உதைபந்து

Friday, April 13, 2012

அழுகாச்சி சூர்யாவும் "நீயா நானா" கோபியும்! - அவன் கோபி இல்லடா பாவி!

தக்காளி என்னய பாத்தா உனக்கு எப்பிடி இருக்கு?

விஜய் டிவி நடத்துகின்ற "நீங்களும் ஆகலாம் ஒரு கேடி" என்ற நிகழ்ச்சியில் அறிவு பூர்வமான கேள்விகளை கேட்கிறார் என்று , அடுத்த இலக்கியத்துக்கான நோபல் பரிசினை பரிசுக்குழு சூர்யாவுக்கு தருவதற்கு தயாராகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதை அறியாமல் அத்தனை பதிவர்களும் சூர்யாவை கழுவி ஊத்த தொடங்கியிருக்கிறார்கள். அந்த மேலான பணியை நானும் செய்வது இப்போதைக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்!

எனது வருடங்களில் அனேகமான நேரங்கள் பல்கலைகழகத்திலேயே (வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தான், ஜஸ்ட் 380 கிலோமீற்றர்) கழிந்து விடுவதால் எனக்கு தொலைக்காட்சி பார்க்கும் நேரம் என்பது மிக குறைவு. கிரிக்கட் , உதை பந்தாட்ட போட்டிகளை இணையத்தில் பார்பதோடு சரி! அந்த சிங்கள கல்லூரியில் தமிழ் அலைவரிசைகளை பார்பது என்பது குதிரை கொம்பு! விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்பொழுது தான் அனேக நிகழ்ச்சிகளை பார்க்க கிடைக்கும். ஆனால் முக்கியமான சில நிகழ்ச்சிகள் அல்லது நான் விரும்பும் சில நிகழ்ச்சிகளை இணையத்தில் பார்ப்பதுண்டு.( நீயா நானா போன்றவை)

இந்த சித்திரை புதுவருட விடுமுறையில் தான் "நீங்களும் ஆகலாம் ஒரு கேடி" நிகழ்ச்சியை பார்க்க கிடைத்தது ( சில ஷோக்கள் இணையத்தில் பார்த்தும் இருக்கிறேன்). அதுவும் சிவகார்திகேயன் ஆடுகிறார் என்பதாலும், சூர்யாவின் வீர பிரதாபமான கேள்விகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பதும் என்னை அந்த ஒரு மணிநேரம் ஐ.பி.எல் போட்டிகளையும் மறந்து என்னை தொலைக்காட்சி முன் உட்காரவைத்தது.


அந்த ஒரு மணிநேர நிகழ்ச்சியையும், அடுத்த நாள் நிகழ்ச்சியையும் தவறாமல் பார்த்தேன்! காரணம் அந்த விஜய் தொலைக்காட்சி குழுமம் ஆடிய அந்த ஷோவின் நோக்கமும் (ஏழை மாணவரின் கல்விக்கு உதவுவதற்காக ஆடினார்கள்) அத்தோடு அடுத்தநாள் நீயா? நானா? கோபி (சர்ச்சைகளை தாண்டி நான் ரசிக்கும் ஒருவர் கோபி. அதற்காக அவர் மீதான எனது கேள்விகள் குறையப்போவது இல்லை)  ஆடுவதாக இருந்ததும் என்னை அடுத்த நாளும் பார்க்க தூண்டியது.

அந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும் பார்த்த பின்னர் எனக்கு சில கேள்விகள் அல்லது மொக்கை கேள்விகள், சில சந்தேகங்கள் அல்லது வரக்கூடாத சந்தேகங்கள் வந்தது. சில விடயங்களை பாராட்டவும் தோன்றியது.( ஏன்டா ! பாரட்டுறத மொதல்ல சொல்ல கூடாதா?)

நீயும் என்னய பத்தி பதிவு போடுறியா? எல்லாம் என் நேரம் டா


முதலில் சூர்யாவுக்கு பாராட்டு.......

