உதைபந்து

Friday, April 27, 2012

"கொலைவெறி நாயகன்"தனுஸ் நிகழ்ச்சியில் பிரபலபதிவர்களுக்கு அனுமதி மறுப்பா?


இன்னும் எத்தன பதிவுடா மிச்சம் வச்சிருக்க?


எந்த பக்கம் திரும்பினாலும் நம்ம சூர்யா அறிவு பூர்வமாக நடத்திக்கொண்டிருக்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி செம சூடா போய்க்கிட்டு இருக்கு. விஜய் டிவியோட டி.ஆர்.பி ரேட்டிங் சும்மா பவர் ஸ்டார் புகழாட்டம் உச்சத்தில ஏறி நிற்பதில் இந்த அறிவியல் நிகழ்ச்சிக்கு ஒரு பங்கு இருக்குன்னா அது மிகையில்லை, குறையில்லை ஒண்டுமே இல்லை. 

அட ! நாம கூட இவ்ளோ நாளா பதிவு எழுதுறமே ஒரு ஈ, காக்க கூட வந்து நம்மோட பதிவில கக்கா , மூச்சா கூட போகுதில்லையே , என்னா பண்ணலாம்னு நான் தெருமுனையில நடு உச்சி வேளையில வேல வெட்டி இல்லாம யோசிச்ச போது தான் எனக்கு இந்த ஐடியா வந்திச்சி! நாமளும் ஒரு காசு நிகழ்ச்சி பண்ணி என்னோட பி.ஆர்.பி ( அதாவது பிளொக் ரேட்டிங் பாயிண்ட்) ஐ சும்மா எகிற வச்சி சி.பி செந்தில்குமாருக்கே சவால் விடணும்ன்னு முடிவு பண்ணினேன். என்னோட பதிவுக்கு கிடைக்கிற hits களை பார்த்துவிட்டு என்னோட பங்காளிகளான JZ , குமரன், டூலிட்டில் எல்லாம் பதிவுலகத்தை விட்டு துண்டக்காணம் துணியக்காணம்னு ஓடனும்னா என்ன மெரட்டு மெரட்டணும்?


இப்பிடி நாலஞ்சு நாளா சிந்திச்சு சிந்திச்சு எனக்கு பேதியே வந்திரிச்சு, பேதி வந்து ஆறாம் நாள் ஐடியாவும் வந்திச்சி! இப்போ டாப்புல இருக்கிற சூர்யாவ வச்சி நிகழ்ச்சி பண்ணி விஜய் டிவி பேர் வாங்றாப்புல நாமளும் டாப்ல உள்ள ஒருத்தர வச்சி இந்த நிகழ்ச்சியை நடத்தணும்னு முடிவு பண்ணினேன். ஒடனே நம்ம சந்தானத்துக்கு போன் போட்டு "அண்ணே பாவம்ணே நான் , வந்து ஒரே ஒரு நிகழ்ச்சி மட்டும் பண்ணி குடுங்கணே, அப்புறம் நான் நெம்பர் வன் பதிவர் ஆயிடுவேன்னு" சொல்லி கெஞ்சி பாத்தேன். ரொம்ப பிஸியா இருந்ததனால அவரு என்னய கண்டுக்கல. ஒடனே என்னோட பிரம்மாஸ்திரத்த கையில எடுத்தேன். அவரு கிட்ட ஒரு வார்த்த தான் சொன்னேன் , ஒடனே ஒத்துகிட்ட அவரு அடிச்சு பிடிச்சு ஓடியந்திட்டாரு, 

"என்ன சொன்னீங்க பாஸ்"

"உண்மைய சொன்னேன்"

"டேய் மொக்கைய போடம சொல்றா"

"அது வந்துங்க , இத தான் சொன்னேன். சார் நான் பிரபஞ்ச ஸ்டார் தனூஸ் பத்தி தான் நிகழ்ச்சி பண்ண போறேன், இதில நீங்க கலந்துக்கலன்னா அப்புறம் உங்களுக்கு தான் நஷ்டம்னேன். ஒடனே அவரு , யோவ் இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா நீயி , இதோ வந்துடரேன்னு வந்துட்டாரு" 

நீங்க தான் அந்த கூட்டத்திலயே நல்ல சிரிச்ச முகமா இருந்தீங்க... 


