உதைபந்து

Monday, May 20, 2013

தம்பி ! சரக்கு இல்லையா ? கடைய மூடு... கண்டதையும் விக்காத!!!

இங்கே யாரையும் யாருடனும் ஒப்பிடவில்லை, இந்த பதிவின் காரணம் என்னவென்றால் ஏதோ ஒரு காரணத்துக்காக தமிழரின் ஒரு சாராரால் ரசிக்கப்பட தொடங்கியிருக்கும் கலைஞன் இன்னும் சில வேண்டாதவைகள் களைய வேண்டியவனாய் இருக்கிறான் என்பதால் ஆகும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சக்கரை" அப்படியென்று நம்மவர்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதாவது சக்கரை ( சீனி ) ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூவை சக்கரை என்று கொண்டாடுவார்களாம் மக்கள். தகுதியான ஒன்று இல்லாதவிடத்து , அதனை போன்ற ஆனால் முழுத்தகுதியும் இல்லாத ஒன்று அந்த இடத்தை பிடித்துக்கொள்ளும் என்பது அதன் பொருள். ஆனால் இந்த பழமொழியை கலைஞர்கள் தொடர்பில் பிரதியிடுவது தொடர்பில் எனக்கு ஐயப்பாடு இருந்து கொண்டே இருந்தது காரணம். காரணம் ஒவ்வொரு கலைஞனும் தனக்கென்று ஒரு தனியிடம் , தனி திறமையை கொண்டிருக்கிறான். இதனால் தான் நான் யாரையும் சக்கரையாகவோ , இலுப்பம்பூவாகவோ பிரதியிட்டு பார்ப்பது கிடையாது. ஆனால் என்னை அறியாமல் அப்படி பிரதியிட வேண்டி வந்தது சமீபத்தில்.


விடுமுறைக்காக ஐரோப்பாவில் இருந்து தாயகம் வந்திருந்தாள் என் உறவுக்கார பெண்ணொருத்தி. எல்லோரும் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தோம் , விஜய் டி.வியில் என்ன விஷேஷம் என்று மறந்து போனேன், அன்று சிவகார்திகேயன் ஸ்பெஷல் போய்க்கொண்டு இருந்தது. விஜய் டி.வி நான் பார்ப்பது சிவகார்த்திகேயனுக்காக மட்டுமே, தமிழ் நகைச்சுவை விரும்பிகளில் சிவகார்த்திகேயனை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அப்படியான அந்த கலைஞனின் தீவிர விசிறியான நான், விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் உறவுக்கார பெண் தனது தொலைபேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை காட்டினாள். ஒரு வாட்ட சாட்டமான இளைஞனுடன் இவள் சிரித்துக்கொண்டு பக்கத்தில் நிற்கிறாள். இன்னும் சில பதின்ப வயது பெண்கள் அந்த இளைஞனுடன் புகைப்படம் எடுக்க முண்டியடிப்பது தெரிகிறது. சும்மா சொல்லக்கூடாது , அந்த இளைஞன் அந்த முண்டியடிப்புக்கு பெறுமதியானவனாகவே இருந்தான். ஜெல் வைத்து முன்பக்கம் மழித்தும் , பின்புறம் ஸ்பைஸ் விட்ட தலைமுடியுமாக ஒரு ஐரோப்பிய தமிழனுக்குரிய அத்தனை களையும் அவன் முகத்தில் தெரிந்தது.



யாரடி இவன்? உன் பாய்ஃபிரண்டா ?

"இவர தெரியாதா?"

......


"இவர தெரியாதா?"

......

"என்ன உண்மையாவே இவர தெரியாதா?

அடியே .. தெரிஞ்சா சொல்ல மாட்டனா ? யாரு இது சொல்லித்தொலை..."

"இவரும் இவர் மாதிரி தான் செமையா காமடி பண்ணுவார்" புகைப்படத்தில் உள்ளவனை காட்டிவிட்டு சிவகார்த்திகேயனை காட்டுகிறாள்.