உங்களது கேள்விகள் குறித்து கருக்து தெரிவிக்க எனக்கு விருப்பம் இல்லை. அது குறித்து போதும் என்ற அளவிற்கு பதிவர்கள் எழுதித் தள்ளி விட்டார்கள். நீங்கள் நிகழ்ச்சி நடாத்தும் விதம் ரசனைக்குரியதாக இருக்கின்றது, சகஜமான பேச்சு, பெரும்பாலான நேரங்களில் நான் ஒரு ஸ்டார் என்ற மெதப்பு மேலோங்காத உங்களது அணுகுமுறை, போட்டியின் ஆரம்பத்தின் போது தமிழின்  , தமிழனின் பெருமைகளை கூறுவதும் அல்லது ஏதாவது ஒரு நற்சிந்தனையோடு ஆரம்பிப்பது நல்லதோர் ஆரம்பம். ( நான் ஒண்ணும் டேரி மில்க் வெளம்பரம் பண்ணலிங்கோ! ) அது நீங்களாக சொல்வதோ அல்லது யாரும் சொல்லிக்கொடுத்து சொல்கிறீர்களோ தெரியாது, ஆனாலும் நல்லாருக்கு!

அடுத்து குறித்த தின நிகழ்ச்சியில் கோபி சொன்னது போல "உங்களது கண்களை பார்த்தோ அல்லது உங்களது அங்க அசைவுகள் நடவடிக்கைகளை பார்த்தோ சரியான விடையை ஊகிக்க முடியவில்லை". நடிகர் என்ற வட்டம் தாண்டி சிறந்த ஒரு தொகுப்பாளராக பரிணாமம் கண்டிருக்கிறீர்கள் , வாழ்த்துக்கள்!

அடுத்து எனது மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் , தங்களது பொன்னான நேரத்தில் ஒரு நல்ல நோக்கத்துக்காக போட்டியில் கலந்து கொண்டமைக்கு.

நான் மிகவும் ரசித்தது , ஒரு கட்டத்தில் கோபிநாத்தும் , சூர்யாவும் சேர்ந்து நாட்டுப்புற பாட்டு பாடுவார்களே! பிரம்மாதம், இன்று ஐந்து தமிழ் வார்த்தைகளுக்கு நடுவில் பதினைந்து ஆங்கில வார்த்தைகளை போட்டு கதைக்காமல் விட்டால் தங்களது தாய் பத்தினி இல்லை என்று ஆகிவிடும் என்று கவைலைப்படும் தெருநாய் கூட்டங்களுக்கு இது ஒரு செருப்படி. அவ்வாறான #$%@& மக்களின் ரசனைக்குரியவர்களாகவும் இருக்கும் சூர்யா மற்றும் கோபிநாத் ஆகியோரது இந்த நாட்டுப்புற பாட்டு சத்தம் அவர்களது வெள்ளைக்காரனுக்கு கலந்து பிறந்த ரத்தம் வரை எதிரொலித்து இருக்கும். இதற்காகவே உங்கள் இருவருக்கும் தலை வணங்குகிறேன்!

இப்போது சில கேள்விகள் சில அதிருப்திகள் எனது மனதில்.... இது சிலருக்கு தப்பாக கூட தெரியலாம், சிலருக்கு இப்படி தோன்றியும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பின்னூட்டம் இடுங்கள். ஒரு பாமரனாக, எனது எண்ணங்களை பதிவு செய்ய முற்படுகிறேன்.

முதலில் சூரியாவின் பக்கம் போகலாம், சகோதரா! சூர்யா, உங்களுக்கு உங்களது அப்பாவின் நல்ல வளர்ப்பு நல்ல அறிவையும் , நல்ல பழக்கவழக்கங்களையும் தந்திருகின்றது. சுத்தமன தமிழையும் பழக்கியிருக்கின்றது. அது உங்களது உரையாடல்களில் தெரிகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நல்ல தமிழோடு ஆரம்பிக்கிறீர்கள் ஆனால் போகப் போக உங்களது உரையாடல்களில் ஆங்கில ஆதிக்கம் தெரிகிறது. அது உங்களது போட்டியாளரையும் சார்ந்து இருக்கிறது.

உங்களது போட்டியாளர் தான் படித்தவர் என காட்டிக்கொள்வதற்கு தமிங்கிலத்தில் கதைக்க தொடங்கினால்  , உங்களது மொழி வழக்கும் தமிங்கிலத்துக்கு தாவி விடுகிறதே ஏன்? (தான் படித்தவன் என காட்டி கொள்வதற்கு ஆங்கிலத்தில் கதைத்து தான் தனது வல்லமையை காட்ட வேண்ணும் என்ற கீழ்த்தரமான எண்ணம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ் சமூகத்தில் இருப்பது எமக்கு வந்த சாபக்கேடு).