சந்தானம் வந்துட்டாலும் இப்பொ இன்னொரு சிக்கல், என்னதான் சூர்யா நிகழ்ச்சி பண்ணினாலும் விஜய் டிவியோட டி.ஆர் .பி ரொம்ப எகிறினது எப்போன்னா சிவகார்திகேயன் அண்ட் கோ ஆடிய போது தான் , சொ அப்பிடியொரு ஸ்டார் நிகழ்ச்சியா இது இருக்கணுன்னு முடிவு பண்ணினேன். அது சரி ஸ்டார் ஓகே, எந்த ஸ்டார கூப்பிடுறது? ஒடனே ஞாபகம் வந்தது என்னான்னா நம்ம பதிவுலகில பட்டைய கெளப்புற பதிவர்கள் நாலு பேர கூட்டியாந்திர வேண்டியது தான்னு. ரொம்ப பேமஸான ஆட்களை கூட்டியர வேணுமே, எனக்கு தெரிந்த அந்த மூன்று பிரபல பதிவர்களுக்கு ஃபோன் பண்ணினேன். என்னதான் ஈ மொய்க்காத பதிவுகள போட்டு புட்டு நாளுக்கு நாலு பேராவது தங்களோட பதிவுகளை பாக்கமாட்டாய்ங்களான்னு நாளுக்கு ஒம்போது தடவை பதிவ தொறந்து தங்களோட stasஐ பாத்துகிட்டு , எவனாச்சும் பின்னூட்டம் போட்டிர மாட்டாய்ங்களான்னு நாக்க தொங்கப்போட்டுகிட்டு கெடக்கிற அந்த மூணும், நானா வலிய போயி கேட்டதும் ஏதோ நாளுக்கு நாப்பதாயிரம் hits வாங்குற பிரபல பதிவர்கள் ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிச்சுங்க. அப்புறம் குவாட்டரும் கோழி புரியாணியும் தாரேன்னதும் அத்தனையும் அரங்கில் ஆஜர்!

இதோ அந்த மூன்று பிரபல பதிவர்கள்.

1. கொழும்பில் இருந்து JZ....... (கைதட்டல் காதை பொளக்கிறது. பூரா ரெக்கார்டிங்கு)

2. மலேசியாவில் இருந்து குமரன். ( கைதட்டல்.......)

அப்புறம் இந்தியாவில் இருந்து டாக்டர் டுலிட்டில். ( கைதட்டல்..........)

அப்புறம் விசேட விருந்தினரா பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமியை கூப்பிட்டேன், ஆனால் குவாட்டருக்கும் கோழி புரியாணிக்கும் தல மசியிறாப்ல தெரியல. காரணம் தல ஏற்கனவே நாலஞ்சி ஃபுல்லும் ஏழெட்டு மட்டன் புரியாணியையும்  ஒள்ள எறக்கிட்டு  மல்லாக்க படுத்திரிந்திச்சி. அப்புறம் அவரு கிட்டேயும் ஒரு உண்மைய சொன்னேன் , ஒடனே மப்பு தெளிஞ்சு குடுகுடுன்னு ஓடியாந்திட்டாரு. அந்த உண்மை எதுன்னு கெஸ் பண்ணி பின்னூட்டத்தில போடுங்கோ.......

சரி இப்போ எல்லாம் ரெடி, நிகழ்ழ்ச்சி பண்ணும் பொறுப்பை சந்தானத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்று உங்களோடு ஒருவனாக நின்று நிகழ்ச்சி பார்க்க போகிறேன். ( என்னது எங்களோட நின்னு நிகழ்ச்சி பாக்க போறியா? சனியனே குளிச்சி எத்தன நாளுடா? தள்ளி நில்ராங் கொய்யாலே!)

