உதைபந்து

Wednesday, April 18, 2012

பக்கத்து வீட்டில் பாச்சா பலிக்குமா? சூடு பிடிக்கிறது லண்டன்!



இந்த பதிவு நேற்று போட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். உதை பந்தாட்ட ரசிகர்களின் திருவிழாவின் இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதுதாங்க யுஏஃபா சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான அரையிறுதிப்போட்டிகள் நேற்று ஆரம்பித்திருக்கின்றது. அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கியிருக்கின்றது. ஒரு முனையில் ஜேர்மனியின் பிரபல அணியான பயன் முனீக்  எதிர் ஸ்பெயினின் ரியல் மட்ரிட் அணிகள் மோத , மறுமுனையில் இங்கிலாந்தின் செல்சியா அணியை ஸ்பெயினின் பார்சிலோன எதிர் கொள்கிறது.

நேற்றைய தினம் பயன் முனீக் அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதல் அரையிறுதி  போட்டியில், மட்ரிட் அணியை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முனீக் அணி. இரண்டாவது அரையிறுதி மட்ரிட் அணியின் மைதானத்தில் எதிர்வரும் 23ம் திகதி இடம்பெற இருக்கின்றது.மட்ரிட் அணி தனது மைதானத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணி என்பதால் முனீக் அணி இப்போது பெற்றிருக்கும் இந்த தற்காலிக வெற்றியை தக்கவைக்க  சற்று கடுமையாக போராடவேண்டியிருக்கும். ஏற்கனவே முனீக் அணி ஒரு கோல் முன்னணியில் இருப்பதால் பின்வரிசையை சற்று பலப்படுத்தி , தடுப்பு ஆட்டத்தில் ஆடுவது இப்போது பெற்றிருக்கும் தற்காலிக வெற்றியை தக்கவைக்க  பொருத்தமானதாக இருக்கும்.

மாறாக மேலதிக கோல் போடும் அவாவில் அதிகபட்ச தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில் , ரியல் மட்ரிட்டின் ஊடுருவல் தாக்கத்தை தடுக்க முடியாது போய்விடும். பின்வரிசை சற்று அசந்தாலும் சந்து பொந்துகள் கிடைக்கும் போதெல்லாம் சிந்து பாட காத்திருக்கும் கிறிஸ்டியானோ ரொனல்டோ,பென்ஸமா, ஓர்ஸில் ஆகியோருக்கு, பின்வரிசையை பலவீனப்படுத்தி இடம் கொடுப்பது முனீக் அணியை அதால பாதாளத்தில் தள்ளிவிடும்.

முனீக்கின் றிபறி, குரூஸ், ரொபன் போன்றோர் தமக்கு கிடைக்கும் பந்துகளை தவறவிடாமல் கோல் அடிப்பது அவசியம். நேற்றைய தினம் , குரூஸ் கோல் அடிக்கக்கூடிய சில பந்துகளை விரயமாக்கியது குறிப்பிடத்தக்கது. முல்லர், அலபா, குஸ்டாவா ஆகியோரது திறமான ஆட்டம் ரியல் மட்ட்ரிட்டின் மைதானத்தில் அளவுக்கு அதிகமாகவே தேவைப்படும். நேற்றைய போட்டியில் தடுமாறிய ஸ்டிவீன்ஸ்டேஜரது ஆட்டம் இன்னும் மெருகுபடாவிட்டால் , முனீக் அணி, பழுதுபட்ட அணியின் எஞ்ஜினுடன் தூரப்பிரயாணம் செய்யும் வண்டிக்கு சமனாகிவிடும். லாம் தலமையில்  இயங்கும் பின்வரிசை தடுப்பாட்டம் ஓக்கே ரகம் தான். மட்ரிட்டுடனான போட்டியில் கொஞ்சம் ஓவர்டைம் செய்யவேண்டியிருக்கும். 

