உதைபந்து

Wednesday, May 15, 2013

ஃபேஸ்புக்கில் நான் காணும் சைக்கோக்கள்!!




மார்க்கு மர்க்குன்னு ஒருத்தன் சும்மா இருக்க முடியாம இந்த ஃபேஸ்புக்கை கண்டுபிடிச்சாலும் பிடிச்சான் ஆளாளுக்கு விஞ்ஞானிகளாகவும் , எழுத்தாள பெருமக்களாகவும் , புலிட்சர் அவார்டுக்கே சவால் விடுற புகைப்பட கலைஞர்களாகவும் , காதல் மன்னர்களாகவும் , சமூக ஆர்வலர்களாகவும் , சமூக விரோதிகளாகவும் தினம் தினம் வலம் வந்துகொண்டே இருக்கிறார்கள்போரடிக்கும் நேரத்தில் எல்லாம் ஃபேஸ்புக்கை தொறக்கும் போது இந்த மாதிரி சில சைக்கோ கொலைகாரர்களால் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் ரோல் பண்ணிக்கொண்டு போக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விடுவதுண்டு.

ஆனாலும் ஃபேஸ்புக் புண்ணியத்தில் வெளி உலகுக்கு தெரியவந்த சில திறமையாவனர்களும் இல்லாமல் இல்லை , அவர்களை பத்தி அடுத்த பதிவில் பேசலாம். இந்த பதிவில் ஃபேஸ்புக்கில் இருந்துகொண்டு அழிச்சாட்டியம் பண்ணும் சில சுவாரசியமான வியாதிக்காரர்களை பார்க்கலாம்.

1. பெண்கள் ஸ்டேடஸ் லைக்கோ ஃபோமியா :- இந்த வகையான சைக்கோக்களை பத்தி பதிவு போடாதவர்களோ, ஸ்டேடஸ் போடாதவர்களோ இருக்க முடியாது என்ற போதிலும் , வியாதி என்று வந்த பின்னர் இவர்களை உள்ளடக்காமல் போக முடியாது. நம்மாளு எவ்வளவோ தேடி , எங்கெல்லாமோ படிச்சு , அல்லது ரொம்பவும் ஃபீல் பண்ணி லெந்தியா ஒரு ஸ்டேடஸ் போட்டிருப்பான். ஆனா இவனுக அத்த கண்டுக்கவே மாட்டானுக, ஆனா ஒரு பொண்டு ஒரு ஸ்மைலிய ஸ்டேடஸா போட்டா கூட அதுக்கு இவனுகளாவே ஒரு அர்த்தம் கண்டு பிடிச்சு லெந்தியா ஒரு வெளக்க கமன்டு போட்டுட்டு போவானுக. "எலேய் .... இந்த ஸ்டேடசுக்கு  இதுவா அர்த்தம்? " அப்டீன்னு அந்த பொண்ணே தெகச்சு போயி நிக்கிற அளவுக்கு இருக்கும் இவனுகளோட வெளக்கம்!! இந்த வியாதி அப்பப்போ எனக்கும்  வந்து போறதுன்னு டாக்டர். விஜய் கண்டு பிடிச்சு எனக்கு சொல்லியிருக்கார்.