என்னடா இது ? சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு ஸ்டான்ட் அப் காமடியன் தமிழிலா? அப்படி இருந்தாலும் அவன் எப்படி பிரபலமாகாமல் போனான்? நான் எப்படி அவனை மிஸ் பண்ணினேன். சரி யூ டியூப்பை ஒரு ரவுண்டு வந்துடலாம்.

"இவர் பெயர் என்ன ?"

"குட்டி ஹரி"

அப்போது தான் அந்த பெயரை கேள்விப்படுகிறேன். ஆனாலும் தேடி அவர் காமடிகளை பார்த்துவிட வேண்டுமென்று லேப் டாப்பை  உயிர்ப்பித்து தேட ஆரம்பித்தேன்.

குட்டி ஹரி , இங்கிலாந்து வாழ் ஒரு இலங்கை தமிழர் , தனது ஸ்டாண்ட் அப் காமடிகளால் (???) ஐரோப்பிய தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஒரு பிரபலம். இது தான் இவரை பற்றிய அடிப்படையான பின்னணி தகவல்.

சரி இவரது ஸ்டாண்ட் அப் காமடிகளை கேட்கலாம் என்று யூ டியூப்பில் தேடினேன். இன்னமும் இவரது காமடிக்காகதேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.

நான் விமர்சனம் பண்ணுவதற்கு முன்னர் குட்டி ஹரி தொடர்பில் நான் வியந்த சில விடயங்களை முன்வைத்துவிடுகிறேன்.

தமிழ் மக்களிடையே பொழுதுபோக்கு என்றாலே , அது எந்த நாட்டு தமிழராகட்டும் உடனே ஞாபகம் வருவதும் , ஆக்கிரமிப்பு செய்வதும் என்னவோ தமிழ்நாட்டின் நடிகர்களும் , தமிழ் நாட்டு கலைஞர்களும் தான். தமிழன் வாழும் எந்த நாட்டிலேனும் கலை நிகழ்வு என்றாலே உடனே தமிழ் நாட்டிலிருந்து கலைஞர்களை இறக்குமதி செய்துவிடுவார்கள். அப்படியாகப்பட்ட ஒரு சூழ்நிலையில் , கலை உலகில் வேரூன்றி கிட்டத்தட்ட போட்டியே இல்லை என்று தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சும் தமிழ் நாட்டு கலைஞர்களில் போட்டிச்சந்தையின் மத்தியில் , உங்களது சொந்த முயற்சியால் இவ்வளவு தூரம் ஐரோப்பிய தமிழர்களிடத்தில் பிரபலமாகி வேரூன்றி விட்ட உங்களது முயற்சி பாராட்டுக்குரியது.

அத்தோடு இப்போதெல்லாம் மேடையில் பேச ஆரம்பித்தாலோ, நகைச்சுவையாக ஏதும் எழுத ஆரம்பித்தாலோ இந்திய தமிழ் மணம் எமது பேச்சிலும் , எழுத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடுவது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கின்றது. தமிழ்நாட்டின் திரைப்படங்களினதும், தொலைக்காட்சிகளினதும் ஆதிக்கத்தால் அப்படி ஆகியிருக்கின்றது. இதே ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும் நீங்கள் இலங்கை தமிழிலே உங்கள் நிகழ்ச்சிகளை நடாத்துவது , தனித்துவமானதும் சிறப்பானதுமாகும்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஆங்கில பாடலின் காப்பி, அது இது என்று எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் ஐரோப்பிய இளைய சமுதாயத்தை கவர்ந்து விட்ட உங்களது வடை பாடலும் பாராட்டுக்கு உரியது.



இப்போது .....

அன்றொருநாள் உங்கள் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பார்த்து விட்டு கீழே பின்னூட்டங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில இளம்பெண்கள் உங்களை திருமணம் செய்ய ஆசை என்று கூட எழுதியிருந்தார்கள். ஐரொப்பிய தமிழர்களிடமிருந்து ஆகா, ஓகோ என்று பின்னூட்டங்கள் குவிந்து கிடந்தன. இவ்வாறான ஒரு புகழுக்குரிய நிகழ்ச்சிகளை தான் நீங்கள் வழங்குகிறீர்களா?