இவையெல்லாம் சரியாக இயங்கும் பட்சத்தில் தமது சொந்த மைதானத்தில் வேறு இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் ஆடுவதை பார்க்கும் துரதிஷ்டத்தை முனீக் அணி தடுக்கலாம். (சம்பியன்ஸ் கிண்ண இறுதிபோட்டி முனீக் நகரில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.)மட்ரிட் அணியை பற்றி சொல்லவே வேண்டாம், தங்களது சொந்த மைதானத்தில் பின்னி பெடல் எடுப்பார்கள் என நம்பலாம். நேற்றைய போட்டி வெளி மைதான போட்டி என்பதால் கொஞ்சம் அதிக வேலை செய்த மட்ரிட்டின் பின்வரிசை தங்களது சொந்தமைதானத்தில்  கொஞ்சம் ஓய்வு எடுத்து விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும். 23ம் திகதி போட்டி தனியே கிரிஸ்டியானோ ரொனால்டோ, பெஸ்ஸமா, ஓர்சில்,காகா ஆகியோரின் ஷோவாகவே இருக்கும் என நம்பலாம். 

இதுவரை இடம்பெற்ற யுஏஃபா சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் அதிக தடவை சம்பியனாக வந்த மட்ரிட் அணியும் (9 தடவைகள் , கடைசியாக  2002 இல்), இதுவரை நான்கு தடவைகள் சம்பியனாக  வந்துள்ள முனீக் அணியும் (கடைசியாக 2001இல்) உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தை தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.



இப்போது இன்று நடைபெறவிருக்கும் அதிமுக்கியமான போட்டி பற்றி பார்க்கலாம். நடப்பு சம்பியனான பார்சிலோனா அணியும் ( இதுவரை பார்சிலோனா நான்கு தடவைகள் சம்பியனாக வந்துள்ளது,கடைசியாக 2011இல்), இதுவரை கிண்ணமே கைப்பற்றாத செல்சியா அணியும் ( 2008இல் இரண்டாமிடம் மட்டும் கிடைத்தது, சக நாட்டு அணியான மன்செஸ்டர் யுனைட்டட் அணியுடன் பரிதப தோல்வி கிடைத்தது.) செல்சியாவின் மைதானத்தில் மோதுகின்றன. 

செல்சியாவின் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியே இரு அணிகளின் வாழ்வா சாவா போட்டியாக இருக்கும். இரு அணிகளின் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும். காரணம் இரண்டாவது அரையிறுதி பார்சிலோனாவின் மைதானத்தில் இடம்பெற இருந்தாலும் அந்த போட்டியில் பார்சிலோனாவின் வெற்றி உறுதி. செல்சியாவால் பார்சிலோனாவை நியூ கேம்பில் வீழ்த்துவது என்பது முடியாத காரியம். தனது சொந்த மைதானமான நியூ கேம்பில் பார்சிலோனாவின் பலம் எப்படியானது என்பது உலகு அறிந்த செய்தி. 

