில் இரண்டு மரண மொக்கை பதிவுகளை போடுவதற்கு முடிவு செய்திருக்கிறேன் என்பதை பெருமையுடன் அறியத் தருகிறேன்.

எனது கடையை நீங்கள் மறக்காமல் இருப்பதற்கு இந்த ஏற்பாடு! எப்பூடி?


இது சும்ம போனஸ்சு!





3 comments:

  1. அவர் விரல திரும்ப திரும்ப பயன்பதினாலும் விரலுக்கு ஏத்த வீக்கம் தான் வரும் ,waiting for "மிருகங்கள் அழிவதில் ஆபிரிக்க கறுப்பின மக்களின் பசி கொடுமையின் பங்கு"

    ReplyDelete
  2. வாங்க டாக்டர்! உங்க கிட்ட போய் நான் விஞ்ஞான வியாக்கியானம் பண்ண முடியுமா?. முடிஞ்ச வரை அந்த கட்டுரையை சீக்கிரமாக தர முயற்சிக்கிறேன். பல்கலைகழகத்து வேலை தான் கொஞ்சம் இடைஞ்சல் பண்ணுகிறது.

    ReplyDelete
  3. பல்கலைகழகத்து வேலை தான் கொஞ்சம் இடைஞ்சல் பண்ணுகிறது-- எனக்கும் அதே தொல்லை தான்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...