உதாரணமாக சிவகார்த்திகேயன் ஆடும் போது உங்களுக்குள் இருந்த பச்சைதமிழன், கோபினாத் வந்து தனது மெத்த படித்த தனத்தை ஆங்கிலத்தின் மூலம் காட்ட தொடங்கிய போது உங்களது  அப்பா  சிவகுமார் இல்லாமல் மவுண்ட் பேட்டன் பிரபு ஆனாரா? (எவரது கோபத்தையும் கிளறுவதற்கு நான் இதை சொல்லவில்லை, எனது வாதத்தின் நியாயத்தை புரிந்து கொண்டால் போதும்) நான் அவ்வாறு சொன்னது உங்களை கொச்சைப்படுத்த இல்லை சூரியா, மாறாக உங்களது முனுதாரணம் தமிழைக் கொல்ல நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையும் சாக்கடைகளுக்கு  பிழையான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்ற நியாயமான எனது ஆதங்கம் தான்.

உங்களது போதி தர்மன் அவதாரம் கண்டு தமிழை நேசிக்க தொடங்கியவர்களை கண்ணால் பார்த்த சாட்சி நான். அதை நீங்களாகவே கெடுப்பதையும் நான் பார்க்க வேண்டாமே!



அடுத்து உங்களது கேள்விகளில் வேற்று மொழி பிரயோகம் கேள்விகளில் அல்லது விடைகளில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது ஐயா! உங்களது ஒரு கேள்வியில் இரணியன், இரண்யகசிபு சம்மந்தமாக ஒரு விடை தந்தீர்கள். ஆனால் நீங்கள் ஹிரண்யன், ஹிரண்யாட்ஷன் என்று வடமொழி சொற்களை போட்டு போட்டியாளரையும் போட்டியாளரையும் , பார்த்துக்கொண்டிருந்த என்னையும் குழப்பி விட்டீர்கள். இந்த வட மொழி குழப்பம் வேண்டாமே!

அடுத்து விஜய் டிவியின் அழுகாச்சி நாடகம் இங்கேயும் அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பங்கேற்பாளரை கண்ணீர்விட வைத்து காசு பார்க்கும் விஜய் டிவியின் யுக்தி இங்கும் தொடர்கிறது. வேறு நிகழ்ச்சிகளானால் பரவாயிலை ஆனால் இது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களை அழவைப்பது அவசியம் தானா? பாவிங்களா , கடைசியாக சிவகார்த்திகேயன் , கோபிநாத்தை கூட அழவைத்து விட்டீர்களே! எதை கேட்டால் , போட்டியாளன் நெகிழ்ந்து போவான் அழுவான்  என்று நீங்கள் நாடி பிடித்து வைத்திருப்பது உங்களது தொகுப்பாளர் தொழில் வளர்ச்சியை காட்டுகிறது. ஆனால் இது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சியில் அந்த பிரம்மாஸ்திரங்களை நீங்கள் பாவிப்பது ஆரோக்கியமானதல்ல சூரியா!


இப்போது எனது அபிமான கோபிநாத் பக்கம் திரும்புகிறேன். எனது அபிமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர், இருக்கிறவர் சில அசௌகரியங்களை இவர் தராத பட்சத்தில் தொடர்ந்தும் எனது அபிமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க போகிறவர். சரளமான பேச்சு, பன்முக அறிவு , எத்தகைய நிகழ்ச்சி சிக்கல்களையும் தனது பேச்சாற்றலால் சமாளித்துவிடக்கூடிய சாமர்த்தியம் போன்ற இவரது திறன்களால் கவரப்பட்ட கோடான கோடி தமிழர்களில் நானும் ஒருவன்.

இத்தகைய திறன் கொண்ட கோபிநாத் சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்கிவருவது சாதாரணமாகி வருகிறது. ஆரம்பத்தில் தனது நீயா ? நானா? நிகழ்ச்சிகளை தனது சுத்தமான தமிழாலும் தரமான உச்சரிப்பாலும் திறம்பட செய்துவந்தவருக்கு இப்போது புதிதாக தமிங்கிலிஷ் ஆசை அலைபுரண்டு ஓடுவதை நிகழ்ச்சி பார்ப்போர் உணராமல் இருக்க நியாயமில்லை.