ஆய்! வணக்கம் வந்தனம் நமஸ்தே, ஆ! குஜால் , குஜால்! எனதருமை சூப்பர் ஃபிகர்களே, இந்த பதிவை படிக்கும் வாசக வாலிபர்களின் அருமையான அட்டு ஃபிகர்களே! இல்லாத்துக்கும் இந்த காட்டு பூச்சியின் வணக்கம். அப்பா அம்மா கூட வந்த ஃபிகருங்க எல்லாம் வன் ஸ்டெப் பாக்கில போங்கடி, சனிக்கெழம ஃபப்புக்கு போய்ட்டு , ஃபுல்லா மப்படிச்சிட்டு, அந்த ஊத்த வாய கழுப்வாம , தலவிரிகோலமா டிவில உங்க கேவலமான மொகத்த காட்டணும்கிற அல்ப புத்தில இங்க வந்திருக்கிற ஆல் இன்டியா அல்ரா மார்டன் ஃபிகருங்க எல்லாம் என்னோட மொகத்துக்கு முன்னாடி உக்காருங்க. ஏய், நீ தள்ளி போடி ரொம்ப நாறுது, என்ன ராவா அடிச்சியா? 

நான் உங்க காட்டு பூச்சி, இது உங்கள் அபிமான "முடிஞ்சா ஜெயிச்சு பாரு ஒரு கோடி" நிகழ்ச்சி. பல வாரங்களா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சின்னு அந்த அல்ப சொல்ல சொல்லிச்சி, சொல்லிட்டங்கோ..... போட்டியின் விதி முறைகள் ரொம்ப சிம்பிள். விதிகள் இதோ....

* அனைத்து கேள்விகளும் அனைத்துலக சுப்பர் ஸ்டார் தானை தளபதி தனுஸ் பற்றியதாகவே இருக்கும்.


*ஒரு போட்டியாளருக்கு மூன்ரு கேள்விகள் அதிகபட்சமாக கேட்கப்படும்.

*ஒரு கேள்விக்கு சரியான பதில் சொன்னாலே ஒரு கோடி ரூபாய் நீங்கள் ஜெயித்து அடித்த காந்தி ஜெயந்திக்கு கடை பூட்டும் வரை தண்ணியடிக்கலாம்.

* விடை தெரியா விட்டால் உங்களால் இரண்டு கேள்விகளை "பாஸ்" பண்ண முடியும். அதாவது தொடர்ந்து இரண்டு கேள்விகளுக்கு நீங்கள் விடை சொல்லாமல் மூன்றாவ்து கேள்விக்கு  போக முடியும். மூன்றாவது கேள்விக்கும் பதில் சொல்லாம 'பாஸ்" அப்டீன்னு சொன்னீன்னா மவனே சாணிய கொண்டே அடிப்பேன் , ஜாக்கிரதை.

* ஏதாவது ஒரு கேள்விக்கு பிழையான விடை சொன்னாலும் மவனே , ஓடிப்போய் மறுபடி இது மாதிரி ஏதாவது மொக்க பதிவு எழுதி பிழச்சுக்கொள்ள வேண்டியது தான்.

* உங்களுக்கு இருக்கிற லைஃப் லைனுக்கு அளவே கெடையாது, நீங்க யாருகிட்ட வேணும்னாலும் பதில் கேட்டுக்கலாம். வேணும்னா தனூஸ் கிட்ட கூட ஃபோன் போட்டு கேக்கலாம்.

இது தான் இந்த போட்டிக்கான விதிகள். ரொம்ப சிம்பிளா இருக்கில்ல? ஓகே வாங்க வெளையாடலாம். இதுல போட்டி எல்லாம் கெடையாது யாரச்சும் ஒருத்தர் முன்னாடி வந்து சூடான இருக்கையில் (hot seat)  அமருங்கள். உங்களுக்காகவே ஸ்பெசலா முனியாண்டி விலாஸ் கொத்து பரோட்ட பிளேட்ட சுட சுட எடுத்தாந்து வச்சிருக்கோம். hot சீட்னா சூடா இருக்கணும்ல அது தான்.

என்னய வச்சு தான் நீ HITs வாங்கணும்னா கெளப்புரா கெளப்புரா ராஜா என்சாய்...


மொதல்ல யாரு வர்ரது? டேய் என்னாங்கடா ஆளாளுக்கு பின்னாடி ஓடுரீங்க , டேய் குவாட்டருக்கு ஆசப்பட்டு உங்க குடிய கெடுத்துக்க வந்துட்டீங்க இல்ல, அப்புறம் என்னடா  ஜெயலலிதாவ கண்ட எம்.எல். ஏ வாட்டம் பம்முறீங்க. வாங்கடா டேய். ! இப்போ வரலேன்னு வச்சுக்கோ அப்புறம் பவர் ஸ்டார் படத்த நாள் பூரா பாக்கும் படி பண்ணிடுவேன் ஜாக்கிரதை!