இதோ இப்போது இதை எழுதும் எனக்கு நீங்கள் புதிது, நீங்கள் எந்தளவு பிரபலம் என்று கூட தெரியாது, இதை படிக்கும் பலருக்கு உங்கள் பெயர் இப்போதுதான் கேள்விப்படும் ஒன்றாக இருக்கலாம். இனிமேல் தான் அவர்கள் யூடியூப்பில் உங்களை தேடவே ஆரம்பிப்பார்கள் என நினைக்கின்றேன். காரணம் இலங்கை மற்றும் இந்திய தமிழர்களில் 99 விழுக்காடு மக்களுக்கு உங்களை யார் என்றே தெரியாது. இதை எழுதும் நேரத்தில் பிரபலமான கோபிநாத்தை சொறிந்து ஏதாவது பதிவு போட்டு ஹிட்ஸ் எடுக்க எனக்கு தெரியாமல் இல்லை. இருந்தாலும் இந்த பதிவை நான் எழுதுவதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.


முதல் காரணம் உங்களது நிகழ்ச்சிகளின் போது ஏன் அடிக்கடி "அரோகரா " " அரோகரா" என்று கோஷம் போடுகிறீர்கள்? நான் மதம் சார்பில்லாதவன், ஆனாலும் நான் அறிய "அரோகரா" என்பது கிறிஸ்தவர்களின் "அல்லேலூயா" போலவும் முஸ்லிம்களின் "அல்லஹு அக்பர்" போலவும் ஒரு காத்திரமான வார்த்தையாக இருக்கின்றது. அது எப்போது ஒரு கேளிக்கையான வார்த்தையாகிப்போனது உங்களுக்கு? அதுவும் நீங்கள் அந்த வார்த்தையை பாவிக்கும்  இடங்களை எப்போதாவது கவனித்தது உண்டா? மலத்தை பற்றியோ, கள்ளத்தொடர்பை பற்றியோ  ஏதாவது கதைத்துவிட்டு , மக்கள் சிரிக்கும் போது வலு சந்தோசமாய் "அரோகரா" சொல்கிறீர்கள், அருவருப்பாய் இருக்கிறது.


அடுத்து உங்களது நகைச்சுவைகளில் ( இதுவரை எனக்கு சிரிப்பே வரவில்லை என்பது வேறு கதை) பெண்களை ஏன் அவ்வளவு தரக்குறைவாக சித்தரிக்கிறீர்கள்? எதைச்சொன்னாலும் பார்வையாளன் அசட்டுத்தனமாய் சிரிக்கிறான் என்பதற்காக பெண்கள் தொடர்பான உங்களது வார்த்தை பிரயோகங்கள் இப்படி எல்லை மீறுதல் கூடாது ஹரி! பெண்களை கொச்சைப்படுத்துவது ஒன்றும் நகைச்சுவை கிடையாது. பெண்களை தொடர்புபடுத்தி நகைச்சுவைகள் வருகின்றன தான் இல்லை என்று சொல்லவில்லை. அவை பூடகமாகவும் , பெண்களாலும் ரசிக்க கூடியனவாய் இருத்தல் அவசியம் ( உதாரணம் : சிவகார்த்திகேயன்)ஆனால் உங்களது நகைச்சுவைகள் (???) பச்சையாக கொச்சையாக உள்ளது.


மேலே இரண்டு பந்திகளிலும் நான் சொன்னதை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம் ஹரி. அதுவே அனைவருக்கும் நல்லது. அப்புறம் உங்களது நிகழ்ச்சி தொடர்பில் சில கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன். அவற்றை நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. காரணம் நீங்கள் இப்படி செய்வதால் தான் என்னமோ மக்கள் உங்களை ரசிக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் கீழ் வரும் கருத்துக்களை கவனத்தில் கொள்ளாதீர்கள். ஆனால் கவனத்தில் கொண்டீர்களாக இருந்தால் உங்களால் ஐரோப்பிய தமிழர்களை மட்டுமல்ல அனைத்து தமிழர்களையும் சிரிக்க வைக்கமுடியும் என்று நம்புகிறேன்.