முன்பெல்லாம் எந்த பாமரன் பேசினாலும் அவனது பக்கம் நியாயம் இருப்பதாக பட்டால் அவர்கள் பக்கம் சார்ந்து நிற்கும் கோபிநாத். இப்போது மதுரை தமிழோ அல்லது சுத்தமான தமிழிலோ யாரவது பேசினால் அவர்கள் பக்கம் நியாயமே இருந்தாலும் அவர்களை ஏளனமக பார்ப்பதும் , தமிங்க்லிஷ் கலந்து எவனாவதும் அல்லது அமெரிக்காவில் இருந்து எவளாச்சும் கும்பலுக்கு பிறந்தவள் வந்து நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினாலோ, அவர்கள் சொல்லவது அர்த்தமே இல்லை என்றாலும் ,அவர்கள் ஏதோ நியாயத்தை பேசுவது போல அவர்களை சார்வதும் சமீபகாலமாக என் போன்ற கோபிநாத் அபிமானிகளை மட்டுமல்லாது , சாதரண பாமரனையும் கடுப்பேற்றி விட்டிருக்கின்றது.

இதை ஒருமுறை பார்த்தால் உண்மை புரியும்.

http://www.youtube.com/watch?v=QUAmV_qWvMI&feature=player_embedded


அதுகுறித்து சில பதிவர்கள் ஏற்கனவே அலசிவிட்டதாலும் இந்த இடத்தில் அதுகுறித்து மேலதிகமாக எதுவும் அலசுவது அநாவசியம் என்பதாலும் , நேற்றைய நிகழ்ச்சி பற்றி பேசுவது சாலச்சிறந்தது.

ரொம்ப கஷ்டமான கேள்வி சார்! ரெண்டு லைஃப் லைன் யூஸ் பண்ணட்டுமா?


நேற்றைய கோடி நிகழ்ச்சியில் கோபிநாத்தின் சில செய்கைகள் எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது, உங்களில் சிலருக்கும் இந்த அனுபவம் நேர்ந்து இருக்கலாம். அல்லது நான் சொல்லவ்து எனது தனிப்பட்ட அனுபவமாக கூட இருக்கலாம். எனக்கு தோன்றியது , எனவே சொல்கிறேன்.


எரிச்சல் இலக்கம் 1.

சிவபெருமானின் கையில் இருக்கும் வாத்தியம் எது என்பது தான் கேள்வி, இதற்கு நான்கு விடையே தேவை இல்லாத போதும் நான்கு விடைகளோடும் உடுக்கையும் இருந்தது. இதை பார்த்த கோபிநாத் கடைசி நிமிடம் வரைக்கும் கையை அங்கும் இங்கும் ஆட்டி , உடுக்கை அடிப்பது போல் பாவனை செய்தார். அவரது நெற்றி சுருக்கமும் , மூடியிருந்த கண்களும் அவர் கடுமையாக யோசிப்பது போல் காட்டியது. கடும் யோசனைகளுக்கு பின்னர் உடுக்கை என்ற பதிலை தந்தார். இது ரொம்ப ஓவராக இருந்தது. இந்த சின்ன கேள்விக்கு விடை தெரியாதவராக கோபிநாத் இருக்க முடியாது. தான் எது செய்தாலும் கடுமையாக யோசனை செய்துதான் பதில் தருவார் என்று காட்ட வேண்டிய தவிப்பு அவரது செய்கையில் தெரிந்தது. இது நிகழ்ச்சி முழுவதும் தொடர்ந்தது.

எரிச்சல் இலக்கம் 2.

கோபினாத் தனது யோசனை நாடகத்தினை அரங்கேற்றிவிட்டு ஒரு பதிலை தெரிவு செய்வார், உடனே சூர்யாவும் "எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்பார். அதை எதிர் பார்த்தது போல் இருக்கும் கோபிநாத்தும் தனது சரியான விடைத் தேர்வுக்கான காரணத்தை மட்டும் கூறுவதோடு நிறுத்தமாட்டார். பிழையான விடைகள் பற்றியும் ஒரு வகுப்பு எடுத்து தான் ஓய்வார்.