2. கண்டதும் போட்டு கழுத்தறுப்போ ஃபோபியா :- இவர்களோடு ஃபிரண்டாக இருந்தீர்களானால் , ஃபேஸ்புக்கை தொறக்கும் போது ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு இவர்களது ஸ்டேடஸ் தான் பரந்து விரிந்து பப்பரப்பேன்னு கெடக்கும். நமக்கு பிரோசனமானத தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ள டங்கு வாரு அந்து போயிரும் இல்லன்னா கரண்டு போயிரும். இவனுக போடுற ஸ்டேடஸ் பூராவும் கடி சொறி சிரங்கு வந்தாப்ல வரட்டு வரட்டு சொறிய வைக்குற ரேஞ்சில இருக்கும். கவிதைன்ன பேர்ல இவனே போட்டோ ஷொப்ல எதுவாச்சும் கிறுக்கினது, மரம், மாடு , பூ, நெருப்புக்கு நடுவுல ரத்தம் ஒழுகும் இதயம் ( லவ்வுன்னு மறக்காம எங்கினயாச்சும் எழுதி இருக்கும்) , பொல பொலன்னு ரத்த கண்ணீரா ஓடுற ஒரு ஒத்த கண்ணு அதுக்கு மேலையோ கீழையோ "உறங்காத விழிகள்"ன்னு ஒரு பஞ்ச், பாலைவனம் அதுல போலார் கரடி  பக்கத்துல கடல் கடலுக்கு நடுவுல மாமரம் மரத்துல டைனோசர் டைனோசர் முதுகு மேல ஒரு டுகடி பைக்கு பைக்கு மேல நம்மாளு , இப்படியாக போட்டோஷொப்பை கண்டுபிடிச்சவன் தும்பப்பூவுல தூக்கு மாட்டி சாவுற அளவுக்கு ஒரு நரகாம்சமான கிரியேட்டிவிட்டி படங்கள்ன்னு பப்ளிசிட்டியில் பவர் ஸ்டாருக்கே சவால் விடுவார்கள். ஆனாலும் பெரும்பாலும் இவர்கள் அப்பிராணிகளாக இருப்பார்கள். இவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டால் நமக்கு அங்கப்பழுது ஏதும் வராது .சில வாரங்களுக்கு தலை சுற்றி வாந்தி வரும் அப்புறம் அதுவே பழகிரும்.

  
3. புளூகிராஸ் புஸ்கா ஃபோபியா :- இந்த வியாதி ஃபேஸ்புக்கில் பெரும்பாலும் பெண்களையே தாக்குவதாக டாக்டர் . டூலிட்டில் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிடுகின்றார். ஊர்வன, நடப்பன , பறப்பன, நிற்பன, தொங்குவன , கடிப்பன , நக்குவன , நீந்துவன என்று சகல வன ஜீவராசிகள் போட்டோக்களையும் போட்டு "கியூட், சுவீட், மிஸ் யூ , லைக் இட் " அப்டீன்னு ஒரு ஆசிரியர் தலையங்கமும் வரைந்து ஸ்டேடஸ் போட்டு வைப்பார்கள். நம்ம பயலுகளும் விழுந்தடிச்சு ஓடிப்போயி ஜொள் ஒழுக லைக் பண்ணி வைப்பதால் , தாங்கள் ஏதோ மூன்றாம் உலக யுத்தத்தை தவிர்த்துக்கொண்டிருக்கும் ஒரு மட்டற்ற பணியை செய்துகொண்டிருப்பதாக நினைத்து நாளுக்கு நானூறு பூச்சி புழு படமாய் போட்டு கொல்வார்கள் இந்த வியாதிக்காரர்கள்.



4. அகில ஒலக ஸ்போட்ஸ் ஸ்டார் மேனியா :- இந்த வகை வியாதிக்காரர்களால் நான் மிகப்பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதுண்டு . வந்து குவிந்திருக்கும் நோர்டிபிகேஷனை ஆவலோடு திறந்தால் அதில் 99 விழுக்காடு இவர்கள் என்னை விளையாட அழைத்ததாகத்தான் இருக்கும். வெவசாயம், மாடு வளர்ப்பு , கட்டிடத்தில் கொத்தனார் வேலை, ஸூவில் கொரங்கு சாணி அள்ளும் வேலை , கஃபேயில் வெந்நீர் வைக்கும் வேலை, ஜட்டித்திருடனை கண்டுபிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் வேலை என்று வகை வகையாக வேலையை வைத்துக்கொண்டு கமான் கமான் என்று அழைப்பார்கள். "எலேய் ... நெஜமாலுமே கிரவுண்டுன்னு ஒரு வஸ்து இந்த பூமியில இருக்குன்னு ஒங்களுக்கு தெரியுமாடான்னு" கதறி அழ தோன்றும்.