 இந்திய தமிழ் தவிர்த்து இலங்கை தமிழில் நிகழ்ச்சிகளை தனித்துவமாக செய்ய நினைக்கும் நீங்கள் எதற்காக அமேரிக்க ஸ்டாண்ட் அப் காமடியன் "பீட்டர் ரஸலின்" மேனரிஸங்களையும் , அங்க மொழியையும் காப்பி அடிக்கிறீர்கள்? ஆனாலும் அது கூட ஒழுங்காக இல்லை.... நீங்கள் சொல்லுகின்ற கதைகளுக்கும் உங்களது உடல் மொழிக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கின்றது. சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் உட்காருகிறீர்கள், நெளிகிறீர்கள், எதற்காக? சில வேளைகளில் உங்களது உடல் அசைவுகள் சிவாஜி கணேசன் பாடலுக்கு வாயசைப்பது போன்ற உணர்வை தருகிறது. ஒவர் ஆக்க்ஷன்!! அப்புறம் திடீரென்று ஏன் அப்படி அடித்தொண்டையால் கத்துகிறீர்கள்? கவனித்து பார்த்தீர்களா? உங்களது சமீபத்தைய நிகழ்ச்சிகளின் போது நீங்கள் அப்படிக்கத்தும் போது அங்கு கூடியிருந்த யாருமே சிரிக்கவில்லை. சில செருமல்களை மட்டுமே கேட்க நேர்ந்தது.

மலம், குசு, கள்ளத்தொடர்பு, உடலுறவு இவை இல்லாத பேச்சுக்களை எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? இந்த விடயங்களை நாசூக்காக ஓரிரு தடவை சொன்னால் நகைச்சுவையாக எடுபடும். ஆனால் அதுவே வாடிக்கை என்றால் அதுவே அலட்டலாக , கவிச்சியாக போய் விடும். நீங்கள் ஏன் நல்ல நகைச்சுவை துணுக்குகளை தேர்ந்தெடுத்து அதை உங்கள் பாணியில் சொல்லக்கூடாது? ஏன் சொல்கிறேன் என்றால் சில மேடைகளில் அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் , சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் , நீங்கள் பேச வந்தது தவிர்த்து வேறேதோ எல்லாம் கதைக்க  ஆரம்பித்து  விடுகிறீர்கள். நீங்கள் எது சொன்னாலும் மக்கள் சிரிப்பார்கள் என்ற எண்ணத்தாலா?

அப்புறம் கமலா அக்கா என்று நீங்கள் சொல்லும் காமடிகள் (????) சொறிஞ்சி சொறிஞ்சி உடம்பு புண்ணாகிப் போச்சு ஹர்..... முடியல. நிகழ்ச்சிக்கு முன்னர் நல்ல நகைச்சுவை  துணுக்குகளை படியுங்கள், ஆயத்தமாகுங்கள் நிச்சயம் இதை விட இன்னமும் சாதிக்கலாம்.

நீங்கள் சொல்லும் அந்த அருவருப்பான உதாரணங்களை தவிர்த்துவிட்டு பாருங்கள், கோர்வை இல்லாத பேச்சு, பேச எடுத்துக்கொண்டதற்கும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கும் முடிச்சே இல்லாத நடை, அடுத்தது என்ன சொல்ல வேண்டும் என்ற பதட்டம் , இப்படியாக ஒரு "ஸ்டாண்ட் அப்" காமடியனாக வருவதற்கு கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கிறீர்கள்.

ஏன்டா நாயே இதை என்னிடம் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா? நான் எப்படி நிகழ்ச்சி செய்தாலும் உனக்கென்ன என்கிறீர்களா? எப்படியோ ஐரோப்பிய பிரபலமாகி விட்டீர்கள். இனிமேல் உங்களது நடவடிக்கைகள் யாருக்கும் பிழையான முன்னுதாரணமாகி விடக்கூடாது. உங்களது நிகழ்ச்சியை பார்த்து சிரிக்கும் நாளில் நான் சிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துவேன். அது வரையில்  சக நண்பனின் வார்த்தைகளாய் இதனை எடுத்துக்கொள்ளவும்.