ஆக இன்று செல்சியாவில் இடம்பெறவிருக்கும் இந்த போட்டிதான் செல்சியாவில் ஒரேயொரு அதிகபட்ச நம்பிக்கையாகவிருக்கும். அதே போல் பார்சிலோனாவும் இரண்டோ அல்லது அதற்கு மேலதிகமாக கோல்களை வாங்காமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம். காரணம் இரண்டு அல்லது அதற்கு மேலதிகமாக கோல்களை செல்சியா அடித்துவிடும் பட்சத்தில் பார்சிலோனாவுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிடும். நியூ கேம்பாகவே இருந்தாலும் , இரண்டு கோல்களை முன்னணியில் வைத்துக்கொண்டு பலமான பின்கள வரிசையை கொண்ட செல்சியா தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட தொடங்கினால் மூன்று கோல்களை அடித்து அந்த அணியை வீழ்த்துவது என்பது சற்று கடினமானது என்பதைவிட, இயலாத காரியமாகவே இருக்கும். தனது மைதானத்தில் பார்சிலோனா நிச்சயம் செல்சியாவை வீழ்த்தும், ஆனால் இரண்டுக்கு மேலதிகமாக கோல்கள் இருக்கும் பட்சத்தில், மொத்த கோல் அடிப்படையில் வீழ்த்தமுடியுமா என்பது கேள்விக்குறியே! ஆக மொத்தத்தில் செல்சியாவை விட ஒரு கோல் பின்னணியில் அல்லது  சமநிலையில் போட்டியை முடித்துக்கொள்வதே பார்சிலோனாவின் கிட்னிக்கு நல்லது. அதற்காகவே பார்சிலோனாவும் போராடும் என்பது எனது கணிப்பு, ஒரு கோல் பின்னணி என்பது பார்சிலோனாவுக்கு பெரிய தாக்கமாக இருக்காது. செல்சியாவுக்கு எதிராக தனது மைதானமான நியூ கேம்பில் இரண்டு கோல்களை அடிப்பது என்பது பார்சிலோனாவுக்கு கஷ்டமான வேலையாக இருக்கப்போவது இல்லை.. இப்போது பார்சிலோனா இருக்கும் ஃபோர்மில் இரண்டென்ன மூன்றும் சாத்தியம் தான். அதற்காக செல்சியாவிடம் இன்று இரண்டு அல்லது அதற்கு மேலதிகமாக வாங்கிகட்டினால்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!



இப்போது இந்த போட்டியில் இரு அணிகளின் சாதக பாதக  நிலைகளை பார்க்கலாம்.முதலில் செல்சியாவின் பக்கம் போகலாம்.

முதலில் இது செல்சியா அணியின் மைதானம், பழக்கப்பட்ட மைதானம்  ஆர்பரிக்கும் ரசிகர்கள் இவை போதும் ,செல்சியா அவர்களது மைதானத்தில் ஒரு உத்வேகத்துடன் ஆடுவதற்கு, இதுவே அவர்களது முதல் பலம், இது ஒரு சின்ன சைக்காலஜி!

அடுத்து செல்சியாவின் பலம் வாய்ந்த வீரர்கள் வரிசை. டொரைஸ், டிரக்பா, கோல், டெர்ரி, மிகேல், கலோவு, லூகாகு, லம்பார்ட் என்று மிரட்டும் வீரர்களைக்கொண்ட அணியாக இருகிறது செல்சியா! சமீப கால போட்டிகளில் செல்சியாவின் முன்கள வீரர்களது ஆட்டம் பிரம்மாதமாக இருகிறது. கடந்த ஃஎப்.ஏ கிண்ண டோடின்காமுடனான போட்டியில் 5 கோல்கள் அடித்து அசத்தியதை மறக்க முடியாதது.

பார்சிலோனாவின் வயதான புயோல் வகையறாக்கள் நெருங்கமுடியாத வேகத்தில் ஓடும் டிரக்பா, டொரைஸ், மிகேல் ஆகியோர் கூடுதல் பலம், பார்சிலோனாவின் பின்வரிசை சற்றே கண் அசந்தாலும் அந்த செக்கனில் கோல் போடும் அசகாய சூரர்களை கொண்டது செல்சியா. "லம்பார்ட்"  செல்சியாவின் தூண் , முன்வரிசை வீரர்களுக்கு சரியான் முறையில் பந்துகளை பகிர்வதிலிருந்து , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கோல் அடித்து அசத்தும் அசகாய சூரன். இவர் மீது பார்சிலோனாவின் ஒரு கண் இருக்க வேண்டியது அவசியம்.