அண்ணே ! பன்னிக்குட்டி அண்ணே , அவனுக தான் சில்றப்பசங்க பம்முறாய்ங்கன்னு பாத்தா , பதிவுலகுக்கு வந்து ஏழு கழுத வயசாகுது நீங்கழுமா? 

"டேய் படவா, அப்டியே சப்புன்னு அறைஞ்சிடுவேன் ஜாக்கிரத, ஏதோ டாகுடர் விஜய் பத்தின்னா ஏதோ சொல்லிக்குவேன் , இந்த ஓணான் பயல் எப்போ எத பேசும்னு அந்த நாய்கே.  தெரியாது அவனபத்தி எனக்கு என்னடா தெரியி... இந்த தரித்திரம் புடிச்ச பிளாக்கு ஓணரு,  என்னோட வீக்னஸு தெரிஞ்சு வச்சிகிட்டு அதில டச்சு பண்ணி என்னய வர வச்சிட்டாய்யா... ஆனாலும் இது ரொம்ப அநியாயம்டா.... ஒரு பிஸியான பதிவர இப்டியெல்லாம் டாச்சர் பண்றது அக்கிரம்ம்டா டேய்... நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டிங்கடா......'

"அது என்னாணே அந்த வீக்கினசு?'

"டேய் ல்கலரிங்க தலையா, இந்த டக்கால்டி வேலையெல்லாம் எங்கிட்ட ஆகாது மகனே, அத தெரிஞ்சுகிட்டு நீயி என்னய மெரட்டலாம்னு பாத்தியா, யாருகிட்ட ரவுசு பண்ற பிச்சுபுடுவேன் பிச்சு. தமிழ் நாட்டு மானத்த நானே தான் காப்பாத்தணுமா? காந்த கண்ணழகி ஃபாலோ மீ யா... ஸ்ராட் த மியூசிக்...... டேய் தள்ளி உக்கார்ரா...."

"அண்ணே மப்பு இன்னமும் தெளியல போல .. உங்க சீட்டு அங்க இருக்குண்ண" 

"ஓ! சத்திய சோதனை, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...... ஆஆஆஆஆஆஆ... அட நாய்ங்களா என்னடா சீட்டு இந்த சூடு சுடுது?"

'அது தாண்னே சீட்டு"

" நீ வெளிய வாடி உனக்கு அங்கயே குறி வச்சுடறேன்..... ஆஸ்க் மீத கொஸ்டீன் மேன்"

"இப்போ நம்ம பன்னிக்குட்டி ராமசாமி அண்ணே ஆட போறாரு , இவர பத்தி சொல்லணுமின்னா , பதிவுலகின் பிதமகர்களில் ஒருவர், பதிவுலகில் இவரை பின் தொடராதவன் ரசனை கெட்டவன்னு கூட சொல்லலாம். பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லாத ஒரு பிரபலம் இவரு, அவர் தான் நம்மோட மொதல் போட்டியாளர். அண்ணே உங்கள பத்தி ஏதாச்சும் சொல்லுங்களேன்"

"நான் தான் அமேரிக்க அதிபர் ஒபாமான்னு சொன்னா நம்பவா போறாய்ங்க, படிக்க வேற எதுவுமே இல்லாம இந்த மொக்க பிளாக்க படிச்சிகிட்டு இருக்குது இந்த பன்னாடைய்ங்க இதுகளோட என்ன பேச்சு. யூ ஸ்டார்ட் த கொஸ்டீன்யா"

(டங்கர டிங்கர டங்கர டிங்கர டாண் டாண் .... டங்கர டிங்கர........# டெரர் சவுண்டு எஃபக்ட்டு)

"ஓகே மிஸ்டர் ப.கு.ரா, உங்களுக்கான முதல் கேள்வி .......

1. பின்வரும் தலைவன் தனூஸ் படங்களில் எந்த படம் அட்டர் பிளாப் அல்லாதது? (கேள்வியை இங்கிலிபிஸ்ஸில் ரிப்பீட் செய்கிறார்)

உங்களுக்கான ஆப்ஷன்ஸ் .....