5. ஃபேக் ஐடியோ ஃபோபியா : - இந்த வியாதி பற்றி அநேகமானோருக்கு தெரிந்தே இருக்கும். பெண்கள் பெயரில் ஐடியை உருவாக்கி நண்பர்களை கலாய்க்கவோ அல்லது பிளாக் செய்யப்பட்ட குரூப்பில் நுளையவோன்னு குறைந்தது ஏதேனும் ஒரு காரணத்துக்காக ஃபேக் ஐடியை உருவாக்குவது ஃபேஸ்புக்கில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நியதியாக இருக்கின்றது . ஆனால் இந்த வியாதி தாக்கியோர் காரணமே இல்லாமல் ஃபேக் ஐடி உருவாக்குவார்கள். கேட்டால் பொழுது போகவில்லை , அது தான் "சும்மா ஒரு ஜாலிக்கு" என்பார்கள். கொடுமை என்னவென்றால் ஒரே பெயரில் அவர்கள் உருவாக்கி ஃபிரண்ட் ரிக்குவஸ்ட் அனுப்பிய ஒன்பது புரோஃபைலில் ஒன்றை நாம் அக்சப்ட் பண்ணாவிட்டாலும் , ஏதோ அவர்கள் முறைப்பெண்ணை நாம் முறையே இல்லாமல் தள்ளிக்கொண்டு போய்விட்டதை போல் கோபிப்பார்கள்.


6. ஜொள்ளோ ஜொள்ளோமியா : - இந்த வகை வியாதிகாரர்களிடம் பெண்கள் ஸ்டேடஸ் லைக்கோ ஃபோபியா கட்டாயம் இருக்கும். பெண்களாக பார்த்து ரிக்குவஸ் குடுப்பார்கள், பெண்களுடன் மட்டும் சாட் பண்ணுவார்கள். இவர்கள் ஒன்லைனில் இருக்கும் போது ஒரு "ஹாய்" போட்டு பாருங்கள் ஹும் பதில் வரவே வராது. ஒடனே லாக் அவுட் பண்ணி பெண் பெயரில் உள்ள உங்கள் ஃபேக் ஐடியை திறவுங்கள். மறு கணமே "ஹாய்.. ஹாய்... ஹாய்.. ஹாய்.. ஹாய்.. "ன்னு ஆட்டு விட்டை போல சரமாரியா ஆய்கள்.. சாரி ஹாய்கள் வந்து விழும். அப்புறம் என்ன ??  ஜமாயுங்கள்!!


7. ஆட்டுவிட்டை ஸ்டேடசோமியா :- தும்முறேன் , இருமுறேன், சாப்புடுறேன், கைகழுவுறேன், கால் கழுவுறேன், பல்லு தேய்க்கிறேன் , படுக்கிறேன், குனிகிறேன்ன்னு நிமிடத்துக்கு நான்கு ஸ்டேடஸ் போட்டு கொன்றெடுப்பார்கள். இந்த லட்சணத்தில் தனது ஸ்டேடசை ஏன் "லைக்" பண்ணவில்லை என்று சண்டைக்கு வேறு வருவார்கள். "டேய் நீ குனியுறத நான் லைக் பண்றதுக்கு நீ என்ன காஜல் அகர்வாலா ? கரீனா கபூரா?"


8. நாங்களும் அப்பாட்டாக்கருங்கோ  மேனியா :- நோக்கியா 1100 ஃபோனில் கூட காக்கா ஆயி போகும் படம், பக்டீரியாவும் வைரசும் கில்மா பண்ணும் படம், கொரங்கு பேன் பார்க்கும் படம், பன்னி பழைய சோறு திங்கும் படம்னு ஒரே போட்டாவோ எடுத்து தள்ளி அப்டேட்டுவானுக. கேட்டா "வைல்டு போட்டோ கிராஃப்"ம்பானுக. டிஸ்கவரியும், நஷனல் ஜியோகிராஃபியும் நாசமா போவ.....