 செல்சியாவின் உச்சக்கட்ட பலம் அதன பின்வரிசை தான் என்றால் மிகையாகாது. கோல், டெரி, லுவிஸ் என்று மெஸ்ஸி, பெட்ரோ, ஃபபிரிகாஸ் வகையறாக்களுக்கு சவால் விடும் அளவுக்கு திறமையான வீரர்கள். இவர்களது கண்களில் மண்ணைத்தூவி விடு கோல் போடுவது மெஸ்ஸி வகையறாக்களின் மேலதிக தகமையால் தான் முடியும். கோல் போடனும்ன்னா கொஞ்சம் ஓவர் டைம் பார்க்கணும் பாய்ஸ்!

செல்சியாவின் பலகீனம் என்றால் சற்று வயதான வீரர்கள். சூடான ஆட்டத்தில் ஈடுகுடுக்காத இவர்களது உடல்தகுதிதான் சற்று பிரச்சனைக்குரியது. டெர்ரி, லம்பார்ட், டரகோபா போன்றோர் சிறந்த ஆட்டக்காரர்களாக இருக்கின்ற அதே வேளை வேகமான ஆட்டத்தின் போது இவர்களது பூஸ்ட் இறங்கி விடுவது ஒரு மைனஸ் என்று சொல்லலாம்.


அடுத்து சாபி, இனியெஸ்டா வகையறாக்களை சமாளிக்க ஒரே ஒரு லம்பார்ட் போதாது, இந்த இரு இமயங்களையும் சமாளிக்கும் அளவுக்கு மத்திய வரிசையில்  போதுமான தகுதியான ஆட்பலம் இல்லாமை. இந்த இருவருக்கும் இடம் கொடுக்கும் பட்சத்தில் மெஸ்ஸி அல்லது அலக்சிஸ் கோல் போடுவது உறுதி.

இப்போது பார்சிலோனாவின் பக்கம் வரலாம் பலம் என்று பார்க்கப்போனால் , பார்சிலோனாவுக்கு அதன் வீரர்கள் மட்டுமே பலம். உளரீதியாக எந்த பலமும் கிடைக்கப்போவது இல்லை. ஏனெனில் இது செல்சியாவின் மைதானம். வேண்டுமானால் கடந்த போட்டிகளில் லண்டனில் வைத்து செல்சியாவை வீழ்த்திய ஒரு நம்பிக்கை மட்டுமே ஒரே ஒரு உள ரீதியான நம்பிக்கையாக இருக்கலாம்.

மெஸ்ஸி, சாபி, இனியெஸ்டா, ஃபப்ரிகாஸ், டானி அல்விஸ் ,சேர்ஜியோ, பெட்ரோ, அலக்ஸிஸ், தியாகோ, பீகே போன்ற வீரர்கள் நல்ல ஃபோர்மில் இருப்பது பார்சிலோனாவின் பலம். இனியெஸ்டா + சாபியின் உதவியுடன் மெஸ்ஸி ஒரு கோல் போட்டால் அதுவே பார்சிலோனாவுக்கு போதுமானதாக இருக்கும். ( செல்சியா இரண்டு கோல்களுக்கு மேல் அடிக்காத பட்சத்தில்) இடைவேளையின் பின்பு களமிறங்கும் கொயக்கா, டெல்லொ போன்றோர் தங்கள் பங்குக்கு, தங்களது இளமை துள்ளும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது கூடுதல் பலமாக இருக்கும். ஆனால் டெல்லோ இந்த போட்டியில் ஆடும் சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன்.



பார்சிலோனாவின் பலவீனம் என்று பார்க்கும் போது முதலாவது வேற்று மைதானம் என்பது தான். அந்த மன உளைச்சலுடன் ஆடுவது சற்று சவாலான காரியம் தான்.