A)சுள்ளான்

B)ட்ரீம்ஸ்

C)புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

D)படிக்காதவன்

'நல்ல யோசிச்சு சொல்லுங்க , எத்தன லைஃப் லைன் வேணும்னாலும் நீங்க யூஸ் பண்ணிக்கலாம். பதில் சரியா இருந்த கைல ஒரு கோடி இப்பவே குடுத்துருவோம். நல்லா யோசிங்க ராமசாமி!

ப.கு.ரா :- டேய் ! இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா... என்னோட பதிவு எதுனாச்சும் உனக்கு புடிக்கலன்ன அங்க வெச்சி மூஞ்சில அடிச்ச மாதிரி "சப்பு சப்புனு" நாலு காமன்டு போட்டுட்டு வேணும்னா வா, ஆனா அதுக்காக இப்பிடி சிலோன் வரைக்கும் கூட்டியாந்து , வித்தியாசம் வித்தியாசமா பழி வாங்கிறது நல்லா இல்லடா.... இருந்தாலும் நீங்க ரொம்ப லொள்ளு புடிச்ச ஃபாமிலில பொறந்தவங்கடா.... 

எல்லாம் என்னோட நேரம்...


"அவசரப் படாதிங்க மிஸ்டர் பன்னிக்குட்டி நிதானமா யோசிங்க "

ப.கு.ரா :- எந்திரிச்சு ஓடிப்போயிரு நாயே.. படுவா மறுக்கா பேசின லேப் டாப்லயே அடிச்சு சாகடிச்சிருவேன். ஒரு திட்டத்தோட தான்டா நீங்க வேல செய்றீங்க... அம்மா தாய் குலமே. உங்க கைல மொபைல் ஃபோன் இருக்கில்ல , அத மிஸ்டு கால் குடுக்க மட்டும் தான் யூஸ் பண்ணுவீய்ங்களா? இந்த பாவப்பட்ட ஜென்மத்துக்கு உதவ பயன் படுத்த கூடாதா...? எந்த ஆப்ஷன்னு கொஞ்சம் எஸ்.எம்.எஸ் பண்ணுங்கடி ஆத்தா.....

"ராமசாமி லைஃப் லைன யூஸ் பண்ணிக்கிறாரு"

ப.கு.ரா :- டேய் நீயி பேசாம இர்ரா வண்டுருட்டி தலையா... ஏய்! என்னங்கடி எல்லாரும் நாலு ஆப்ஷனையும் அனுப்பி இருக்கீங்க , இந்த லட்சணத்தில உங்களுக்கு மூஞ்சு மறையிறாப்ல மேக் அப்பு.. எந்திரிச்சு ஓடுங்கடி... டெய்ய் சந்தானம் பையா, நல்லா பாத்து சொல்ல்ரா , ஒரு வெடையா இல்லாங்காட்டி நாலு வெடையான்னு பாத்து சொல்லுடா....

"மிஸ்டர் ஜீனியஸ் சொல்ராரு நீங்க ஒரு விடைதான் தரணும்னு சொல்லி....."

ப.கு.ரா :- டேய் என்னடா பெரிய பொடலங்கா ஜீனியஸ்ஸு? மூணாம் வகுப்பில பதிம்மூணு தடவ உக்காந்துஇக்காந்து படிச்சவன் எல்லாம் ஜீனியஸ்ஸா? அப்போ அப்துல் கலாம் , ஐன்ஸ்டீன், தோமஸ் அல்வா எடிசன் எல்லாம் யாருடா? நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு இருக்கேன் , நீயும் தான் , அந்த சூரியா பயலும் தான் ஆ, ஊன்னா மிஸ்டர் ஜீனியஸ் அக்கா பொண்ணு சமஞ்சிருச்சான்னு பாத்து சொல்லுங்க , மிஸ்டர் ஜீனியஸ் ஆட்டுக்கால் வெந்திடுச்சான்னு பாத்துசொல்லுங்க ,மிஸ்டர் ஜீன்யஸ் அய்யனார் கோயில்ல கூழ் ஊத்துராய்ங்களான்னு பாத்து சொல்லுங்க, மிஸ்டர் ஜீனியஸ் பரிமளா பக்கத்து வீட்டுக்காரன் கூட ஓடி போய்ட்டாளான்னு பத்து சொல்லுங்கன்னு அளப்பரைய குடுக்கிறீங்கடா... அந்த நாயி மூஞ்சிய எங்கயும் காட்டமாட்டேங்கிறாய்ங்களே... இன்னிக்கு எனக்கு தெரிஞ்சாகணும்டா அந்த பேரிக்கா மண்டயன் யாருன்னு? அவன் நடு மண்டைல நச்சுன்னு ஒண்ணு போடாம நான் இங்கிருந்து நவர மாட்டன்டா...