9. ஐநா சபையே ஐயகோ ஃபோபியா : - இந்த வியாதி வந்தால் இந்த படத்தை லைக் பண்ணினால் சோமாலியாவில் சோடா ஆறு ஓடும், இந்த படத்தை லைக் பண்ணினால் இந்த பொண்ணுக்கு கான்சர் குணமாகும் , இந்த படத்தை ஷேர் பண்ணினால் ரொம்ப தூரம் நடந்து போகும் இந்த பாட்டி ஃபிரீயா ஷேர் ஆட்டோவில் போகும், இந்த படத்தை லைக் பண்ணினால் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் நல்ல புத்தி வரும் அப்டீன்னு அள்ளி விட தோணும். பாத்து சூதனாமா இருக்கணும்.

மேலே சொன்ன வியாதிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாலியா வியாதிக்காரர்கள். இவர்களின் சங்காத்தம் நம்மை ஒன்றும் பொரட்டி போட்டு விடாது. ஆனால் கீழே சொல்லப்போகும் வியாதிக்காரர்கள் கொஞ்சம் அசந்தால் நம் சோலியை முடித்து விடக்கூடியவர்கள். இவர்களுடனான அதிகளவு சகவாசம் அங்கப்பழுதுக்கு உத்தரவாதம்.


10. சிண்டு முடிதலோ அம்னீசியா : - இந்த வகை வியாதிகள் பெரும்பாலும் ஃபேஸ்புக்கில் உள்ள தமிழ்  என்டெர்டெயின்மென்ட் குருப்புகளையே தாக்குகின்றன. தாங்கள் அதிக ஹிட்ஸ்சுகளை அடைவதற்காக இரண்டு நடிகர்களின் படங்களை போட்டு "ஷோ யுவர் மாஸ், ஹூ இஸ் பெஸ்ட் , ஹு இஸ் மாஸ்" அப்டீன்னு குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். கமன்டுகளில் கொப்பும் குலையுமாக கெட்டவார்த்தைகள் நிறந்து போய் கிடக்கும். அவனவன் வேட்டி அன்ட்ராயர் எல்லாம் அந்தரத்தில் பறந்து போகுமளவுக்கு சண்டை போட்டுக்கிட்டு இருப்பான். அத்தனைக்கும் காரணம் இந்த குரூப்புகள் பண்ணும் வேலை. பின்பு அடுத்த நாள் "நடிகர்களுக்காக சண்டை போடாதீர்கள் " என்று ஒரு காந்திய கருத்தை போட்டு எதுவுமே நடக்காதது போல பம்மிக்கொள்வார்கள்.


11. முற்போக்கு முந்திரிக்கொட்டை மேனியா :-  (இந்த வியாதியை பற்றி  படிக்கும் போது உஙளுக்கு சாரு நிவேதிதாவின் முகம் ஞாபகம் வந்தால் அது தற்செயலானதேன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும்.)
 மேற்சொன்ன அத்தனை வியாதியிலும் படு மோசமான வியாதி இதுதான். முற்போக்குத்தனம் என்ற பெயரில் சமூகத்தில் தீவிரவாதம் செய்பவர்கள். அல்ப பிரபலம் தேடுவதில் இவர்கள் மிகுந்த பிரயாசை உடையவர்களாக இருப்பார்கள். அதற்காக இவர்கள் கையாளும் தந்திரங்கள் மிக மலினமாகவும் அல்பமாகவும்  இருக்கும்.

* உலகே ஒத்துப்போகும் ஒரு இடத்தில் இவர்கள் பிரிவினை காட்டி தனியாக நிற்பார்கள். அனைவருக்கும் பிடித்த ஒரு விடயத்தை குப்பை சாக்கடை என்பார்கள். அதே உலகே காறித்துப்பும் ஒரு விடயத்தை அபாரம் , பிரமாதம் என்று கூறி அல்ப்ப விளம்பரம் தேடிக்கொள்ள ஆசைப்படுவார்கள்.

* மக்கள் மிகவும் சென்சிடிவ்வாக மதிக்கும் அல்லது  நினைக்கும் விடயங்களை மிகவும் கேவலமாக அல்லது அதெல்லாம் தப்பு என்று எழுதுவார்கள். கேட்டால் இது தான் முற்போக்கு தனம் என்பார்கள்.