அதைவிட அணிரீதியில் பார்சிலோனாவின் பலகீனம் என்றால் அதன் பின்கள வரிசை தான். அபிடால் புற்று நோய் என்று வைத்தியம் பார்க்க கிளம்பிவிட்டதால், அல்லாடுகிறது பார்சிலோனாவின் பின்வரிசை. இன்று எதிர் பார்க்கப்படும் பின்கள வரிசை புயோல்,அண்ரியானோ, பீகே, டானி அல்விஸ். இதில் இடது பக்க பிகள வீரராக இருக்கும் டானி அல்விஸ் அதிகமான நேரங்கள் இடது பக்க முன்கள வீரர்களுக்கு உதவும் பொருட்டு அவரது பொசிசன் அமைக்கப்பட்டு இருப்பதால் , டிரகோபா, காலோஉ போன்றோர் அந்த பக்கமாக ஊடுருவும் அபாயம்ம் அதிகம். 

அடுத்டு அண்ரியானோ, துடிதுடிப்பான வேகமான பின்கள வீரர், செல்சியாவின் அதிவேகமாக ஓடும் முன்கள வீரர்களை துரத்தக்கூடிய ஒருவர். ஆனால் மனிதர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதால் மஞ்சள், சிவப்பு அட்டைகள் காட்டப்பட்டு வெளியேறும் அபாயம் அதிகம்.

அடுத்து புயோல்,உலகின் தலைசிறந்த சிறந்த பின்களவீரர், அணியின் தலைவர். ஆனால் சிங்கத்துக்கு வயசாகிவிட்டது. சீறி ஓடும் செல்சியாவின் சிறுத்தைகளை துரத்தி அடிக்க வேகம் காணாது. இவரை களமிறக்காமல் அந்த இடத்துக்கு மஸ்கரானோவை களமிறக்குவது உத்தமம்.

அடுத்து பீகே! பார்சிலோனாவின் பின்களத்தில் ஒரேயொரு நம்பிக்கை இவர் தான். இவரும் பல்பு வாங்கும் பட்சத்தில் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!



இப்போது சமீபத்தைய போட்டிகளில் இந்த இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட போது எத்தனை ஆணிகள் பிடுங்கப்பட்டது என்று பார்க்கலாம்.

21 பெப்ரவரி 2006 பார்சிலோனா வெற்றி 2 - 1 (செல்சியா)
08 மார்ச் 2006 போட்டி சமநிலை 1 - 1 (பார்சிலோனா)
18 ஒக்டோபர் 2006 செல்சியா வெற்றி 1 - 0 (செல்சியா)
31 ஒக்டோபர் 2006 போட்டி சமநிலை 2- 2 (பார்சிலோனா)
28 ஏப்ரல் 2009 போட்டி சமநிலை 0 - 0 (பார்சிலோனா)
06 மே 2009 போட்டி சமநிலை 1 - 1  (செல்சியா)

அடைப்புக்குள் இருப்பது போட்டி நடந்த மைதான அணி அது தாங்க ஃகோம் டீம்.

இந்த தரவுகளின் அடிப்படையில் இரு அணிகளும் சம பலம் கொண்டிருப்பதையே காட்டுகின்றது. ஒரு சின்ன முன்னேற்றம் மட்டுமே மாற்றமாகியிருக்கின்றது. அதாவது இந்த போட்டிகள் இடம்பெற்ற காலப்பகுதிகள் 2006 - 2009 வரையானதாகும். இக் காலப்பகுதியில் செல்சியாவின் பலம் ஓங்கி இருந்தது நிதர்சனம். ஆனால் 2010 உலக கிண்ண போட்டிகளின் பின்னர் பார்சிலோனாவின் பலமானது சற்று அதிகரித்திருக்கிறது. 2010 உலக கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின் அணியின் அனேக வீரர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பார்சிலோனா அணி உள ரீதியிலும் , வீரர்களின் செயற்திறனிலும் கூடுதல் பலம் பெற்றிருக்கிறது. இதை 2010,2011,2012 சீசன்களில் பார்சிலோனாவின் சாதனைகளை வைத்தே கூறிவிடலாம்.