"கோவப் படாதிங்க மிஸ்டர் ப.கு.ரா , நிகழ்ச்சி முடிவில அந்த ஜீனியஸ்ஸ கட்டாயம் கண்ணில காட்டுவோம். அப்போ வேணும்னா நீங்க அவர காட்டு காட்டுன்னு காட்டிக்கலாம், இப்போ உங்களோட முடிவு என்னான்னு சொல்லுங்க. பிழையா சொன்னா பஸ்ஸுக்கு கூட காசு இல்லாம இருக்கிறது பூரா உருவிகிட்டு தான் அனுப்புவம்....

ப.கு ரா :- "டேய் நான் சிலோன்ல இருக்கிறன்டா, கோடி ரூவா தாறாய்ங்க என்னதும் நான் "எமு" கோழி வித்த காச பூரா போட்டு "கிங்க் பிஷர்"ல பர்ஸ்ட் கிளாஸ்ல வந்தேன் பாரு எனக்கு இதுவு வேணு இன்னமும் வேணு...

"இட்ஸ் ஓக்கே சார், கவல படாதிங்க , நம்ம பிளாக்கு ஓனர் உங்கள பத்திரம அனுப்புறதுக்கு கள்ள தோணி ஏற்பாடு பண்ணியிருக்கார்....

ப.கு.ரா :- யாரு அவனா? கடல முட்டாய்க்கு வழியில்லாத நாஉய் அது , அது கள்ள தோணிக்கு ஏற்பாடு பண்ணுதா? இந்த கேள்வி பாஸுடா...

"ஓக்கே..... மிஸ்டர் ஜீனியஸ் , நம்ம ப.கு ரா இந்த கேள்விக்கு தன்னால விடை சொல்ல முடியாதுங்கிறதால அடுத்த கேள்விக்கு போயிடலாம்....." மிஸ்டர் ப.கு.ரா உங்களுக்கான இரண்டாவது கேள்வி...

2.தனது சினிமா வாழ்வின் ஆரம்பத்தில் கஸ்தூரி   ராஜா என்றொரு அப்பாவும் , செல்வராகவன் என்றொரு அண்ணாவும் இல்லாமல் போயிருந்தால், அல்லது திருMஅனத்துக்கு பின்னர்மொக்கை படங்களை திரைக்கு அனுப்பிய போதெல்லாம் "சுப்பர் ஸ்டார் மருமகன்" என்ற அந்தஸ்து இல்லாமல் இருந்திருந்தால் , தலைவர் தனூச் பின்வரும் தொழில்களில் எந்த தொழில் செய்திருப்பார்?

A)ராயபுரம் பஸ் ஸ்டாண்டில் ராப்பிச்சை எடுத்திருப்பார்

B)மாம்பலத்தில் மாமா வேலை பார்த்திருப்பார்

C)அண்ணா நகரில் அண்டங்காக்கா புரியாணி விற்றிருப்பார்

D)நமக்கல் காப்ரேஷன் வண்டியில் நாய் புடித்திருப்பார்

பாங்........ 

"ஓ! மை காட் , துரதிஷ்ட வசமாக இன்றைக்கான நேரம் முடிவுக்கு வருகிறது"

ப.கு.ரா :- ( தனக்குள் ) அது என்னோட அதிஷ்டம்டா..... 