இப்பொது நீங்கள் சொல்லலாம் "அட தெரியாததை தெரிந்துகொள்வது நல்லது தானே என்று" நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்திருந்தால் புரிந்திருக்கும். எங்கள் ஊரில் பேச்சு வழக்கு ஒன்று உள்ளது "தன்னை மெத்துகிறான்" என்று, அதாவது ஒருவன் சாட்டோடு சாட்டாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனது சுய விளம்பரத்தை அள்ளிவிடுவது. "சுயபிரதாபம்" என்று கூட தமிழில் சொல்லவார்களே! இந்த வெட்டி வெளம்பரம் உங்களுக்கு தேவை இல்லை கோபி சார்! நீங்கள் அறிவாளி என்பது எங்களுக்கு தெரியும், அதை எரிச்சர் ஊட்டும் விதமாக, உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நிருபிப்பதற்காக  பேச தொடங்கி நிருபித்தது கொஞ்சம் முகம் சுழிக்க வைத்தது.

சில ஆக்கபூர்வமான விடயங்கள் சொன்னீர்கள் இல்லை என்று சொல்லவில்லை, ரவிந்திர நாத் தாகூர் வக்களாதேச நாட்டின் தேசிய கீதத்தையும் எழுதியிருக்கிறார் என்பது எனக்கு நேற்று நீங்கள் சொல்லி தான் தெரியும். அதை ஞாபகப்படுத்துகிறேன் பேர்வழி என்று நீங்கள் அடித்த கூத்தை நினைக்க எனக்கு சிப்பு சிப்பா வருது . அந்த தேசிய கீதத்தின் ஆரம்ப  வரிகளில் "வங்காள என்ற சொல் வருவதாக நீங்களே சொல்கிறீர்கள். இங்கே உங்களுக்கு நேராகவே விடை தெரியும் எங்களுக்கு தெரிந்தது.  அந்த விடை தொகுதியில் இருந்த நாடுகள் பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், வங்காளதேசம். பதிலை நேராக சொல்லியிருக்கலாம்.ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் ஆய்ந்து அறிந்து தான் செய்வேன், எனக்கு சகல கோணத்திலும் அறிவு இருக்கிறது என காட்டப் போய் எங்களது எரிசலை வாங்கி கட்டி கொண்டீர்கள். "இலங்கைக்கும் நமக்கும் முன்பிலிருந்தே ஆகாது, பாகிஸ்தானுடன் சான்ஸ்சே இல்லை " என்று தொடங்கி பூட்டானின் பூர்வீகம் பற்றி கதைக்க தொடங்கினீர்கள். இது தேவையா? அனாவசியமான கதைகள் எரிச்சலை உண்டுபண்ணும் கோபி சார்! ஒரு கணம் உங்களை பார்க்க டி.ஆர் போல இருந்தது, டி.ஆருக்கு பல திறமைகள் இருக்கிறது, பன்முக அறிவு இருக்கிறது, பல குரல்களில் பேச கூடியவர், இசை கலைஞர், சொல்லப் போனால் உங்களை விட திறமையானவர். ஆனால் அனாவசியமான விடயங்களை கதைக்கப் போவதால் அவரது நிலை என்ன என்று என்று யூ. டியூப்பை பார்த்தால் தெரியும்.சில நேரங்களில் நீங்கள் என்ன சொன்னிர்கள் என்று புரியகூட இல்லை, அவளவு அளப்பறை

நீயா நானாவில் உங்களது இந்த பண்பு வெளிவருவதில்லை, இங்கு சந்தர்ப்பம் கிடைத்தது , எதிரே உட்கார்ந்து இருந்தது சூர்யா என்பதால் வெளுத்து வாங்கி விட்டீர்கள். சூர்யா இடத்தில் "கிராண்ட் மாஸ்டர்" புகழ் பிரதீப் இருந்திருந்தால் அடக்கி வாசித்து இருப்பீர்களோ என்னவோ?

இந்த கேள்வி கேடப்ப ஒபாமாவே ஆடிப்போனாருன்னா பாத்துக்கேயேன்!


எரிச்சல் இலக்கம் 3.

இந்த இடத்தில் உங்களை பாராட்டிவிட்டு எரிச்சலை கொட்டுகிறேன். நீங்கள் அடித்த அந்த "தப்பு" அடியும், கானா பாட்டும் உண்மையில் என்னை பரவசபடுத்தியது. சூர்யா கூட சேர்ந்து பாடிய போது பாமரன் எனக்கு "அட ! இந்த உச்ச நட்சத்திரங்கள் தமிழின் அடித்தட்டு பாடல்களான   நாட்டு பாடல்களை பாடுகிறனரே" என்று ஆனந்த கண்ணீர் கூட வந்தது. (உண்மையில் நாட்டுப்புற பாடல்கள் தான் எமது அடையாளம், இந்த வெளிநாட்டு இரைச்சல்களில் இவை அடித்தட்டு பாடல்களாகி இருக்கின்றன. என்ன கால கொடுமை?)  இதற்காகவே மறுபடியும் உங்களுக்கு தலை வணங்குகிறேன். தமிழின் , சங்க பாடல்களின் அருமை பெருமை பற்றியெல்லாம் கோபிநாத் அருமையாக விளக்கினார். பூரித்து போனேன்.