ஆக இன்று சமபலம் கொண்ட உலகின் தலைசிறந்த இரு அணிகள் மோதுகின்றன. இன்று எதிர் பார்க்கும் கோல் விபரம். 
(1,1) அல்லது 
(2,1) செல்சியா வெற்றி.

24ம் திகதி பார்சிலோனாவின் மைதானமான  நியூ கேம்பில் எதிர் பார்க்கப்படும் கோல் விபரம்
(2,0) பார்சிலோன வெற்றி
அல்லது
(3,1) பார்சிலோனா வெற்றி

இன்றைய போட்டி இலங்கை , இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15கு ஆரம்பமாகிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் டென் அக்ஷன் அலைவரிசையில் போட்டியை பார்க்ககூடியதாக இருக்கும். ஒன்லைனில் போட்டியை காண்பதற்கு www.livetv.ru/en என்ற இணையத்துக்கு செல்லுங்கள்.

உங்களது கருத்துக்களை தயவுசெய்து பின்னூட்டமாக இடுங்கள்




6 comments:

  1. sorry brother none of ur goal predictions are correct... chelsea 1-0 barca......

    ReplyDelete
    Replies
    1. thank for the comment brother! but it just a prediction. but its good to barcelona to have a one goal lead. one goal is just nothing in New camp. u might realize the Barca game. they were played like home team. ball position were 72% for Barca! thanks for da comment again.

      Delete
  2. பாஸ்.. இவ்வளவு நாளா ஏன் உங்க வலைப்பதிவு என் கையில சிக்கலையோ! இன்று பார்த்தேன்.. வாசகனானேன்!
    எனக்கும் கால்பந்தில் அலாதி பிரியம். முதலாவது வலைப்பக்கமே முழுக்க முழுக்க கால்பந்து செய்திக்களுக்காகுன்னு தொடங்கினேன்.. யாரும் வராததால் ஹாலிவுட்டிற்கு மாறிட்டேன்..

    நீங்கள் கால்பந்து குறித்து எழுதுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. என்னோட விருப்பத்திற்குரிய க்ளப்கள்-
    1. Real Madrid
    2. Manchester United
    3. Schalke FC
    விருப்பத்திற்குரிய வீரர் C.Ronaldo, பிடித்த தேசிய அணி France

    நீங்கள் பார்சிலோனாவின் தீவிர ரசிகர் போல தெரிகிறது.. இருந்தாலும் அடிக்கடி இங்கு வருவேன்..

    ReplyDelete
  3. 2009 Champions League அரையிறுதியில் நடுவர்களின் பக்கச்சார்பான முடிவுகளால், செல்சீ பரிதாபமாகத் தோற்று பார்சிலோனா முன்னேறிப் போனது ஞாபகமிருக்கா? அதுக்கு பதிலடி தான் நேற்று விழுந்தது..

    அடுத்த லெக் பார்சிலோனாவில் நடக்கவிருப்பதால் உங்க டீம் ஜெயிக்கத்தான் சான்ஸ் அதிகம்..
    ஆனால் away goal ரூல் அறிமுப்படுத்தப் பட்டிருப்பதால், ரெண்டு கோல் (அல்லது அதிகமான) வித்தியாசத்தில் ஜெயித்தால் மட்டுமே உங்கள் இறுதி வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும்!
    நேத்து மாதிரி full defenceல செல்சீ விளையாடினா, கதை அம்பேல்!

    *கடவுள்னு ஒருத்தன் இருக்கான்ப்பா!
    (சும்மா ஜாலிக்காகவே.. சீரியசா எடுத்துக்காதீங்க)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தங்களது வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்! தொடர்ந்து உங்களது ஆதரவு எனக்கு வேண்டும்.