* கண்ட கண்ட இடத்தில் எல்லாம் கெட்ட வார்த்தை பிரயோகம் தூள் பறக்கும். கேட்டால் திறந்த மனசாமாம். இவர்களது ஸ்டேடஸ்களில் இவர்களுக்கு பிடிக்காத அல்லது பதில் சொல்ல முடியாத கேள்வி ஒன்றை நீங்கள் கேட்டுவிட்டீர்களானால் உங்கள் அம்மாவையும் சகோதரியையும் வார்த்தைகளால் கற்பழித்து விபச்சாரி பட்டம் தந்துவிடுவார்கள்.

* தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரோ , எழுத்தாளரோ , இயக்குனரோ யாராக இருந்தாலும்  அவர்கள் தான் சிறந்தவர்கள் , மற்றவர்கள் என்றால் மட்டம் என்ற மனநிலை எப்போதும் இவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும். மீறி வாதிடப்போனால் தான் கண்டே இராத முயலுக்கு முன்றே முக்கால் கால்கள் என்ற ரீதியில் இருக்கும் இவர்களது வாதம். சொம்பு தூக்கிகளான இவர்களுக்கு தான் சொல்வது மட்டுமே சரி என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். எவ்வளவு தான் நாம் எடுத்து சொன்னாலும் கடைசியில் அவர்கள் சொன்னதே சரி என்பார்கள். தங்களது கருத்து தோற்றுப்போவதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இப்படியானோரின் விடயத்தில் ஒரு லைக்கு மட்டு போட்டு நகர்வதே நமக்கும் , நம் குடும்ப பெண்டிரின் மானத்துக்கும் பாதுகாப்பு.



இது எல்லாவற்றையும் விட ஒரு பெரிய வியாதி இருக்கிறது. அதாவது செய்வதற்கு ஒன்றும் இல்லையென்றால் எல்லாரையும் பார்த்து வியாதிக்காரன் என்று பதிவு போடும் வியாதி. எவன்டா அது ?அந்த வியாதி எனக்கு இருக்குன்னு சொன்னது ? பிச்சி.. பிச்சி...

ஆனாலும் , எப்படி வானவில் ஒரே வர்ணமாய் இருந்தால் அது காலங்களை கடந்த  ரசனைக்கு உரிய வஸ்துவாக இருக்க முடியாதோ அதே போல் தான் இந்த வியாதிகாரர்கள் இல்லாமல் ஃபேஸ்புக் சுவாரசியமானதாகவோ , நிலைப்பு தன்மை கொண்டதாகவோ இருக்கமுடியாது என்பதே நிதர்சனம்.


24 comments:

  1. ஒரு பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து கமெண்டுகிறேன்...இப்போ போட்டா,நீ வாசிச்சியான்னு கேப்பான் பயபுள்ள

    ReplyDelete
  2. @ மைந்தன் சிவா
    என்ன தல பொசுக்குன்னு இப்டி சொல்ட?

    ReplyDelete
  3. Replies
    1. உங்களை போன்ற பிரபல பதிவர் வந்ததே எனது பாக்கியம்!

      Delete
    2. Adada adada annamalai annaanthu paarthaa onnum illa! Super boss

      Delete
    3. பாஸ் நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல.. ஆனா கடேசில பாராட்டி இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. ரொம்ப நன்றிண்ணே...

      Delete
  4. fantastic மச்சி...நீ கலக்கு :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாஸ்..

      Delete
  5. Replies
    1. நன்றி பாஸ் வருகைக்கும் பாராட்டுக்கும்..

      Delete
  6. நீண்ட இடைவேளைக்கு பின்பு வந்து இருக்கும் பிரபல பதிவரை வரவேற்கிறோம்.

    "டேய் நீ குனியுறத நான் லைக் பண்றதுக்கு நீஎன்ன காஜல் அகர்வாலா ? கரீனா கபூரா?"

    ஹாஹா தம்பி சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. பிரபலம் பிரபலம்னு சொலியே சோலிய முடிச்சிருங்கண்ணே....

      கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன், இனிமேலாவது மாசத்துக்கு ரெண்டு பதிவு போட ட்ரை பண்ணுறேன்.