அப்புறம் என்ன ஆச்சு? "அட நல்லாத்தானே போய்கிட்டு இருந்திச்சு" என்று வடிவேல் பாணியில் நான் புலம்பும்படி ஆனது. ஏதாவது முக்கியமான விடயத்தை கூற ஆரம்பித்ததும் ரெண்டு தமிழ் வார்த்தைக்கு நடுவில் ரெண்டாயிரம் ஆங்கில சொற்களை போட்டு முழக்கி தள்ளினீர்கள். உடனே அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த மூ*திரத்தை மரத்தை கண்டதும் திறந்து விடுபவன் போல, சூரியாவும் தன் பங்குக்கு வெளுத்து கட்டினார். அட நீங்கள் இருவரும் அறிவாளிகள் என்பது எனக்கு தெரியும் அப்ப! அதை ஆங்கிலத்தில் கதைத்து தான் காட்ட வேணுமா?

உங்களை சுத்த தமிழில் கதைக்க வேண்டும் என்று கூட சொல்லவில்லை. எமது அன்றாட வாழ்வில் சில வேற்று மொழி சொற்களை பாவித்துகொண்டு தான் இருக்கிறோம். அது பிரச்சனை இல்லை. அதை முழுவதும் மாற்றப் போனால் பிரச்சினைதான் வரும். உதாரணமாக "யான் மகிழுந்தில் வெண்பஞ்சு கூழ்மாதிடல் வாங்குவதற்கு செல்கையாகிறேன்" என்று சொன்னால் உங்களை எல்லோரும் வெறி நாயை பார்பது போல் பார்ப்பார்கள். அப்படி உங்களை தமிழ் பேச சொல்லவில்லை, சாதாரணமான தமிழை பேசினால் கூட போதும்.

டேய்! டேய்! டேய்!


எரிச்சல் இலக்கம் 4.

இந்த எரிச்சல் கொஞ்சம் லூசுத்தனமானது.ஒரு வேளை கோபினாத்தின் ரசிகன் என்றபடியால் இந்த எரிச்சல் வந்திருக்கலாம். ஆனாலும் ஒரு கேள்வி என்னை துளைத்துகொண்டு தான் இருக்கிறது. தான் 1260000 ரூபாய் ஜெயித்திருந்த வேளையில் போட்டியில் இருந்து இடைவிலகினார் கோபிநாத். வழமையாக்  போட்டியில் தங்களுக்கு விடை தெரியாத பட்சத்தில் தான் போட்டியாளர்கள் இடைவிலகுவது வழமை. ஆனால் கோபிநாத் சுயவிருப்ப ஓய்வு பெற்று இடைவிலகினார். அவரது ஆடும் வாய்ப்பு இன்னமும் மீதமிருந்தது. இரண்டு லைஃப் லைன் கூட மீதமிருந்தது. ஆனால் கோபிநாத் தனது அறிவு கூர்மையால் இந்த ஒரு கோடியை கைப்பற்றுவார் என எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நண்டு ஜெகனுக்கு வாய்ப்பு கொடுக்கவே தான் இடை விலகுவதக கோபி கூறினார். இங்கு தான் சில கேள்விகள். நீங்கள் வந்தது ஏழை மாணவர்களின் கல்ல்வி செலவுக்கு பணம் திரட்ட, மாறாக உங்களுக்குள் வாய்ப்பு கொடுத்து ஆடுவதற்கு இல்லை. அப்படியென்றால் அறிவாளியான நீங்களே தொடர்ந்து ஆடி ஒரு கோடி ஜெயித்து கொடுத்திருக்கலாமே!

மூக்குத்தி தொப்புள்ள குத்துறது சார்!