உங்களுடனான எனது பஞ்சாயத்து முடிந்தது, இப்போது எனது உறவுக்கார பெண்ணை தேடிக்கொண்டு இருக்கிறேன்,

அடியேய்.. சிவகார்த்திகேயன பாத்திருக்கியா இல்லையா நீயி மொதல்ல?”







10 comments:

  1. ஹிஹி.... :)


    இவரோட கொஞ்ச வீடியோ நானும் பாத்திருக்கேன்..முக்கியமா அந்த வடை...
    இப்போ தான் முழுசா கேள்விப்படுறேன்!

    அண்ணன் ஹாரி கேட்டுகோங்க.. ப்ரீ அட்வைஸ்..பிடிச்சா எடுத்துகோங்க..இல்லைனா உங்க இஷ்டம்!

    ReplyDelete
    Replies
    1. அட்வைஸ் பண்ணுறன் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் ஹரி.. ஏதோ பார்வையாளனாய் எனது கருத்தை சொன்னேன் என்று எடுத்துக்கொண்டாலே போதும்.

      Delete
  2. அட வித்தியாசமான ஆட்டிக்கள் ஒண்ணு.. தல இத பாத்துட்டீங்களான்னு தெரியல..
    http://www.youtube.com/watch?v=ftdXOKX_K68

    ReplyDelete
    Replies
    1. அத பாத்தேன் தல... ஆமா எப்போ வந்தீங்க? உங்க பிளாக் போயி பாத்தேன், புதுசா எதுவும் சிக்கலியே...

      Delete
    2. நான் எழுதி ரொம்ப நாள் ஆவுதுதான் தல (உலக மக்கள் நன்மைக்காக..). ஆனூலும் பிளாக்கருக்கு வந்துிட்டேதான் இருக்கேன். உன் சமீபத்திய போஸ்ட்கள் எதுவும் என் டேஷ்போர்டுல அப்டேட் ஆகவேயில்லை.. நேத்து திடீர்னு "கோடி கொடுத்தேனும் கோமகனைக் கொண்டுவா" அப்டேட் ஆயி காட்டிச்சு.. வந்து பார்த்தா 3 போஸ்டு போட்டுக்கே :)

      Delete
    3. ஆமா... தல கொஞ்ச நாளா பிளாக் பக்கம் வரலங்கிறதுக்காக , நான் ஒரு பலஸ்தீன் பொண்ணுகூட ஓடிப்போயிடேன்னு ஃபேஸ்புக்ல உள்ள நம்ம பயலுவ எல்லாம் பொரளிய கெளப்பி விட்டுட்டானுக. அது தான் அது பொய்யின்னு நிரூபிக்க மறுக்கா எழுத வேண்டியதா போச்சி...

      Delete
  3. சகிக்கல சிவகார்த்திகேயன் எங்க இவரு எங்க
    உங்கள் உறவுக்கார பெண்ணை நாங்களும் தேடுறோம்

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்,.... விட்டிருங்க ஏதோ சின்னப்பொண்ணு தெரியாம சொல்லிடிச்சி...

      Delete
  4. குட்டி ஹரியா ! உவாக் ! இதை எல்லாம் காமெடி என சொன்னால்.. முடியல ! கனடாவின் ரசன் பீட்டர்ஸ் செய்வதை தமிழில் செய்ய முயன்றிருப்பார், ஆனால் கேவலமாக இருக்கும் . சிவாவோடு குட்டி ஹரியை ஒப்பிடவே முடியாது... ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்கள் இப்படித் தான் எதாவது கேலிக்கூத்தாக செய்து கொண்டிருப்பார்கள். இதுவே பரவாயில்லை அங்கிருந்தது வரும் பல தமிழ் ராப் பாடல்கள், சில குறும்படங்கள் மிடியல !!! சொல்லும் போதே ... !

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ் இந்த "ரப் பாடல்கள்" , "குறும்படங்கள் " விடயத்தில் நொந்தவர்கள் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனாலும் சில நல்ல படைப்புக்களையும் ஐரோப்பிய தமிழர்கள் வெளியிடத்தான் செய்கிறார்கள். அப்புறம் குட்டி ஹரி... நீங்க இன்னும் வளரணும் பாஸ்....

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...