      ///ஹாஹா தம்பி சூப்பர்////

      நீ ரசிகண்ணே...

      Delete
  7. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு போட்டு இருக்கீங்க...வழக்கமான் உங்க ஸ்டைல்ல கலக்கிடீங்க.. :):)

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி வரமுடியுதுல்லண்ணே இப்போ..... வருகைகும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி..

      Delete
  8. பெண்கள் ஸ்டேடஸ் லைக்கோ ஃபோமியா......

    இந்த பேஸ்புக் ஆரம்பிச்சதே அதுக்கு தான். பேஸ்மேட்ச்.காம்னு. மார்க்கு அதுக்காகவே அறிவாளிய எழுதின புரோகிராம்ல வளர்ந்ததுதான் இந்த பேஸ்புக், டேட்டிங் வெப்சைட். ஏதோ இப்ப நாம கொஞ்சமா அத நல்ல விசயத்துக்கு உபயோகப்படுத்துறோம்...

    ReplyDelete
    Replies
    1. "த சோஷியல் நெட்வோர்க்" படம் பார்த்தீர்களா? அதில் நம்ம மார்க்கு பயலோட குறும்பு + கெட்டிக்காரத்தனத்தை புட்டு புட்டு வைத்திருப்பார்கள். எது எப்படியோ இந்த காலத்தில் ஃபேஸ்புக் என்பது ஒரு என்டெர்டெயின்மென்ட் என்பதை தாண்டி நிறைய நல்ல விடயங்களுக்கு பயன்படுவத் என்பது பாராட்டப்பட வேண்டியது.

      Delete
  9. face book ஐ புட்டு புட்டு வச்சாச்சு டுவிட்டர் அடுத்த பதிவா?

    ReplyDelete
    Replies
    1. ஏது டுவிட்டரா? அட போங்க பாஸ்.

      Delete
  10. சொல்லப்படுள்ள வியாதிகள் எல்லாமே சத்தியமா பார்த்தவை தான்.. ஆனா அலசல் படு கலக்கல்...

    உங்க வார்த்தைகள் ஒவ்வொன்றையுமே ரசித்தேன் கிஷோ..
    குறிப்பாக //மரம், மாடு , பூ, நெருப்புக்கு நடுவுல ரத்தம் ஒழுகும் இதயம் ( லவ்வுன்னு மறக்காமஎங்கினயாச்சும் எழுதி இருக்கும்) , பொல பொலன்னு ரத்த கண்ணீரா ஓடுற ஒரு ஒத்த கண்ணுஅதுக்கு மேலையோ கீழையோ "உறங்காத விழிகள்"ன்னு ஒரு பஞ்ச், பாலைவனம் அதுலபோலார் கரடி பக்கத்துல கடல் கடலுக்கு நடுவுல மாமரம் மரத்துல டைனோசர் டைனோசர்முதுகு மேல ஒரு டுகடி பைக்கு பைக்கு மேல நம்மாளு , இப்படியாக போட்டோஷொப்பைகண்டுபிடிச்சவன் தும்பப்பூவுல தூக்கு மாட்டி சாவுற அளவுக்கு ஒரு நரகாம்சமானகிரியேட்டிவிட்டி படங்கள்ன்னு//
    சான்சே இல்லை. வாசிச்சு வாசிச்சு சிரிச்சேன்.

    அந்தப் பயபுள்ளைகள் மட்டும் வாசிச்சா நாளைக்கே Facebook ஐ விட்டு ஓடுங்கள்.. இல்லாட்டி உண்ணாவிரதம் இருந்தே உசிரை விட்டிடுங்கள்


    www.arvloshan.com

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்றவர்களது வருகையே எனக்கு பெரும் வரம் போன்றது. இதில் பாராட்டு வேறா? மிக்க நன்றி அண்ணா..

      Delete
  11. வாவ், சட்டபடி ரைட்டிங்கு ப்ரோ

    ReplyDelete
  12. வாவ், சட்டபடி ரைட்டிங்கு ப்ரோ

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...