எனக்கு என்னவோ மூன்று காரணங்களால் நீங்கள் இடை விலகியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஒன்று சூரியா கேட்கும் மொக்கை கேள்விகளுக்கு நீங்கள் விடையளித்து ஒரு கோடி ஜெயிக்க கூடியவராக இருப்பதால், தன்விருப்ப ஓய்வை அறிவிக்க கோரி நிகழ்ச்சி தரப்பால் கோரப்பட்டு இருக்கலாம். அல்லது எங்கே ஒரு கோடி ஜெயிக்க முடியாவிட்டால் "அறிவாளி" என்ற உங்களது இமேஜ் போய்விடும் என்று ஒதுங்கி இருக்கலாம். அடுத்து "கோபிநாத் ஒரு கோடி கண்டிப்பா ஜெயிச்சு இருப்பாய்யா, பாவம் ஜெகனுக்காக விட்டு கொடுத்துட்டான்" என்று ஜனங்களை பேசவைத்து உங்கள் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக இருக்கலாம். எனக்கென்னவோ இந்த முதல் மற்றும் கடைசி  டவுட் கடுமையாக இருக்கிறது.


இது எல்லாம் என்னோட உணர்வுகள் தான் யார் மனதையும் புண்படுத்துவதற்கு இல்லை.

எல்லா இடமும் சூர்யா தான் போல! ஜமாய்ங்க சார்!







9 comments:

  1. ரொம்ப விரிவா அலசி இருக்கீங்க...வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா! ஏதோ மனதுக்கு பட்டதை எழுதினேன். நானும் இந்த இருவரது ரசிகன் தான், ஆனால் ரசிகன் என்பதற்காக அவர்கள் பண்ணும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாதே! தொடர்ந்தும் உங்களது ஆதரவு தேவை!

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி கண்ணன்! அடிக்கடி நம்ம பக்கம் வாருங்கள்!

      Delete
  3. நல்ல அலசல் நண்பா. நீங்க கூர்மையான பார்வையாளர் என்பதை நிறுபனம் செய்து இருக்கீங்க. இரண்டு விஷயங்கள் சொல்றேன். `முதலாவது, சிவகர்த்திகேயனின் உணர்வு,நெகிழ்ச்சி உண்மையானதாக இருந்தது. கோபியுடயது கொஞ்சம் டிராமா. இரண்டாவது, தோல்வி பயத்தினால் தான், ஜெகனுக்கு விட்டுகொடுத்து போல நடித்தார். இந்த நிகழ்ச்சியில் வருகிற போட்டியாளர்களை எல்லாம் சூர்யா flatter பண்ணுவது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. தங்களது பின்னூடத்துக்கு நன்றி நண்பா! நான் அத்தனை பெரிய கூர்மையான விமர்சகன் எல்லாம் இல்லை, ஆனால் அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருந்த போது ரொம்ப கடுப்பாகிவிட்டது. அது தான் பதிவாக வெளிவந்து விட்டது. நீங்கள் சொன்னது உண்மை தான், சிவாவின் உணர்வு உண்மையானதாக இருந்தது. சிவ சாதாரணமாக அவ்வாறு நெகிழ்ந்து போகிறவர் அல்ல. ஆனால் கோபியின் நடிப்பு சூப்பராக இருந்தது! கோபி இன்னும் கொஞ்சம் ஆடியிருந்தால் அவரது தரம் ஆட்டம் கண்டிருக்குமோ என்னவோ?

      சூரியாவின் செய்கைகளை கணிப்பிட முடிவதில்லை, போடியாளனை முகஸ்துதி பண்ணுவதன் மூலம் பிரதியுபகாரமாக தானும் , முகஸ்துதியை எதிர் பார்கிறாரோ என்னமோ? ( குறிப்பிட்ட நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருந்தால் புரிந்திருக்கும், கோபியை சூர்யா புகழ, சூர்யாவை கோபி பிகழ என்று மாறி மாறி பிகழ் மழை தான் போங்கள்)

      Delete
  4. அருமையான அலசல்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. ஆரம்பத்தில் சூர்யா வந்து சொல்ற விஷயங்கள் யாரோ எழுதிக் கொடுத்ததுனு எல்லாருக்கும் தெரியும், அதே மாதிரி அவர் கேட்கிற கேள்விகளும் அவரோட சொந்தக் கேள்விகள் இல்லைனு உங்களுக்குத் தெரியாதா? நீங்க இவங்க ரெண்டு பேரையும் கலாய்க்கனும் அதன் மூலமா VIEWS அதிகமாகனும்னு தான் எழுதி இருக்கீங்க..

    ReplyDelete
  6. wonderful post.மிக நல்ல பதிவு. நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டீர்கள்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...