"இரண்டாவது கேள்வி கேட்கப்ப்ட்டிருக்கிறது பிரபல பதிவர் பன்னிக்குட்டி ராமசாமியிடம், அவர் விடை சொல்வதற்கு முன்னமே இரவு சோத்துக்கு பெல் அடித்துவிட்டதால் அரக்கப் பரக்க ஓட வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். காரணம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அந்த மூன்று பதிவர்களும் பானைக்குள் விழுந்து அத்தனை பழைய சோத்தஒயும் பதம் பார்த்துவிடும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் இன்றைய நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வருகின்றோம். பதிவுலகின் பிதாமகர் ப.கு.ரா ஆடிக்கொண்டு இருக்கிறார் அவரது சுவாரசியாமான பதில்கள் நாளைக்கு வர இருக்கிறது. அது போக பதிவுலகின் சேது JZ , பதிவுலகின் நந்தா குமரன் , பதிவுலகின் ராமராஜன் டாக்டர் .டூலிட்டில்ஆகியோர் தொடர்ந்து நாளைக்கு ஆட இருக்கிறார்கள். இன்னமும் தலைவன் தனூச் பற்றிய எட்டு கேள்விகல் மீதமிருகின்றன, ஆகவே தொடர்ந்து இணைந்திருங்கள் , நாளை சந்திக்கலாம்..... இது உங்கள் அபிமான "முடிஞா ஜெயிச்சு பாரு ஒரு கோடி".....

டிஸ்கி:- பதிவு நீண்டு விட்டதால் பிரேக் விட்டுள்ளோம், பகுதி இரண்டு நாளை....

பாகம் இரண்டு படிக்க

6 comments:

  1. ரெண்டு வாட்டி வாசிச்சேன் பாஸ்! கலக்ஸ்!!!
    தனுஷை வச்சு பதிவெழுதுறேன்னு இந்த மொக்கையைத் தான் ரெடி பண்ணிக்கிட்டிருந்தியா..

    உனக்கு "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" புடிக்கலை.. "தனுஷ்" புடிக்கலை.. நாங்க இங்க நல்லா இருக்கதும் புடிக்கலை.. அதுனால ஒட்டுமெத்தமா பழிவாங்குற!!

    * அது என்னடா எனக்கு மட்டும் கைதட்டல் ரெக்கார்டிங்கா வருது???
    * கடைசியில காட்டப்போற அந்த "மிஸ்டர். ஜீனியசு" நீதானே!!

    ReplyDelete
    Replies
    1. //////உனக்கு "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" புடிக்கலை.. "தனுஷ்" புடிக்கலை.. நாங்க இங்க நல்லா இருக்கதும் புடிக்கலை.. அதுனால ஒட்டுமெத்தமா பழிவாங்குற!!//////

      நான் மறுபடி மறுபடி சொல்றேன் எனக்கும் தனுசுக்கும் எந்த கோவமும் கிடையாது. என்ன நண்பா நான் உன்னய பெரிய பதிவர் அப்டீன்னு மதிச்சு என்னோட நிகழ்ச்சிக்கு எல்லாம் கூப்பிட்டு இருக்கேன், இப்பிடி சொல்லிப்புட்டியே!

      /////அது என்னடா எனக்கு மட்டும் கைதட்டல் ரெக்கார்டிங்கா வருது???////

      யாருமே தட்டல , அதுதான் நண்பன் ஃபீல் பண்ணுவானேன்னு நானா யோசிச்சு பண்ணினது!

      //////கடைசியில காட்டப்போற அந்த "மிஸ்டர். ஜீனியசு" நீதானே!////

      அது சஸ்பென்ஸ் மச்சி!

      Delete
  2. //அப்புறம் குவாட்டரும் கோழி புரியாணியும் தாரேன்னதும் அத்தனையும் அரங்கில் ஆஜர்!//

    u the mistake - im a teetotaler and விஜிடேரியன் ...

    ReplyDelete
    Replies
    1. மாட்டுக்கு குடுக்கிற சீம சாரயத்த ரகசியமா அடிச்சுப்புட்டு , டீடோட்லர்ன்னு அள்ளி வுடுறியே டாக்டரே!

      Delete
  3. பதிவு தனுசை கிண்டலடிக்கவா? இல்லை ப.கு.ரா ஐ கிண்டலடிக்கவா? :P

    ReplyDelete
    Replies
    1. ண்ணா.... ப.கு.ரா வை யாராச்சும் கலாய்ப்பாங்களாண்ணா... அவரு நம்மள கலாச்சாத்தான் உண்டு, இப்புடி பொரளிய கெளப்பிவிட்டு எனக்கு ப.கு.ரா வுக்கு இடையில ஒரு பதிவு போரை கெளப்பி வுட்டுடுவீக போல இருக்கே...

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...