      2009 என்பது முடிந்து போனது அதைப்பற்றி இப்போது பேசுவது அர்த்தமற்றது என்பது எனது தாழ்மையான கருத்து, அத்தோடு நடுவரின் பிழையான தீர்ப்பு என்பது பார்சினோலாவின் தவறில்லையே! இதை பதிலடியாக நீங்கள் எடுத்துகொண்டால் அதை இல்லை என்றும் மறுக்க முடியாது. நான் பார்சிலோனாவின் தீவிர ரசிகன் தான் , ஆனால் நடுநிலமையான உதைபந்தாட்ட ரசிகன். எனது பதிவைப் பார்த்தால் அது உங்களுக்கு புரிந்திருக்கும். நான் செல்சியாவை குறைத்து மதிப்பிடவில்லையே! நேற்றைய போட்டியில் செல்சியா வெல்லும் அல்லது சமநிலை என்று தானே குறிப்பிட்டிருந்தேன்.

      ஆனால் நேற்றைய போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் புரிந்திருக்குமே, யார் பக்கம் ஆட்டம் இருந்தது என்று! 72% பந்து பார்சிலோனாவின் பக்கமே இருந்தது, அது போக நேற்றைய ஆட்டத்தில் அறிவிப்பாளர்கள் கூட பார்சிலோனா தான் ஃகோம் டீம் போல ஆடுவதாக குறிப்பிட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள். உங்கள் மன சாட்சிக்கு தெரியும் எந்த அணியின் ஆட்டம் நேற்று சிறப்பாக இருந்தது என்று. சனியாஸ் ஒன்று , பண்ணாட ஃபப்ரிகாஸ் இரண்டு இறுதி நிமிடத்தில் பெட்ரோ ரொட்ரீகஸ் ஒன்று என்று இலகுவாக அடித்திருக்க வேண்டிய நான்கு கோல்களை பார்சிலோன தவறவிட்டது காலக் கொடுமை என்பதை விட வேறு என்ன சொல்வது?

      செல்சியாவின் மைதானத்தில் இவ்வாறான ஒரு சிறந்த ஆட்டத்தை பார்சிலோனாவால் வெளிப்படுத்த முடிந்திருகிறது என்றால் அவர்களது கோட்டையான நியூ கேம்பில் அவர்களது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. நான் எனது பதிவில் கூறியது போல இரண்டு கோல்களுக்கு அதிகமான கோல் அடித்து பார்சிலோனா வெல்வது உறுதி. இதை பார்சிலோனா ரசிகனாக சொல்லவில்லை ஒரு உதைபந்தாட்ட ரசிகனாக சொல்கிறேன்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

      அது பொகட்டும் எங்களுக்காவது செல்சியா, உங்களுக்கு பயன் முனீக் ! எப்பூடி? (சும்மா வெளையாட்டுக்கு) அது சரி 21ம் திகதி நம்ம ரெண்டு பேருக்கும் சமர் இருக்கிறது , ஞாபகம் இருக்கிறதா "எல் கிளாசிக்கில்" பார்சிலோனா மட்ரிட் அணிகள் மோதுகின்றதை சொன்னேன்.

      அட இதையெல்லாம் சீரியசா எடுத்துக்கலாமா? எப்போதும் நாம் நண்பர்களே!

      மீண்டும் உங்களது ஆதரவுக்கும் , மதிப்புக்குரிய பின்னூட்டத்க்டுக்கும் நன்றி நண்பா!

      Delete
    2. பயர்ன் மியூனிக் ஜெர்மன் டீமாச்சே.. clinicalஆக விளையாடுவார்கள்.. அங்கே இங்கிலிஷ், ஸ்பானிஷ் லீக் மாதிரி aggression காட்டினா பத்தாது..
      ஆனாலும் நாம ஒரு கோல் Away மேட்சுல போட்டுட்டோம்.. ஸோ, அடுத்த லெக்ல 1-0ன்னு வின் பண்ணாலே போதும்.. உள்ளே போயிடுவோம்!


      * எல் கிளாசிக்கோவைத்தான் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. ரெண்டு டீமுக்குமே வாழ்வா? சாவா?தான்! keeping my fingers crossed..

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...